அரசியல்வாதிகளிடம் சிக்கிய பிரபல நடிகை? ஆனானப்பட்ட ஜெயலலிதா, ரஜினியே திணறிப்போய்: இவர் சொல்றது நிஜமா
சென்னை: மொழி வெறியர்கள், இன வெறியர்களிடம் பிரபல நடிகை ராஷ்மிகா சிக்கி கொண்டுவிட்டாரோ? என்ற கவலை ஏற்படுவதாகவும், அடுத்தடுத்து படங்கள் கர்நாடகாவில் வெளியாக உள்ள நிலையில், இதற்கு உடனடியாக சுமூக தீர்வு காண வேண்டும் என்றும் மூத்த பத்திரிகையாளர் அந்தணன் கருத்து கூறியிருக்கிறார்.
Valai Pechu Anthanan தன்னுடைய சேனலில் பேசும்போது, "கர்நாடக மாநிலத்தில் பிறந்தவர் ராஷ்மிகா.. அங்கேதான் படித்து, அங்கேயே சினிமாவில் அறிமுகமானார்.. இதற்கு பிறகு தெலுங்கில் மிகப்பெரிய நடிகையாக மாறினார்.. கீதா கோவிந்த் படத்துக்கு பிறகு நிறைய படங்கள் ஹிட்டாயின.. புஷ்பா படத்துக்கு பிறகு பல மொழிகளில், பல கோடி சம்பளங்களில் இன்று நடித்து வருகிறார். அந்தவகையில் செல்வச்செழிப்பில் உள்ளார்.
இப்படிப்பட்ட ராஷ்மிகா, மொழி வெறியர்கள், இன வெறியர்களிடம் சிக்கி கொண்டுவிட்டாரோ? என்ற கவலை ஏற்படுகிறது. காரணம், சமீபத்தில் நிகழ்ச்சியொன்றில் பேசிய ராஷ்மிகா, "என்னுடைய ஊர் ஆந்திரா" என்பதுபோல பேசியதாக கூறி விவகாரம் வெடித்துள்ளது.

சர்ச்சையாக பேசினாரா
பெங்களூர் படவிழாவில், கர்நாடகாவா? அது எங்கே இருக்கு? பெங்களூரா அது எங்கே இருக்கு என்று ராஷ்மிகா கேட்டதாக தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. தான் அவ்வாறு பேசவில்லை என்று ராஷ்மிகா கூறினாலும், கர்நாடகாவில் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
வழக்கமாக பிரபலங்கள், தங்கள் பட புரமோஷனுக்காக, அந்தந்த மாநில ரசிகர்களிடம், இதுதான் நான் பிறந்த மண், இதுதான் என்னுடைய மொழி என்றெல்லாம் சொல்வார்கள். இதன்மூலம் ரசிகர்களையும் கவர்ந்திழுப்பார்கள்.
நடிகர் கார்த்தி, சுகாசினி
இப்படித்தான் ஒருமுறை நடிகர் கார்த்தி, "தெலுங்கு ரசிகர்களை தான் பிடிக்கும்" என்று சொல்லிவிடவும், அப்படின்னா தமிழகத்தில் உள்ள ரசிகர்கள் யார்? என்று கேள்வி எழுந்து, மிகபெரிய அதிருப்தியை ஏற்படுத்திவிட்டது. அதேபோல, பொன்னியின் செல்வம் பட புரமோஷனுக்கு நடிகை சுகாசினி பேசியபோது, "இது உங்க ஊரில் எடுக்கப்பட்ட படம்" என்று சொல்லி, அதுவும் சலசலப்பை தந்தது,
முழுக்க முழுக்க பணத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து இப்படி பேசிவிடுகிறார்களே தவிர, நாம் இப்படி பேசுவதால், தமிழ்நாட்டில் இதெல்லாம் என்னவாக பிரதிபலிக்கும் என்று யோசிப்பதில்லை. ஆனால், தமிழ்நாட்டு ரசிகர்கள் இவர்களை எல்லாம் பொறுத்து கொள்வது போல, மற்ற மாநிலங்களில் இவர்களை அங்குள்ள ரசிகர்கள் பொறுத்து கொள்வதில்லை.
