பிரேக்கப்பில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பாதிப்பு! இந்த விஷயம் வெளியே தெரியாது! ராஷ்மிகா ஆதங்கம்!
சென்னை: இந்திய சினிமா உலகில் இன்று 'நேஷனல் கிரஷ்' என ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் அசத்தலான நடிப்பால் குறுகிய காலத்திலேயேப் பெரிய ரசிகர் வட்டத்தைப் பெற்ற இவர், சமீபத்தில் காதல் முறிவு (Breakup) குறித்தத் தனது அனுபவம் மற்றும் ஆழமான கருத்துகளைப் பொதுவெளியில் பகிர்ந்துள்ளார். அவருடைய இந்த பேச்சு, இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

ராஷ்மிகா மந்தனா பயோகிராபி
கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா, காலேஜ் படித்து கொண்டிருக்கும் போதே மாடலிங் மற்றும் அழகிப் போட்டிகளில் பங்கேற்று இருக்கிறார். அதற்கு பிறகு கன்னட திரைப்படமான 'கிரிக் பார்ட்டி' மூலம் 2016 ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். தெலுங்கில் 'கீதா கோவிந்தம்', 'புஷ்பா' போன்ற மெகா ஹிட் படங்களில் நடித்து, தென்னிந்தியாவின் முன்னணி நடிகையானார். தமிழில் 'சுல்தான்', 'வாரிசு' போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்து, இந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.
காதல் முறிவு
சமீபத்தில் ஒரு பேட்டியில், ராஷ்மிகாவிடம் ஒரு சுவாரஸ்யமானக் கேள்வி கேட்கப்பட்டது: "காதல் முறிவால் அதிகம் பாதிக்கப்படுவது யார்? ஆண்களா? பெண்களா?" இதற்கு ராஷ்மிகா அளித்தப் பதில்தான், இன்று பெண்களின் வலியை உணர்வுபூர்வமாகப் பிரதிபலித்து வைரலாகியுள்ளது. "காதல் முறிவால் பெண்களை விட அதிகம் ஆண்களே பாதிக்கப்படுகின்றார்கள் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. எங்கள் வலியை வெளிப்படுத்த உங்களை போலத் தாடி வளர்க்கவோ... மது குடிக்கவோ முடியாது! பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் அதை வெளியே காட்ட முடியாது" என்று துணிச்சலாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் பதிலளித்துள்ளார்.
ராஷ்மிகாவின் இந்தக் கூற்று, சமூகத்தில் பெண்கள் தங்கள் துயரத்தை எப்படி வெளிப்படுத்த முடியாமல் மறைக்கிறார்கள் என்பதைக் குறிப்பாக உணர்த்துகிறது. அதுபோல ராஷ்மிகா தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட வாழ்விலும் சில சர்ச்சைகளையும் சந்தித்துள்ளார். தனது முதல் படமான 'கிரிக் பார்ட்டி'யில் நடித்த சக நடிகருடன் ராஷ்மிகாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், அந்த உறவு விரைவில் முறிந்தது. அதன் பிறகு தனது நடிப்பு வாழ்க்கையில் கவனம் செலுத்தி, பெரும் வெற்றியைப் பெற்றார்.
தொடர் கவனம்
ராஷ்மிகா எப்போது பேசினாலும், அது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்புவது வாடிக்கை. சமீபத்தில் வந்த ஒரு நேர்காணலில், அவர் தனது வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் அவருக்கு ஆதரவளித்தவர்களையும், படங்களையும் மறந்தது போலப் பேசியதாகவும் ஒரு சர்ச்சை எழுந்தது. இத்தனை சர்ச்சைகள் மற்றும் தனிப்பட்டச் சிக்கல்களைத் தாண்டி, ராஷ்மிகா தனது தொழிலில் கவனம் செலுத்தி வெற்றி பெற்றவர். காதல் முறிவு குறித்த அவரது வெளிப்படையான பதில், சமூகத்தில் பெண்களின் உணர்வுகளுக்கு ஒரு வலுவான குரலைக் கொடுத்துள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications