விஜயகாந்த்தை வைச்சு தேமுதிக பிழைப்பு நடத்துது.. பாவங்க அவரு.. ராதாரவி உருக்கம்
Recommended Video

இடையிடையே பல நிகழ்ச்சிகளையும் பகிர்ந்து கொண்டார். அப்போது நடிகர் விஜயகாந்த் பற்றி மிக மனம் வெதும்பி பேசும்போது, அவருக்கு அடக்க முடியாமல் அழுகை வந்தது. வழிந்த கண்ணீரைத் துடைத்து கொண்டார்.
விஜகாந்த், வாகை சந்திரசேகர், எஸ்.எஸ்.சந்திரன் உள்ளிட்ட பலரும் நீண்ட கால நண்பர்கள்.. சட்டை இல்லாத காலத்திலிருந்து கலர்கலரா சட்டை வாங்கும் காலம் வரை ஒன்றாக இருந்திருக்கோம்னு சொன்னார்.

சிங்கம் மாதிரி
விஜயகாந்த் நடந்தா, பார்த்தால் சிங்கம் மாதிரி.. கோபமா பேசினால் கர்ஜிக்கற மாதிரி இருக்கும். ரொம்ப நல்ல மனுஷன்ங்க.. அவர் எப்படி இப்படி ஆனார்னு நினைச்சாலே மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. அம்மாவுக்கும், இவருக்கும் சட்டசபையில் ஒரு வாக்குவாதம்.. இனிமே தேமுதிக காணாம போயிரும்னு சொன்னார். இப்ப அதுதானே நடந்திருக்கு.

பிரபு
விஜயகாந்த் மாதிரி சத்தம் போடாம பலருக்கும் உதவி செய்தவங்களை இன்னிவரைக்கும் நான் பார்க்கலை. அவர் ஒரு அன்னதான பிரபுங்க. எல்லாரும் எம்ஜிஆருனு சொல்றாங்க.. நான் பார்த்த மனுஷன் இவர்தான். எந்த நேரத்துல விஜயகாந்த் ஆஃபீஸுக்கு எப்போது போனாலும் சாப்பிடலாம்னு வருவாங்க.

பிழிஞ்சு
அவரை பார்க்க போயிருந்தேன்.. அவரால பேச முடியலை ... ரெண்டு பேரும் கட்டி புடிச்சுகிட்டு 10 நிமிஷம் அழுதோம். அப்பவே வாயெல்லாம் குழறிடுச்சு.. இன்னும் அவரை வச்சு பொழப்பு நடத்த கட்சிக்காரங்க அவரை பிழிஞ்சு எடுக்கறாங்க.. கூட்டமா பார்க்கறது, ஷால் போடறதுன்னு... அவரை கசக்கி பிழியறாங்க..

நிம்மதி
சொல்ல முடியாது, பேசவே முடியாதவருக்கு இவர் எப்படி ஓட்டு வாங்குவார்னு எம்ஜிஆரை சொன்னாங்க.. ஆனா அவர் ரெட்டை இல்லை விரலை காமிச்சுட்டே ஜெயிச்சுட்டார். இவரும் தன் தொகுதியில் அப்படி வந்தாலும் வரலாம். ஆனா, விஜிம்மாவை தனிமையில் சுதந்திரமாக காற்றோட்ட அறையில் வச்சு நல்லா பார்த்துக்கணும்னு சொன்னார். கட்சிக்காரங்க சந்திக்கிறேன்ற பேரில் அவரை கசக்கி பிழியக் கூடாதுன்னு சொன்னார் ராதாரவி












Click it and Unblock the Notifications