Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெயிண்ட் பூசியதால்தான் மரணமா? வேற பிரச்சனை! ரோபோ சங்கர் இறப்புக்கு இந்திரஜா கொடுத்த விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவின் சிறந்த நகைச்சுவை நடிகராக, தனது அசாத்தியமான முகபாவனை, தனித்துவமான உடல்மொழி, மற்றும் வேடிக்கையான பேச்சால் அனைவரையும் சிரிக்க வைத்தவர் ரோபோ ஷங்கர். மேடை சிரிப்புரைஞர், நகைச்சுவை நடிகர், தொகுப்பாளர் எனப் பல துறைகளிலும் கோலோச்சிய இவரின் திடீர் மறைவு, திரையுலகை மட்டுமல்லாமல், இலட்சக்கணக்கான ரசிகர்களின் மனதிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Robo Shankar Indraja Priyanka

திரைப்படங்களில் மகிழ்ச்சியை மட்டுமே கொடுத்த ரோபோ ஷங்கரின் மரணத்திற்குப் பின், தற்போது அவரது குடும்பம் ஆழமான துயரத்தில் மூழ்கியுள்ளது. நெஞ்சை நெகிழவைக்கும் இந்தச் சூழலில், ரோபோ ஷங்கரின் நினைவாக திருவுருவப் புகைப்படத் திறப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த உணர்ச்சிபூர்வமான நிகழ்வில் அவரது குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் பங்கேற்றனர்.

மகள் இந்திரஜாவின் உணர்வுப்பூர்வமான பதில்

படத்திறப்பு விழா முடிந்த பிறகு, ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா செய்தியாளர்களைச் சந்தித்து, தனது குடும்பத்தின் துயரத்தையும், சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனங்கள் குறித்தும் வெளிப்படையாகவும், வலி நிறைந்த குரலிலும் பேசினார்.

ஒரு கலைஞனின் மறைவுக்கும் பின்னரும், அவரைச் சுற்றி எழும் அநாகரிகமான விமர்சனங்களுக்கு இந்திரஜா அளித்த பதில்கள், பலருக்கும் உண்மையான புரிதலை ஏற்படுத்தியுள்ளன. சமூக ஊடகங்களில் சிலர், "ரோபோ ஷங்கர் உடலில் அளவுக்கு அதிகமாக பெயிண்ட் பூசிய பழக்கமே அவரது உடல்நலக்குறைவுக்கும், மரணத்திற்கும் காரணம்" என்று ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்பி வந்தனர்.

இந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த இந்திரஜா, கண்ணீரை அடக்கிக்கொண்டு, "புரிதல் இல்லாமல் விமர்சிப்பதா? உடலில் பெயிண்ட் பூசியதுதான் அப்பா மரணத்திற்குக் காரணம் என்று சிலர் கூறுவதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? எதையும் தெரிந்துகொள்ளாமல் பேசுவது மிகவும் வேதனை தருகிறது" என்று அழுத்தமாகப் பதிலளித்தார். தனது தந்தையின் கலை மீதான அர்ப்பணிப்பைக் கொச்சைப்படுத்தும் முயற்சிகளை அவர் கடுமையாகச் சாடினார்.

அதோடு அப்பாவுக்கு சில பிரச்சனைகள் இருந்தது, அதை இப்போது நான் சொல்ல நினைக்கிறேன். ஆனால் அதற்கான சரியான நேரம் இது இல்லை. அதனால் இந்த நேரத்தில் நான் அதைப்பற்றி சொல்லவில்லை. மற்றொரு நேரத்தில் அதை உங்களிடம் சொல்கிறேன். சிலர் சொல்வது போல பெயிண்ட் பூசியது மட்டும் காரணம் கிடையாது என்று இந்திரஜா விளக்கம் கொடுத்திருக்கிறார்.

டான்ஸ் தான் பிரியாவிடை

இதைவிடவும், ரோபோ ஷங்கரின் இறுதி ஊர்வலத்தின்போது, அவரது மனைவி பிரியங்கா நடனமாடி தனது அன்பை வெளிப்படுத்திய செயல், சமூக வலைதளங்களில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு விமர்சிக்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த இந்திரஜா, தனது தாயின் செயல் எத்தகைய ஆழமான காதல் மற்றும் வேதனையின் வெளிப்பாடு என்பதை உணர்வுப்பூர்வமாக எடுத்துரைத்தார்.

"ரோபோ ஷங்கர் மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே இருந்தது ஒரு ஆழமான காதல். என் தந்தைக்கு நடனம் என்றால் உயிர். இறுதி ஊர்வலத்தில் அம்மா நடனமாடி, தங்கள் காதலை வெளிப்படுத்தினார். அது துக்கத்தின் வெளிப்பாடு அல்ல; அது அவர்களின் 'டான்ஸ் மொழி'. அந்த மொழியில்தான் அம்மா அப்பாவுக்குப் பிரிவிடை கொடுத்தார். இதை விமர்சிப்பது எப்படி நியாயம்?" என்று கேள்வி எழுப்பியதுடன், தங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக நின்ற அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்தார்.

உழைப்பால் மட்டுமே ஒரு கலைஞனாக உயர்ந்த ரோபோ ஷங்கரின் திடீர் மறைவு, அவரது மனைவி பிரியங்காவையும், மகள் இந்திரஜாவையும் ஆறாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. எனினும், விமர்சனங்களுக்குக் கனிவான ஆனால் உறுதியான பதில்களை அளித்த இந்திரஜாவின் வார்த்தைகள், தன் தந்தையின் கலைவாழ்வு மற்றும் தன் தாயின் காதலைப் பாதுகாக்கும் ஒரு மகளின் உணர்வுகளைப் பிரதிபலித்தன. தனது துயரங்களுக்கு மத்தியிலும், விமர்சகர்களுக்கு அளித்த இந்தப் பண்பான பதில்கள் பலருக்கும் புரிதலை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+