Robo Shankar: ரோபோ சங்கர் வீட்டுக்கு கையில் கவருடன் வந்த விஜய பிரபாகரன்! கதறி அழுத இந்திரஜா!
சென்னை: (Robo Shankar funeral) சிரிப்பை மட்டுமே தனது அடையாளம் என்று வாழ்ந்த நடிகர் ரோபோ சங்கர், தனது 46வது வயதில் காலமானார். அவரது மறைவு, தமிழ் திரையுலகை மட்டுமல்லாமல், அவரது குடும்பத்தினரையும், ரசிகர்களையும் மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. ரோபோ சங்கர் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த நடிகர் விஜயகாந்தின் மகன்கள், அவரது இறுதி அஞ்சலியில் கலந்துகொண்டு கண்ணீர் சிந்திய நிகழ்வு, பலரையும் நெகிழ வைத்துள்ளது.

தந்தையின் வழியில் மகன்கள்
ரோபோ சங்கரின் மறைவுச் செய்தி கேட்டதும், நடிகர் விஜயகாந்தின் மகன்களான விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் இருவரும் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அப்போது விஜய பிரபாகரன், தனது கையில் ஒரு வெள்ளை கவரை வைத்திருந்தார், அது விஜயகாந்தின் தாராள மனப்பான்மையை நினைவுபடுத்தியது. தந்தையைப் போலவே மகனும், துயரத்தில் இருக்கும் ஒரு குடும்பத்திற்கு நேரடியாக உதவ வந்ததை, பலர் பாராட்டி வருகின்றனர்.
விஜய பிரபாகரனைப் பார்த்ததும், ரோபோ சங்கரின் மனைவி பிரியங்காவும், மகள் இந்திரஜாவும் கதறி அழுதனர். அந்த உருக்கமான காட்சியைப் பார்த்த விஜய பிரபாகரனும் கண்கலங்கி அழுதுவிட்டார். சண்முக பாண்டியன், பிரியங்கா மற்றும் இந்திரஜாவுக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய பிரபாகரன், "ரோபோ சங்கர் அண்ணன் இன்று இல்லை என்பது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அவர் அப்பாவைப் போலவே பேசிப் பிரபலமானார். அப்பாவுக்கு ரொம்பவும் பிடித்த நடிகர். அப்பாவின் கடைசி காலத்தில் கூட இவர் நேரில் வந்து பார்த்துப் பேசியிருந்தார். இன்று அவர் இல்லை. அவருடைய குடும்பத்தினர் உடைந்து போயிருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் எல்லாரும் தான் உறுதுணையாக இருக்க வேண்டும்" என்று கூறினார்.

கண்ணீர் வரவழைத்த ரோபோ சங்கர்
ரோபோ சங்கர் இறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்பு, விஜயகாந்த் பற்றிப் பேசிய ஒரு பேட்டி இப்போது வைரலாகி வருகிறது. "விஜயகாந்த் சார் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நேரத்தில் நான் அவருடைய வீட்டிற்குப் போயிருந்தேன். அப்போது பிரேமலதா அண்ணி, உங்க மாதிரியே பேசுவாரில்ல ரோபோ சங்கர்... அவர் வந்திருக்காருனு சொன்னாங்க. உடனே பக்கத்தில் போய் நின்றேன். விஜயகாந்த் அய்யா என் கையைப் பிடித்துக்கொண்டு பேசு பேசு என்றார். அப்போ நான் அவர் போலப் பேசிக் காட்டினேன். அவருடைய கண்களிலிருந்து தாரைதாரையாகக் கண்ணீர் வந்தது" என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார்.
ரோபோ சங்கர் மேலும், "விஜயகாந்த் போல ஒருவரைப் பார்க்கவே முடியாது. அவர் இந்த உலகத்தை விட்டுப் போய்விட்டார் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை" என்று கூறியிருந்தார். ஆனால், இன்று அவரும் அதே பாதையில் பயணித்துள்ளார். ஒரு கலைஞன் தனது ஆதர்ச நாயகனின் மறைவுக்கு வருந்திப் பேசி சில மாதங்களிலேயே அதே துயர நிலைக்கு ஆளானது அனைவரையும் வருத்தம் அடைய செய்து இருக்கிறது.
ரோபோ சங்கரின் அண்ணன் கண்ணீர்
ரோபோ சங்கரின் மறைவுக்குப் பல பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி, அவரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர். அவரது அண்ணன் சிவகங்கை சிவா பேசும்போது, "ரோபோ சங்கர் பாடி பில்டிங் பண்ணிட்டு இருந்தான். முதல் முறையாக இரண்டு ஜெஸ்ட்டையும் (நெஞ்சு பகுதி) மேலே கீழே தூக்கிக் காட்டிய ஒரே பாடி பில்டர் அவன் தான். மேடை நிகழ்ச்சிகளுக்காக அலுமினியம் பெயிண்ட் பூசிக்கொண்டு போனதுதான் அவனுடைய இந்த நிலைக்குக் காரணமாகிவிட்டது எனத் தோன்றுகிறது" என்று கண்ணீருடன் குறிப்பிட்டார்.
பாடல் ஆசிரியர் சினேகன் பேசும்போது, "ரோபோ சங்கர் ஏறிய முதல் மேடையிலிருந்து அவருடன் நான் இருந்திருக்கிறேன். தனது உடல்நிலையை சரியாக கவனிக்கவில்லை எனப் பல நண்பர்கள் அவரிடம் கவலைப்பட்டோம். ஆனால், மனம் சொன்னதை மட்டுமே கேட்டுச் செயல்பட்டார்" என்று வருத்தத்துடன் கூறினார்.
ரோபோ சங்கரின் இந்த திடீர் மறைவு, அவரது வாழ்க்கையின் இறுதிப் பக்கத்தில் வலிகளையும், துயரத்தையும் மட்டுமே தந்திருந்தாலும், அவரது நினைவுகள் என்றும் சிரிப்பைத் தந்துகொண்டே இருக்கும்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications