முதல் முயற்சியே வெற்றியாம்!! ரவீந்தர் கூறிய மகிழ்ச்சியான செய்தி.. காரணம் மகாலட்சுமி தானாம்..!!
சென்னை: தயாரிப்பாளர் ரவீந்தர் தன்னுடைய திருமணத்திற்கு பிறகு தான் பெற்ற மகிழ்ச்சியை குறித்து சமூக வலைத்தளத்தில் ரசிகர்களோடு பகிர்ந்துள்ளார்.
தன்னுடைய வெற்றிக்கு காரணம் தன்னுடைய காதல் மனைவியான மகாலட்சுமியின் வாழ்த்துக்கள் என்று கூறி இருக்கிறார்.
இதுவரைக்கும் இல்லாத வகையில் முதல் முயற்சியே பாராட்டுகளை பெறும் என்று அவரே நினைத்திருக்க மாட்டார் போல! ! அவ்வளவு சந்தோஷமாக பகிர்ந்து உள்ளார்.
கத்தீரிக்கா.. கத்தீரிக்கா.. குண்டு கத்தீரிக்கா.. கலாய்த்த மகாலட்சுமி.. சயின்ஸ் பாடம் எடுத்த ரவீந்தர்
பிக் பாஸ் ரிவ்யூ
தயாரிப்பாளர் ரவீந்தர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் பெற்ற வெற்றியை குறித்து மகிழ்ச்சியான பதிவினை வெளியிட்டு இருக்கிறார். ரவீந்தர் லிப்ரா ப்ரொடக்ஷன் மூலமாக ஒரு சில திரைப்படங்களை தயாரித்துள்ளார். அந்த வகையில் அவர் திரை பிரபலங்களுக்கு பழக்கமானவர் தான். ஆனாலும் பிக் பாஸ் ரிவ்யூ கொடுத்து ரசிகர்களின் மத்தியில
நல்ல ஒரு வரவேற்பையும், பிரபலத்தையும் ஏற்படுத்திக் கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளரையும் இவர் கழுவி ஊத்துவதை பார்ப்பதற்காகவே இவருக்கு அதிகமான பாலோவர்ஸ் வந்து கொண்டிருக்கின்றனர்.
நகைச்சுவையான கேரக்டர்
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதும் பலர் யூடியூப் சேனல்களில் அந்த நிகழ்ச்சியை பற்றி ரிவ்யூ செய்து தங்கள் மனதில் தோன்றுவதை அப்படியே கருத்தாக பதிவிட்டு வருவார்கள். அதில் ஒருவராக ரவீந்தரும் இருந்து வருகிறார். தனக்கே உரிய நகைச்சுவை கலந்த கிண்டலோடு இவர் ஒவ்வொரு போட்டியாளர்களை பேசுவதை பார்க்கும் போது பிடித்து போன ரசிகர்கள் மறுமுறை இவர் யாரைப் பற்றி பேச போகிறார் என்று தினமும் இவருடைய ரிவ்யூக்காக காத்திருக்கின்றனர்.தான் பிக் பாஸ் போட்டியாளர்களை கலாய்த்து வருவதுபோல இவரைப் பற்றி கலாய்ப்பவர்களை இவர் கண்டு கொண்டதே கிடையாதாம்.
தொடர்ந்து வரும் உருவ கேலி
ரவீந்திரருடைய உடல் எடையை குறித்து அதிகமாக உருவ கேலி ஆரம்பம் முதலில் இவருக்கு வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதை எல்லாம் சட்டை செய்யாமல் இவர் இருந்து வருகிறார். இந்த நிலையில் இவர் சின்னத்திரை நடிகையான மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இது இரண்டாம் திருமணம் என்றாலும் தற்போது சமூகவலைத்தளத்தில் ட்ரெண்டிங் ஜோடியாக இருந்து வருகின்றனர். இவர்களுடைய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் கலாய்ப்பவர்களுக்கு கிடைத்த கண்டெண்டாக தான் இருந்து வருகிறது.
முதல் வெற்றி
திருமணத்திற்கு பிறகு சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரவீந்தர் தற்போது முதல் முறையாக பட்டிமன்றம் ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அவரோடு போட்டி போடும் போட்டியாளராக பிக் பாஸ் அபிஷேக் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் நடிகரும் பட்டிமன்ற பேச்சாளருமான ஞானசம்பந்தம் தான் நடுவராக இருந்துள்ளார். அதில் ரவீந்திர் அணி வெற்றி பெற்று இருக்கிறது. அதுவும் ரவீந்தருடைய பேச்சுக்கு நிறைய பாராட்டுக்கள் கிடைத்திருக்கிறதாம். இந்த வெற்றியை தன்னுடைய ரசிகர்களோடு பகிர்ந்து கொள்ள புகைப்படத்தை வெளியிட்டு, அதில் எனது முதல் பட்டிமன்றம் வெற்றி பெற்றது. என் பேச்சுக்கு நிறைய பாராட்டுக்கள் கிடைத்தது. அதற்குக் காரணம் என் அம்மாவின் ஆசிகளும், பொண்டாட்டியின் வாழ்த்துக்களும் தான் கூறி இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். திருமணத்திற்கு பிறகு ரவீந்தருக்கு கிடைத்திருக்கும் முதல் வெற்றியால் மகாலட்சுமியும் ஹாப்பியாகத்தான் இருப்பார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.