ஐயோ கல்யாணத்தையே 10 நாளாக வச்சு செய்றாங்க.. இதில் ரிசப்ஷன் வேறயா.. யோசிப்போம்.. ரவீந்தர் "உருக்கம்"
சென்னை: அய்யோ ரிசப்ஷனா நான் பெரிசா பண்ணலாம்னு யோசித்து வைத்திருந்தேன். ஆனால் அதை வச்சியே இன்னும் 10 நாட்களுக்கு அதையே பெரிதாக்கிவிடுவார்கள் என்பதால் யோசித்து கொண்டிருக்கிறேன் என ரவீந்தர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து திடீரென செப்டம்பர் 1 ஆம் தேதி மகாலட்சுமியும் ரவீந்தரும் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார்கள். இந்த திருமணம் கடந்த 10 நாட்களாகியும் வைரலாகி பேசும் பொருளாகியுள்ளது.
இவர்களது திருமணம் திடீரென வைரலானதற்கு காரணம் ரவீந்தர் வனிதா விஜயகுமார் திருமணத்தில் கூறிய கருத்துகள், ஒன்றரை ஆண்டுகளாக இவர்களது காதல் ஒரு சொட்டுக் கூட லீக்காகாதது, இப்படி உடல் அமைப்பு கொண்டவருக்கு இத்தனை அழகான மனைவியா என்பது உள்ளிட்டவையே ஆகும்.

90 கிட்ஸ்
இவர்கள் திருமணம் முடிந்த பிறகு கூட இவர்களது இன்ஸ்டாகிராமில் நெருக்கமாக வெளியிட்ட புகைப்படங்களால் 90 கிட்ஸ்கள் வயிற்றெரிச்சலில் உள்ளார்கள் என சொல்லலாம். இந்த நிலையில் மகாலட்சுமிக்காக ரவீந்தர் ஒரு சில பரிசுகளை கொடுத்துள்ளார் என்ற தகவல்களும் வைரலாகி வருகின்றன.

ரவீந்தர்
இதையெல்லாம் ரவீந்தர் நேற்று முன் தினம் திருமணத்திற்கு பிறகு முதல்முறையாக இன்ஸ்டா லைவில் பேசினார். அப்போது சில விஷயங்களை மறுத்தார். மேலும் ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார். தான் வனிதா திருமணத்தை ஏன் எதிர்த்தேன் என்பதையும் தெரிவித்தார்.

ரிசப்ஷன் எப்போ
இந்த நிலையில் அவரிடம் ரசிகர் ஒருவர் திருமண வரவேற்பு எப்போது என கேட்டார். அதற்கு ரவீந்தரோ, ரிசப்ஷை பெரிதாக வைக்கலாம் என யோசித்திருந்தேன். ஆனால் இதையும் ஒரு 10 நாட்களுக்கு பெரிதாக்கிவிடுவார்கள் என்பதால் யோசித்து வருகிறேன் என தெரிவித்திருந்தார்.

திருமணம் திருப்பதியில்
இவர்களது திருமணம் திருப்பதியில் நடந்ததால் ஊரை கூட்டி வரவேற்பு வைக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளார்கள். ஆனால் இவர்களது திருமணத்தையே 10 நாட்களாக பெரிதாக்கி வரும் நெட்டின்சன்கள் இதையும் பெரிதாக்கிவிடுவார்கள் என்பதால் யோசிக்கிறார். என்ன முடிவு எடுப்பாரோ, நமக்கு கண்டென்ட் கொடுப்பாரா இல்லையா என்ற யோசனையில் மீம்ஸ் கிரியேட்டர்கள் உள்ளார்கள்.












Click it and Unblock the Notifications