கன்னட வெறியர்கள்
கர்நாடகாவில் உள்ளவர்கள் மொழிப்பற்று, மொழி வெறியர்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.. இப்போது ராஷ்மிகாவுக்கு எதிராக ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது.. அங்குள்ள காங்கிரஸ் எம்எல்ஏ, ராஷ்மிகா மன்னிப்பு கேட்கணும் என்று சொல்லி கொண்டிருக்கிறார்.. சினிமா விவகாரம் எப்படி அரசியல் ஆனது என்று தெரியவில்லை.
ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது, 3 எலும்பு முறிவு ஏற்பட்டாலும், வீல் சேரிலும் நொண்டி கொண்டே வந்து ஒரு படவிழாவில் பங்கேற்றவர் ராஷ்மிகா.. தொழில் மீது இவ்வளவு அக்கறை உள்ளவர், அப்படி பேசியிருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
ஆனானப்பட்ட ஜெயலலிதாவே
ஜெயலலிதா அம்மாவே கர்நாடகாவில் பிரச்சனையை சந்தித்தார்.. "காவிரி எங்கள் உரிமை, நாங்கள் ஏன் உங்களிடம் தண்ணீருக்கு கையேந்தணும்" என்று சொல்லி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பெருமளவு காரணமாக இருந்தார்.. நீதிமன்றமும் சென்றார்..
இன்றைக்கு ஏதோ ஒரு வகையில் நமக்கு தண்ணீரும் கிடைத்து கொண்டுமிருக்கிறது. ஜெயலலிதா நடிகையாக இருந்தபோதே கன்னடத்துக்கு ஆதரவாக பேச சொல்லியும்கூட தமிழ் வாழ்க என்றார்.. ஆனானப்பட்ட ஜெயலலிதாவையே ஆட்டிப்படைத்த கர்நாடகாவில், ராஷ்மிகா என்ற சாதாரண நடிகையால் என்ன செய்ய முடியும்?
சத்யராஜ் பாகுபலி
பல வருடங்களுக்கு முன்பு, காவிரி பிரச்சனையின்போது, அவர்களை சத்யராஜ் தவறாக பேசியதால், பாகுபலி படத்தை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய முடியாது, சத்யராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அடம்பிடித்தார்கள்.. "என் உணர்வைதானே நான் வெளிப்படுத்தினேன்" என்று சத்யராஜ் சொல்லியும்கூட, மன்னிப்பு கேட்க அழுத்தம் தரப்பட்டது. இறுதியில், வேறுவழியின்றி சத்யராஜ் மன்னிப்பு கேட்ட பிறகுதான் பாகுபலி படத்தை ரிலீஸ் செய்ய விட்டார்கள். இத்தனைக்கும் நேரடி கன்னட படம் அது கிடையாது.
இதே காவிரி பிரச்சனையில் ரஜினியும் ஒருமுறை உணர்ச்சி வசப்பட்டு பேசி, ரஜினி படங்களையும் அங்கே வெளியிடாமல் செய்தனர்.. கன்னடர்களின் மொழிப்பற்று சரியென்றாலும், எல்லா இடத்திலும் அதை முரட்டுத்தனமாக அப்ளை செய்வதுதான் கஷ்டமா இருக்கு.
ராஷ்மிகா விவகாரம் எதை நோக்கி திசை திருப்பப்படுகிறது என்று தெரியவில்லை. இதுக்கு இப்பவே ராஷ்மிகா, தெளிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுவிட்டால், இந்த பிரச்சனை இப்போதே தீர்ந்துவிடும் என்று கூறியிருக்கிறார்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications