Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Chandralekha Serial: கொய்யால கட்டின பொண்டாட்டியை இப்படியா ரோட்டில் தள்ளிவிடுவே?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சபரிதான் வேணும்னு ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணிகிட்ட லேகா இப்போ, சபரிதான் வேணும்னு நடுத்தெருவுக்கு வந்துட்ட சோகக்கதை சந்திரலேகா சீரியலில் நடந்துகிட்டு இருக்கு.

சன் டிவியின் சந்திரலேகா சீரியலில் லேகா புருஷன் சபரியை அம்மா பேச்சை கேட்டுகிட்டு மதிக்காம இருந்த காலம் போயி, இப்போ புருஷன் சபரிதான் வேணும்னு நினைச்சு வந்தால், சபரி வேறு ஒரு கல்யாணம் பண்ணிக்க தயாராகிட்டு இருக்கான்.

திரும்பி வந்துட்டேன், திருந்தி வந்திட்டேன்னு சொன்ன லேகாவை ரோட்டில் தள்ளி விடறான் சபரி.

சந்திரலேகா சீரியல்

சந்திரலேகா சீரியல்

சன் டிவியில் சந்திரலேகா சீரியல் கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக மதியம் 2:00 மணிக்கு இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது. சந்திராவும் லேகாவும் இடம் மாறி வளரும் கசின் சிஸ்டர்ஸ்... இதுதான் கதை.

பணக்காரி லேகா

பணக்காரி லேகா

சந்திராவுக்கு உள்ளதை எல்லாம் தான் தட்டிப் பறித்து வாழ்வதுதான் லேகாவின் குணம். லேகாவின் குணத்தைத் தூண்டி விட்டு வேடிக்கைப் பார்த்து வாழ்வதுதான் லேகாவின் அம்மா அதாவது சந்திராவை பெத்த அம்மா, லேகாவின் வளர்ப்பு அம்மா குணம். சபரி அப்படித்தான் சந்திராவின் காதலனாகி பின்னர் லேகாவின் கணவனாக வாழ்கிறான்.

சபரியை காதலித்து

சபரியை காதலித்து

சபரியைப் பிடித்து, அவனைக் காதலித்து கல்யாணம் செய்து கொண்டாலும், அவனைத் தொடவிடாமல் வாழும் லேகாவிடம் இருந்து, கடந்த 5 வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் வேறு ஒரு பெண்ணை காதலிக்க ஆரம்பித்து இருக்கான் சபரி. அவளை கல்யாணம் செய்துக்கலாம் என்கிற முடிவுக்கும் வந்து விடுகிறான்.

லேகாவின் அம்மா

லேகாவின் அம்மா

லேகாவின் வளர்ப்பு அம்மா, லேகாவை வேறு கல்யாணம் செய்துக்க சொல்லி, மாப்பிள்ளையும் பார்த்துவிட, சபரியை மறக்க முடியாத லேகா, வளர்ப்பு அம்மாவிடம் சண்டை போட்டுக்கொண்டு,பணமும் வேணாம், பணக்கார வாழ்க்கையும் வேணாம், சபரிதான் வேணும் என்று சபரி வீட்டுக்கு வருகிறாள் லேகா.

சபரி ரோட்டில்

சபரி ரோட்டில்


சபரி நீதான் வேணும்னு வந்துட்டேன் சபரின்னு சொல்லி புருஷனிடம் அழ. அவனை வீட்டில் வேறு பெண்ணுடன் பார்த்து அதிர்ச்சியாக லேகா. உன்னை வேறு யாருக்கும் விட்டுத் தர மாட்டேன்னு சொல்கிறாள். இதை காது குடுத்து கேட்காத சபரி கொஞ்சமும் பாவம் பார்க்காமல் லேகாவைத் தர தர என்று இழுத்து வந்து ரோட்டில் தள்ளி விடுகிறான்.

இத்தனை வருட வாழ்க்கையில் பொண்டாட்டியை கொஞ்சமும் புரிந்துக் கொள்ளத் தெரியாத புருஷன்.. இவன் இத்தனை வருஷம் அவளுடன் என்ன செய்து கொண்டு இருந்திருப்பான்?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+