கமலுக்கு தோள் கொடுத்த தோழி கடைசி நேரத்தில்..ரசிகர்களுக்கு வியப்பு கொடுத்த ரம்யா கிருஷ்ணன்
சென்னை: ரம்யா கிருஷ்ணனின் என்ட்ரியை பார்த்ததும் ரசிகர்கள் அசந்து போய் இருக்கின்றனர்.
இந்த வாரத்தில் செம பஞ்சாயத்து இருக்கிறது என ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.
தீர்ப்பு எல்லாம் இனி அதிரடி தான் என்று ரம்யா கிருஷ்ணனின் ரசிகர்கள் ஆரவாரம் மிட்டு வருகிறார்கள்.
அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் கனமழை.. எங்கெல்லாம் தெரியுமா?
முதல் முறை தொகுப்பாளர் மாற்றம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரைக்கும் நான்கு சீசன்கள் முடிவடைந்து 5 வது சீசனில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் இதுவரைக்கும் அனைத்து வார இறுதி நாட்களையும் தொகுத்து வழங்கி வந்த கமல் தற்போது மருத்துவமனையில் இருப்பதால், அவருக்கு பதில் யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வருவார்கள் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருந்தனர். அந்த நேரத்தில் ஒரு சில ரசிகர்கள் பலருடைய பெயரை கூறிக் கொண்டிருந்த நேரத்தில், ரசிகர்கள் பலர் எதிர்பார்த்தபடியே ரம்யாகருஷ்ணன் தற்போது என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
அதிரடி பெர்பாமன்ஸ் இருக்குமா??
ரம்யா கிருஷ்ணனின் அதிரடியான பர்பாமன்ஸ் பிக்பாஸ் டான்ஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பார்த்து இருந்த ரசிகர்களுக்கு இந்த நிகழ்ச்சியிலும் அவருடைய அதிரடியான முடிவுகள் இருக்குமா??என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர் ஏற்கனவே இந்த வாரம் பஞ்சாயத்து களுக்கும் பிரச்சனைகளும் பஞ்சமில்லாமல் தான் இருந்து வருகிறது இதில் ஒரு நல்ல முடிவு ரம்யாகிருஷ்ணன் எடுப்பார் என்று அவருடைய ரசிகர்கள் தீர்க்கமாக கூறி வருகின்றனர் அவருடைய அதிரடியான என்றே பலருக்கும் ஆச்சரியத்தையம் இரு தரப்பையும் கொடுத்திருக்கிறது என்று பலர் கூறி வருகின்றனர்.
எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது
அதுமட்டுமல்லாமல் ரம்யா கிருஷ்ணன் படையப்பா நீலாம்பரி ஆக இதில் மிரட்டுவாரா??அல்லது ராஜ மாதாவாக தீர்ப்பு சொல்வாரா??என்று பல்வேறு கருத்துகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். என்ன இருந்தாலும் இந்த வாரம் அக்ஷரா செய்த செயலுக்கு ரியாக்சன் என்னவாக இருக்கும் என்று பலர் இப்போதே கமெண்ட் அடிக்க தொடங்கி விட்டார்கள். கமல் இந்த பிரச்சனையை தீர்த்தால் கூட பட்டும் படாமல் தான் பதில் சொல்லி பலருக்கும் புரியாத மாதிரியே அதனை முடித்து விடுவார். ஆனால் ரம்யா கிருஷ்ணன் அப்படி அல்ல இந்த வாரம் வேற லெவல் இருக்கப்போகிறது என்று பலர் கூறி வருகின்றனர்.
ரசிகர்களின் நம்பிக்கை நடக்குமா??
அதிரடியான களமிறங்கியிருக்கும் ரம்யாகிருஷ்ணன் இக்கட்டான சூழ்நிலையில் எடுக்கும் முடிவுக்கு போட்டியாளர்களும் காத்திருக்கின்றனர். நேற்றைய எபிசோடைடில் ராஜு, அபிநய் இடம் பாவனியை பற்றி கேட்டதற்கும், அக்ஷரா சிபியிடம் சண்டைபோட்டு பொருட்களை சேதப்படுத்தியதற்கும் இந்த வாரம் குறும்படங்களை போட்டு தரமான சம்பவங்களை செய்த வேண்டும் என்று இவருக்கு பலர் எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாலும், ஒரு சில ரசிகர்கள் பிக்பாஸ் ஜோடிகள் டான்ஸ் நிகழ்ச்சியில் வனிதாவிடம் கறாராக நடந்தது போல இங்கேயும் தயவு தாட்சண்யம் இல்லாமல் சரியாக முடிவெடுப்பீர்கள் என்று நம்புகிறோம் என நம்பிக்கையை பொழிகின்றனர்.