சேலையை இறக்கிக் கட்டி.. குடும்பப் பாங்கை ஏறக் கட்டிய ரித்விகா.. ரசிகர்களுக்கு ஜிலீர்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக வந்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ரித்விகா தற்போது கவர்ச்சி புயலாக இடுப்பு மடிப்பு காட்டி ரசிகர்களை கிறங்கடித்து இருக்கிறார்.
இந்த போட்டோக்களை பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகமாக கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். ரித்விகாவா இது என்று பலருக்கும் ஆச்சரியம்தான்.
இதுவரைக்கும் இழுத்து போர்த்தி கொண்டு இருந்தவர் தற்போது இப்படி திறந்த மனதாக ஆடையை ஒதுக்கி ரசிகர்களுக்கு சூடேத்தி வெளியிட்டு இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.
ஷிவானி விட்டதை நல்லாவே பிடிச்சுட்டீங்க போங்க.. கலகலக்கும் ஸ்ரீரஞ்சனி!
பள்ளிப் படிப்பிலேயே
இவர் ஸ்கூல் படிக்கும்போது நடிப்பில் மின்ன வேண்டும் நன்றாக நடிக்க வேண்டும் என்று தான் ரொம்பவும் ஆசைப்பட்டு கொண்டிருந்தாராம். ஆனால் அவருக்கு அந்த வாய்ப்புகள் கிடைக்கவில்லையாம். காலேஜ் எப்படியாவது ஒரு டிகிரி முடிக்க வேண்டும் என்று தான் காலேஜில் சேர்ந்து படித்துக்கொண்டிருக்கும்போது விதவிதமாக போட்டோக்களாக எடுத்து ஒவ்வொரு டைரக்டரிடம் கொடுத்து வைத்துக்கொண்டு இருந்திருக்கிறார்.
பாலா தான் முதலில்
பலர் நேரில் பார்க்க வேண்டும் என்று கூறுகி இவரது கல்லறை பார்த்து அவரை நிராகரித்து அனுப்பியிருக்கிறார்கள். அப்போதுதான் திடீரென்று டைரக்டர் பாலாவிடம் இருந்து ஆடிஷனுக்கு அழைப்பு வந்திருக்கிறது. பாலா என்றாலே பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்த்து ரொம்ப பெரிய டயலாக் எல்லாம் கொடுத்து இருப்பார்கள் என்று யோசித்துக் கொண்டு தான் சென்றிருக்கிறார்.
கை கொடுத்த கலர்
ஆனால் அங்கு போனதும் இவருக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. இவர் எதிர்பார்க்காத வகையில் இவர் கலர் தான் இவருக்கு இவரை செலக்ட் செய்ய வைத்திருக்கிறது. பரதேசி படத்தின் சூட்டிங்கை இவரை கூப்பிட்டு இருக்கிறார்கள். அங்க போன சூட்டிங்கில் இவர் இன்னும் டஸ்கின்னாக இருக்க வேண்டும் என்று இவருக்கு மேக்கப் எல்லாம் போட்டு இருக்கிறார்கள்.
பயப்படாம சிரிங்க
மேக்கப் முடிந்து வந்ததும் பெரிய டயலாக்கை கொடுக்க பேச வைக்க போகிறார்கள் என்று எதிர்பார்த்திருந்த இவருக்கு பாலா அம்மா கொஞ்சம் சிரிங்க என்று கூறியிருக்கிறார். என்ன சிரிக்க சொல்கிறாரே என்று பயந்து கொண்டிருக்கும் போது இவருக்கு சிரிக்க கூட வரவில்லையாம். அதற்கு பாலா பயப்படாமல் சிரிங்க என்று ஊக்கமூட்டி பிறகுதான் இவர் சிரித்து இருக்கிறார்.
யூ செலக்டட்
இவர் சிரித்ததும் ஓகே நீங்க செலக்டட் என்று கூறிவிட்டாராம் .அப்போ ரித்திகா அதிர்ச்சி அடைந்திருக்கிறார் ஆச்சரியமும் முடியவில்லையாம். அந்த மாதிரி இவருக்கு வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது 2013இல் பரதேசி படம் தான் .இந்த படத்தில் இவர் கருத்த கண்ணி எனும் கேரக்டரில் ரசிகர்களின் மனதில் ஆழமான ஒரு இடத்தை பிடித்துவிட்டார் .அதன் பிறகு மெட்ராஸ் படத்திலும் கொஞ்சம் சீன்களில் வந்தாலும் செமையாக நடித்திருப்பார்.
மனசுல ஆழமான இடம்
அனைவரின் மனதிலும் நல்ல இடத்தைப் பிடித்த இந்த படத்தின் மூலம் இவருக்கு அவார்டுகளும் கிடைத்திருக்கிறது. அதன்பிறகு ரஜினியுடன் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஒரு நாள் கூத்து போன்ற படங்களிலும் நடித்திருந்தார் .எல்லா படங்களிலுமே இவர்சைடு ரோல்களில் தான் நடித்து இருந்தார் .ஆனால் போல்டான கேரக்டரிலும் நடித்து கொண்டிருந்தார். இந்த மாதிரி வெள்ளித்திரையில் மின்னிக் கொண்டிருக்கும் போது தான் இவருக்கு சின்னத்திரையிலும் வாய்ப்பு கிடைத்தது.
பிக் பாஸ் வின்னர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 2வில் டைட்டில் வின்னர் இவர்தான் என்னும்போது பல ரசிகர்களும் இவருக்கு எவ்வளவு ஒத்துழைப்பு கொடுத்து இருக்கிறார்கள் என்று அனைவரும் அறிந்தது தான் .ஆனால் அதன்பிறகு அந்த அளவிற்கு படவாய்ப்புகள் பெரிய அளவில் வரவில்லை .கிடைக்கும் படங்களிலும் சைடு கேரக்டரில் நடித்துக் கொண்டிருப்பதால் தற்போது போட்டோ ஷூட்டில் இறங்கிவிட்டார்.
பளபள போட்டோஸ்
இன்ஸ்டாகிராமில் அடிக்கடி போட்டோக்களை பதிவிட்டு வரும் இவருக்கு நெகட்டிவ் கமெண்டுகளும் அதிகமாக தான் வருகின்றது. வந்தாலும் அதை பற்றி கொஞ்சம் கூட கவலை படாமல் அதற்கும் போல் டாக கமெண்டுகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார் இவர் பதில் கூறும் அழகைப் பார்த்து கூட பலர் ரசிகர்கள் நீங்க வேற லெவல் என்று இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
சிரிச்ச முகமாக
பிளாக் அண்ட் ஒயிட் சேலையில் சிரித்த முகமாக போட்டோஸ் ஒன்றை தட்டி விட்டிருக்கிறார் .இந்த புகைப்படத்தை பார்த்ததும் கமெண்டுகளை வீசி வருகிறார்கள் .நெட்டிசன் களையும் கேட்கவே வேண்டாம் அவர்களும் கலாய்த்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதற்கு அசால்டாக ரித்விகா பதிலளித்து அவர்கள் வாயை மூடி வைத்திருக்கிறார்.