ஆஹா அன்ன நடை.. என்ன இடை.. பெருமூச்சு விட வைத்த ரம்யா பாண்டியன்!
சென்னை: கடற்கரையில் அன்ன நடை இட்டு பார்க்கும் ரசிகர்களை பெருமூச்சுவிட வைத்துள்ளார் ரம்யா பாண்டியன்.
அவரது இந்த லேட்டஸ்ட் வீடியோ இளைஞர்கள் மத்தியில் பெரும் கலகலப்பையும், விறுவிறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மாதத்திற்கு ஒரு முறை ட்ரிப் போய்க் கொண்டிருந்தவர்களை வீட்டிற்குள்ளே போட்டோசூட் எடுக்க வைத்திருக்கும் இந்த கொரோனா காலத்தில் ரம்யா பாண்டியனால் மட்டும் சும்மா இருக்க முடியுமா..
கடற்கரையில் ரம்யா
ஆனால் எப்படி இவரால் கடற்கரையில் கலக்கலாக போட்டோஷூட் எடுக்க முடிந்தது என பலரும் குழம்பி கொண்டிருக்கும் நேரத்தில் தன்னுடைய அன்ன நடையில் சின்ன இடையை எடுப்பாய் காட்டி ரசிகர்களை கிறங்க அடித்திருக்கிறார். சும்மாவே இவருடைய ஆட்டம் வெறித்தனமாக இருக்கும். அதுவும் தற்போது போட்டோசூட் பிசியில் இவர் செம ஸ்டைலாக கடற்கரையில் அலைகளுக்கு இடையில் நின்றபடி அசத்துகிறார்.
என்னை நீங்க ரசிங்க
கடல் அலையை நான் ரசிக்கிறேன் என் அழகினை நீங்கள் ரசித்துக் கொள்ளுங்கள் என ட்ரோன் கேமரா பறக்க விட்டு இவரை சுற்றி சுற்றி வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். இவர் ஒரு போஸ்ட் போட்டாலும் இன்ஸ்டாகிராமே பத்திக்கிச்சு போல சூடுபிடித்து இருக்கிறது. ஊரடங்கு நேரத்தில் பல நடிகைகள் போட்டோசூட் எடுத்துக் கொண்டிருந்தாலும் தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் ரம்யா பாண்டியன் கலக்கியுள்ளார்.
வைரல் வீடியோ வைரலாகும் வீடியோ
இவர் எடுத்த வீடியோஸ் தான் பெரும் வைரலாக பரவி வருகிறது .இவருடைய இந்த வீடியோவை பார்த்ததும் ரசிகர்கள் அங்க பார்யா....ரம்சின் நடையை ....அவர் அழகை பாருங்கய்யா....எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை புலம்பித் தவிக்கின்றனர். சும்மாவே இவருடைய போட்டோஸ்களுக்கு ஜொள்ளு வடிக்கும் ரசிகர்கள் தற்போது இவர் கடற்கரையில் ஒய்யாரமாக நடந்து ரசிகர்களை காந்தம் போல இழுத்து இருக்கிறார்.
அன்ன நடை அழகிய இடை
ஏற்கனவே இடுப்பை காட்டி பேமஸானவர் தற்போது நடையை காட்டி பேமஸ் ஆகி வருகிறார் .ரசிகர்களின் மனதில் தான் எப்போதும் ஆக்டிவாக இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருக்கும் இவர் ரசிகர்களின் மனதிற்கு ஏற்ப யாரும் எதிர்பார்க்காத வகையில் வெள்ளை உடையில் பார்ப்பவர்களின் மனதை கொள்ளை கொண்டிருக்கிறார்.
ஹாட் வீடியோ
ஒரே நேரத்தில் பல விதம் போட்டோக்களையும் வீடியோக்களையும் எடுத்து வைத்துவிட்டு ஒவ்வொன்றாக பதிவிட்டு ரசிகர்களுக்கு சூடாகிக் கொண்டிருக்கும் இவரிடம் இவருடைய ரசிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாக காட்டுகிறதை மொத்தமாக காட்டினால் நன்றாக இருக்குமே எனவும் சிலர் கமெண்ட் போட்டு இருக்கின்றனர். கமெண்ட்ஸ் எல்லாம் பட்டையைக் கிளப்புது.
குவிந்த கமெண்ட்டுகள்
ஆனால் ரசிகர்களின் கமெண்டுகளை கண்டுகொள்ளாத ரம்யா பாண்டியன் அவருடைய தோழிகளான ஷிவானி மற்றும் திரைப் பிரபலங்களின் கமெண்ட் களுக்கு மட்டுமே பதிலளித்திருக்கிறார் .இதனை பார்த்ததும் சில ரசிகர்கள் காண்டாகி அப்ப நாங்க எல்லாம் உங்களுக்கு முக்கியம் இல்லையா என்று கேள்வி கேட்டு இருக்கின்றனர்.