ஸ்ரீதேவியை சொர்க்கத்தில் அரெஸ்ட் பண்ணுவீங்களா? புஷ்பா 2 சக்ஸஸ்.. பிரபலமாவது குற்றமா? டைரக்டர் நறுக்
ஹைதராபாத்: அரசியல்வாதிகள் ரொம்பவே பிரசித்தி பெற்றவர்களாக இருப்பதற்கு எதிராக செய்யப்படும் குற்றம் தான் இதுபோன்ற கைது நடவடிக்கை என்று, நடிகர் அல்லு அர்ஜூன் கைதுக்கு, பிரபல டைரக்டர் ராம் கோபால் வர்மா கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் புஷ்பா 2. இதன் பிரீமியர் ஷோ, ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் படம் வெளியாவதற்கு முன்தினம் அதாவது கடந்த 4ம் தேதி திரையிடப்பட்டது. படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுன் அந்த தியேட்டருக்கு வர உள்ளதாக தகவல் வெளியானதால், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் அங்கு திடீரென திரண்டுவிட்டனர்.

தியேட்டருக்கு வருகை: இரவு 9.30 மணியளவில் அல்லு அர்ஜுன், அவரது மனைவி மற்றும் கதாநாயகி ராஷ்மிகா மந்தனா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் தியேட்டருக்கு படம் பார்க்க வந்தார்கள்..
இந்த விஷயம் கேள்விப்பட்ட ரசிகர்கள், அல்லு அர்ஜுனை காண தியேட்டருக்குள் முண்டியடித்துக்கொண்டு நுழைந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் இறந்தார். அவரது மகன் தேஜா (9) மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவர்கள் அவன் மூளைச்சாவு அடைந்துள்ளதாக தெரிவித்துவிட்டனர்.
கைது நடவடிக்கை: இப்படியொரு சம்பவம் நடந்ததற்கு காரணமே அல்லு அர்ஜுன் தான் என்றுகூறி அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதன்பின் கைதும் செய்யப்பட்டு ஒரு நாள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டார். ஜாமீனில் அவர் வெளிவந்துவிட்டாலும், அவரது கைது நடவடிக்கைக்கு ஏராளமான கண்டனங்கள் எழுந்தன.. திரையுலகிலேயே பல பிரமுகர்கள் இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அந்தவகையில் பிரபல டைரக்டர் ராம்கோபால் வர்மாவும் இந்த கைதினை வன்மையாக கண்டித்துள்ளார். அல்லு அர்ஜுனின் இந்த கைது ஏற்கக் கூடியது அல்ல இதற்கு எதிராக சினிமாயுலகம் ஒன்று திரள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்பு: இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஷனாஷனம் என்கிற படத்தை இயக்கினேன். அந்த படத்தில் நடித்த ஸ்ரீதேவியை பார்ப்பதற்கு படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் லட்சக்கணக்கான கூட்டம் திரண்டது. அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் 3 ரசிகர்கள் இறந்துவிட்டார்கள்.
அப்படியென்றால், போலீஸார் சொர்க்கத்திற்கு சென்று இப்போது ஸ்ரீதேவியை கைது செய்யப் போகிறார்களா என்ன? சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகள் அளவுக்கு அதிகமாக புகழ்பெற்றது ஒரு குற்றமாக கருத முடியுமா? அதிக பிரபலமாக இருப்பதற்கு எதிராக செய்யப்படும் குற்றம் தான் இந்த கைது நடவடிக்கை. அனைத்து நடிகர்களும் அல்லு அர்ஜூன் கைதுக்கு வலுவாக போராட வேண்டும்" என்று காட்டமாக ராம் கோபால் வர்மா கூறியுள்ளார்.
பரபரப்பு: அல்லு அர்ஜூனையும், அவரது படங்களையும் தொடர்ந்து விமர்சிக்கக்கூடிய ராம்கோபால் வர்மா இப்படியொரு பரபரப்பு பதிவு போட்டுள்ளது, தென்னிந்திய திரையுலகத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் பெற்று வருகிறது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications