Roja Serial: ரோஜா ஹைதராபாத்தில் தீபாவளி கொண்டாட்டம்!
சென்னை: சன் டிவியின் சீரியல் நட்சத்திரங்கள் அதே குடும்பத்தின் அங்கத்தினர்களாக பேசவைத்து சன் டிவி தனது முக நூல், ட்வீட்டர், இந்மஸ்ட்டாகிராம் பக்கத்தில் பகிர்வது அதிகரித்து வருகிறது.
சன் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் குடும்பத்தினர் இன்று நேரலையில் வந்து ரசிகர்களை மகிழ்வித்தனர்.
இதில் ரோஜா, அணு, யசோதா மட்டுமே வந்திருந்தனர்.நொடிக்கு இரண்டு மூன்று கேள்விகள் என்று ரசிகர்கள் கேட்டுக்கொண்டே இருந்தனர். ஆனால், இவர்களால்தான் எல்லாருக்கும் பதில் சொல்ல முடியவில்லை.
ஆஸ்ரமம் ரோஜா
அனாதை ஆஸ்ரமத்தில் வளர்ந்த பெண்ணாக அணு, ரோஜா இருவரும் இருக்கிறார்கள். ஆஸ்ரமத்தின் பொறுப்பாளராக இருந்த சாந்த மூர்த்தி மீது பையா கணேஷ்கொலை பழி விழுந்துட ஆஸ்ரமத்துக்கு சீல் வைக்கப் படுகிறது. இதனால், பெரும் கஷ்டத்துக்கு ஆளாகிறாள் ரோஜா.
Naam iruvar namakku iruvar serial: கெத்துதான் அதுக்குன்னு எது செய்தாலுமா....?
தந்திரமாக அணு
அணு தந்திரமாக ரோஜாவின் சிறு வயது போட்டோ, உடைகளை எடுத்து வந்து தான்தான் அன்னப் பூரணி அம்மாவின் பேத்தி என்று தஞ்சம் புகுந்து விடுகிறாள் .சீரியல்படி பையா கணேஷை கொலை செய்தவளும் அணுதான். அணுவை கல்யாணம் செய்துகொள்ள விருப்பம் இல்லாத லாயர் அர்ஜுன், தன்னிடம் சாந்த மூர்த்தி ஐயா கேசுக்காக வந்த ரோஜாவை கல்யாணம் செய்துகிட்டு வீட்டுக்கு அழைச்சுட்டு வர்றான்.
பாட்டியாக வடிவுக்கரசி
வடிவுக்கரசி அன்னபூரணியாக நடிச்சு அனாதை குலம் கோத்திரம் தெரியாதவள் என்று எப்போதும் ரோஜாவைத் திட்டுவதும், ரோஜாவுக்கு புருஷன் அர்ஜுன் சப்போர்ட் பண்றது என்றும் சீரியல் எல்லாமும் கலந்து போகிறது. ஆனால், சீரியல் மாலை 7 மணி நேரத்துக்கு நல்ல ரேட்டிங்கில் உள்ளது. இதை வச்சு இன்னும் ரசிகர்களை திருப்தி படுத்த, ரோஜா,அணு, யசோதா கதா பாத்திரங்களை நேரலையில் பேச வைத்து இருக்கிறார்கள்.
தீபாவளி ஹைதராபாத்தில்
ஹைதராபாத்தில் தீவாளி கொண்டாட்டம் ரொம்ப நல்லா இருக்கும். வீடு முழுக்க லைட்ஸ், விளக்கு, நல்ல அலங்காரம், புது டிரசுன்னு ரொம்ப கொண்டாட்டமா இருக்கும்.கொலு பொம்மை அலங்காரம் என்றும் ரோஜா சொல்கிறார்.தீபாவளி வரை ஆந்திராவில் கொலு வைப்பார்கள் போலும். இதுபோன்ற நேரலைகளை எத்தனையோ ஆயிரம் பேர் பார்த்து ரசிக்கின்றனர்.