கமல்- ரஜினி நடிக்கும் திரைப்படம்! யார் வில்லன்? யாரு ஹீரோ? வெளியான அப்டேட்! சம்பவம் பெருசு தான்
சென்னை: தமிழ் சினிமாவில் இரண்டு பெரும் ஆளுமைகளாக இருந்துவரும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும், 46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கப் போகிறார்கள். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரம்மாண்ட கூட்டணி
ரஜினியும் கமலும் இணைந்து நடிக்க வேண்டும் என்பது தமிழ் சினிமா ரசிகர்களின் நீண்ட நாள் கனவு. இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்கிற ஆசையும் ஆர்வமும் இருவருக்கும் இருந்தது. ஆனால் சரியான கதை, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அமையாததால் அது நடக்கவில்லை. பலமுறை ரஜினியும் கமலும் பேட்டிகளில் "பேசி வருகிறோம்... கண்டிப்பாக செய்வோம்" என சொல்லி வந்தனர்.
லோகேஷின் நம்பிக்கை
லோகேஷ் கனகராஜ், 'விக்ரம்' படம் மூலம் கமலை வெற்றிப்பாதையில் மீண்டும் கொண்டு வந்தார். அதேபோல் சமீபத்தில் வெளியான 'கூலி' படத்தின் மூலம் ரஜினியின் வசூல் சாதனையை அவர் முறியடித்துள்ளார். இந்த இரண்டு படங்களின் வெற்றியும், லோகேஷ் மீது ரஜினி மற்றும் கமல் இருவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மல்டி ஸ்டார்களை வைத்து தன்னால் வெற்றிப்படம் கொடுக்க முடியும் என்பதை லோகேஷ் நிரூபித்தும் காட்டியிருக்கிறார்.
அமீர் கான் குழப்பம்
'கூலி' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசும்போது, "லோகேஷ் என்னிடம் ஒரு கேமியோ வேடத்தில் ஒரு நடிகர் நடிக்கவிருக்கிறார். நீங்கள் நம்ப மாட்டீர்கள்" என சொன்ன போது, 'உலக நாயகனை சம்மதிக்க வைத்துவிட்டாரா' என நினைத்தேன். ஆனால் அது அமீர்கான் என லோகேஷ் சொன்னார்" என்று கூறியிருந்தார்.
படத்தின் கதை
'கூலி' படத்திற்கு முன்பு, லோகேஷ் கனகராஜ் ரஜினியிடம் ஒரு கதை சொன்னார். முழுக்க முழுக்க வில்லன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து அவர் சொன்ன அந்தக் கதை ரஜினிக்கு மிகவும் பிடித்திருந்தது. "வில்லன் கதாபாத்திரத்திற்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. என்ன வேண்டுமானாலும் செய்யலாம்" என்று ரஜினி அந்தப் பேட்டியில் கூறியிருந்தார். இப்போது இந்த ரஜினி - கமல் படத்தில், கமல் ஹீரோவாகவும் ரஜினி வில்லனாகவும் நடிப்பார்கள் என கூறப்படுகிறது.
கமல்ஹாசனின் நிபந்தனை
சில மாதங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் பேசிய கமல், ரஜினியுடன் இணைந்து நடிக்கும் படம் குறித்து, "இதை ரஜினியும் என்னிடம் கேட்டார். 'நீங்களும் நானும் இணைந்தால் அந்த படத்தை நான் தயாரிக்கிறேன் இல்லை நீங்கள் தயாரியுங்கள். இடையில் வேறு ஒருவர் வரக்கூடாது' என சொன்னேன்" என்று கூறினார். இந்த படத்தின் தயாரிப்புப் பொறுப்பை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும், உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இணைந்து ஏற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
திட்டமிடல்
இந்தப் படம் சுமார் ₹700 கோடி பட்ஜெட்டில் உருவாகும் என சொல்லப்படுகிறது. 'கூலி' படத்திற்குப் பிறகு கார்த்தியை வைத்து கைதி 2 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் ரஜினி-கமல் இணையும் படத்தை முதலில் இயக்க இருப்பதால், 'கைதி 2' தள்ளிப்போகும் என்கிறார்கள். ரஜினி-கமல் படத்தின் படப்பிடிப்பு 2026 பாதியில் துவங்கும் என கூறப்படுகிறது.
புதிய CEO
ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ-வாக உதயநிதியின் மகன் இன்பநிதியை நியமிக்கப் போகிறார்களாம். அந்த அறிவிப்போடு ரஜினி-கமல் இணையும் படத்தின் அறிவிப்பையும் வெளியிடுவார்கள் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications