ராதிகா வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! சிவகார்த்திகேயன், திரிஷா என்ட்ரி.. விஷயம் இதுதானா?
சென்னை: இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி சினிமா பிரபலங்கள் போட்டி போட்டுக்கொண்டு போஸ்ட் போட்டு வருகிறார்கள். அதில் பலர் கிறிஸ்மஸ் உடையுடனும், கிறிஸ்மஸ் வாழ்த்துக்களுடனும் அதிரடி காட்டி கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் நடிகை ராதிகா சரத்குமார் வீட்டு கிறிஸ்மஸ் கொண்டாட்டம் பலருடைய கவனத்தை ஈர்த்து வருகிறது.
தமிழ் திரையுலகில் ஒவ்வொரு பண்டிகை காலத்திலும் பிரபலங்களில் வீடுகளில் நடைபெறும் கொண்டாட்டங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகை நடிகை ராதிகா சரத்குமார் இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை திரிஷா உள்ளிட்டோரும் இந்த ஃபங்ஷனில் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த கொண்டாட்டத்தின் போது எடுத்தபுகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
ராதிகா சரத்குமார், தமிழ் சினிமா மட்டுமின்றி தொலைக்காட்சி உலகிலும் பல தசாப்தங்களாக தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர். கதாபாத்திரங்களுக்கேற்ற நடிப்பாலும், துணிச்சலான கருத்துகளாலும் ரசிகர்களிடம் தனி மரியாதை பெற்ற நடிகையாக விளங்குகிறார்.
சமீப காலமாக சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் ராதிகா, இந்த கிறிஸ்மஸ் பண்டிகை தொடர்பாக உணர்ச்சிபூர்வமான ஒரு பதிவையும் பகிர்ந்துள்ளார். "இந்த கிறிஸ்மஸில் என் அம்மாவை மிகவும் மிஸ் பண்ணுகிறேன்" என்று அவர் உருக்கமாக எழுதிய அந்த பதிவு பலரையும் நெகிழ வைத்துள்ளது. சமீபத்தில் தான் ராதிகாவின் தாயார் காலமான நிலையில், இந்த பண்டிகை அவருக்கு அம்மாவின் நினைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்திருக்கிறார்

இந்நிலையில், நடிகர் சரத்குமார் குறித்தும் இந்த நிகழ்ச்சி தொடர்பாக பல்வேறு கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன. நடிகர் சரத்குமார், தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாகவும், பின்னர் அரசியல் மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் முக்கிய இடத்தை பிடித்தவர். சமீப காலமாக அவர் நடிகர் விஜய் குறித்து விமர்சனமாக பேசி வருவதால், விஜய் ரசிகர்களிடையே சில அதிருப்திகள் ஏற்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
அதே சமயத்தில், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு விஜய் நடித்துள்ள "ஜனநாயகன்" படம் வெளியாகும் சூழலில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த "பராசக்தி" திரைப்படமும் திரைக்கு வருவதால், இரு நடிகர்களின் ரசிகர்கள் இடையே சமூக வலைதளங்களில் மோதல்கள் அதிகரித்துள்ளன.
இந்த பின்னணியில்தான், ராதிகா - சரத்குமார் வீட்டில் நடைபெற்ற கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டது கூடுதல் கவனம் பெற்றுள்ளது. இதை வைத்து சிலர், "சிவகார்த்திகேயனுக்கு சரத்குமார் குடும்பத்தின் ஆதரவா?" என்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
அதே நேரத்தில், இன்னொரு தரப்பு ரசிகர்கள், "இது ஒரு சாதாரண குடும்ப பண்டிகை நிகழ்ச்சி தான். அதில் விஜய் - சிவகார்த்திகேயன் பிரச்சனைகளை இழுக்க தேவையில்லை" என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications