பிரேக்கப்பில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பாதிப்பு! இந்த விஷயம் வெளியே தெரியாது! ராஷ்மிகா ஆதங்கம்!
சென்னை: இந்திய சினிமா உலகில் இன்று 'நேஷனல் கிரஷ்' என ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் அசத்தலான நடிப்பால் குறுகிய காலத்திலேயேப் பெரிய ரசிகர் வட்டத்தைப் பெற்ற இவர், சமீபத்தில் காதல் முறிவு (Breakup) குறித்தத் தனது அனுபவம் மற்றும் ஆழமான கருத்துகளைப் பொதுவெளியில் பகிர்ந்துள்ளார். அவருடைய இந்த பேச்சு, இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

ராஷ்மிகா மந்தனா பயோகிராபி
கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா, காலேஜ் படித்து கொண்டிருக்கும் போதே மாடலிங் மற்றும் அழகிப் போட்டிகளில் பங்கேற்று இருக்கிறார். அதற்கு பிறகு கன்னட திரைப்படமான 'கிரிக் பார்ட்டி' மூலம் 2016 ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். தெலுங்கில் 'கீதா கோவிந்தம்', 'புஷ்பா' போன்ற மெகா ஹிட் படங்களில் நடித்து, தென்னிந்தியாவின் முன்னணி நடிகையானார். தமிழில் 'சுல்தான்', 'வாரிசு' போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்து, இந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.
காதல் முறிவு
சமீபத்தில் ஒரு பேட்டியில், ராஷ்மிகாவிடம் ஒரு சுவாரஸ்யமானக் கேள்வி கேட்கப்பட்டது: "காதல் முறிவால் அதிகம் பாதிக்கப்படுவது யார்? ஆண்களா? பெண்களா?" இதற்கு ராஷ்மிகா அளித்தப் பதில்தான், இன்று பெண்களின் வலியை உணர்வுபூர்வமாகப் பிரதிபலித்து வைரலாகியுள்ளது. "காதல் முறிவால் பெண்களை விட அதிகம் ஆண்களே பாதிக்கப்படுகின்றார்கள் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. எங்கள் வலியை வெளிப்படுத்த உங்களை போலத் தாடி வளர்க்கவோ... மது குடிக்கவோ முடியாது! பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் அதை வெளியே காட்ட முடியாது" என்று துணிச்சலாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் பதிலளித்துள்ளார்.
ராஷ்மிகாவின் இந்தக் கூற்று, சமூகத்தில் பெண்கள் தங்கள் துயரத்தை எப்படி வெளிப்படுத்த முடியாமல் மறைக்கிறார்கள் என்பதைக் குறிப்பாக உணர்த்துகிறது. அதுபோல ராஷ்மிகா தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட வாழ்விலும் சில சர்ச்சைகளையும் சந்தித்துள்ளார். தனது முதல் படமான 'கிரிக் பார்ட்டி'யில் நடித்த சக நடிகருடன் ராஷ்மிகாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், அந்த உறவு விரைவில் முறிந்தது. அதன் பிறகு தனது நடிப்பு வாழ்க்கையில் கவனம் செலுத்தி, பெரும் வெற்றியைப் பெற்றார்.
தொடர் கவனம்
ராஷ்மிகா எப்போது பேசினாலும், அது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்புவது வாடிக்கை. சமீபத்தில் வந்த ஒரு நேர்காணலில், அவர் தனது வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் அவருக்கு ஆதரவளித்தவர்களையும், படங்களையும் மறந்தது போலப் பேசியதாகவும் ஒரு சர்ச்சை எழுந்தது. இத்தனை சர்ச்சைகள் மற்றும் தனிப்பட்டச் சிக்கல்களைத் தாண்டி, ராஷ்மிகா தனது தொழிலில் கவனம் செலுத்தி வெற்றி பெற்றவர். காதல் முறிவு குறித்த அவரது வெளிப்படையான பதில், சமூகத்தில் பெண்களின் உணர்வுகளுக்கு ஒரு வலுவான குரலைக் கொடுத்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications