அவள் இடுப்பில் அழகு மச்சம்... இவன் கையில் சூலம் டாட்டூ!
சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியல் கதை இப்போது அர்ஜுன் தம்பி அஸ்வினிடம் திரும்பி உள்ளது. அந்த வீட்டு பொண்ணு என்று பொய் சொல்லி அடைக்கலம் புகுந்து இருக்கும் அணு இனி அர்ஜுன் தனக்கு கிடைக்க மாட்டான் என்கிற முடிவுக்கு வந்துட்டறா.
ஆனா,பையா கொலை கேசில் அணுவும் இருக்கா... சாக்ஷியும் இருக்கான்னு வக்கீல் அர்ஜுனுக்கு தெரிஞ்சு போகுது.ஆனால், ஆதாரத்துக்குத்தான் இப்போது காத்து இருக்கான்.
ஜெயிலில் இருக்கும் சாந்த மூர்த்தி ஐயாவிடம் சில ஆதாரங்களை காமிச்சா அர்ஜுன் மனைவி ரோஜாவின் அப்பா அம்மா யாருன்னு தெரிஞ்சுரும்னு ஆதாரத்துடன் அர்ஜுன் ஜெயிலுக்கு போறான்
அடப்பாவி....காதலி போன் வந்துச்சு....பொண்டாட்டி ஜனனியை நினைக்காம ஆஃபீஸ்ல தங்கிட்டானே....!
அனுவுக்கு உண்மை தெரிஞ்சு
அர்ஜுன் தனது அப்பா டைகர் மாணிக்கமிடம் அனுவின் சின்ன வயசு போட்டோ,சின்ன வயசில் அணு போட்டு இருந்த கவுன் எல்லாத்தையும் வாங்கிகிட்டு ஜெயிலுக்கு போறான் அர்ஜுன்.அணு இதை சாக்ஷியிடம் சொல்லி என்னைக் காப்பாத்துன்னு கேட்கறா.
ஏன் இதுக்கு பயம்?
இதுக்கு எதுக்கு அணு நீ பயப்பட்டறே...அது உன்னோட சின்ன வயசு கவுன்தானேன்னு கேட்கறா சாக்ஷி. இல்லை.. ரோஜாவோட கவுன் அது.ரோஜாதான் உண்மையில் அந்த வீட்டு பொண்ணு.அதை நான் பொய் சொல்லி காமிச்சு நம்ப வச்சிருக்கேன்னு அணு சொல்றா.
சாக்ஷி ஷாக்
ஷாக்கான சாக்ஷி ..அடிப்பாவி..இந்த உண்மையை என்கிட்டே நீ சொல்லவே இல்லையே..நீ கெட்டவன்னு எனக்கு தெரியும்.ஆனா,இவ்ளோ கேடு கெட்டவன்னு .தெரியாதுன்னு சொன்ன சாக்ஷி... சரி விடு நான் பார்த்துக்கறேன்னு சொல்லிட்டு ஜெயிலில் இருக்கும் சாந்த மூர்த்தி ஐயாவை மிரட்டி, அர்ஜுனிடம் பொய் சொல்ல வைக்கிறாள்.
நானும் பையா கொலையில்
நானும் பையா கொலைக் கேகில் மாட்டிப்பேன்னுதான் உன்னை காப்பாத்தினேன்...அணு நீ நிரந்தரமா ஜெயிலுக்கு போகாம இருக்கணும்னா...அர்ஜுன் தம்பி அஸ்வினையாவது கல்யாணம்பண்ணிக்கிட்டு அந்த வீட்டில் செட்டிலாகிரு.கேஸ் முடிஞ்சவுடன் வாழு வாழாமப்போ..அது உன் விருப்பம்..இப்போதைக்கு தப்பிக்க அஸ்வி னை கல்யாணம் செய்துக்கோன்னு சொல்றா.
காதலில் விழுந்தான் .
அஸ்வின் ஏற்கனவே காதலில் விழுந்துட்டான்.ஒரு அழகான பொண்ணு ரவுடிங்ககிட்ட இருந்து போனை எடுத்துக்கிட்டு தப்பிச்சு ஒடி வருது.அந்த பொண்ணு இவன் மார்பில் சாய்ஞ்சு,டேய் உன் பாக்கெட்டுல ஓரு போன் போட்டு இருக்கேன்.அதுல தப்பான வீடியோ ஆதாரமிருக்கு.அதை ஓபன் பண்ணி பார்த்தே... கொன்னுருவேன்னு குனிஞ்சுக்கிட்டே மிரட்டறா.
அஸ்வின் இவள் இடுப்பிலிருந் மச்சத்தையும் அவள்,இவன் கையில் போட்டு இருக்கும் டாட்டூவையம் அடையாளம் பார்த்துக்கறாங்க . இவ மேலதான் அஸ்வினுக்கு லவ் வந்துருது..