குத்திக் குடையும் மாமியார்களுக்கு மத்தியில்.. வாரிக் குவிக்கும் ரூபஸ்ரீ!
சென்னை: பாரதிகண்ணம்மா சீரியலில் இது வரைக்கும் பாசமான மாமியாராக பார்த்துக்கொண்டிருந்த ரூபஸ்ரீ இந்த சீரியலில் சௌந்தர்யா கேரக்டரில் நடித்திருக்கிறார் .
இவர் இந்த சீரியல் ஆரம்பித்த காலகட்டத்தில் பலபேர் திட்டி தீர்த்த மாமியாராக இருந்தாலும் தற்போது மாமியார் என்றால் இந்த மாதிரி ஒரு மாமியார் தான் இருக்கவேண்டும் என்று பலபேர் ஆசைப்படுகிற அளவிற்கு அனைவரின் மனதிலும் நல்ல ஒரு இடத்தை பிடித்து விட்டார்.
இவர் இதற்காகத்தான் இவ்வளவு நாட்கள் காத்திருந்தாராம் அந்த இடத்தை பிடித்ததும் ரொம்பவே சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கும் இவர் தற்போது ஒரு குழந்தை போல இவரும் மாரி குழந்தையுடன் ஆடிய ஆட்டம் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.

மலையாளத்து ரூபஸ்ரீ
ரூபஸ்ரீ முதன்முதலில் மலையாள படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் அவர் தமிழில் அறிமுகமானது எங்க வீட்டு வேலன் என்னும் திரைப்படத்தின் மூலமாகத்தான் .அந்த படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமாகியிருக்கிறார். ஆனாலும் அதனை பிறகு யாவரும் நலம் போன்ற திரைப்படங்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.

சீரியலில் கலக்கல்
ஆனால் இவருக்கு திரைப்படங்களில் தான் நினைத்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை அதனால் திருமணத்திற்கு பிறகு இவர் சீரியலில் நடிப்பதற்கு களம் இறங்கி இருக்கிறார். பல நடிகைகளுக்கு தான் எதிர்பார்த்த அளவிற்கு முதல் இன்னிங்சில் கோல் வில என்றாலும் இரண்டாவது இன்னிங்சில் வெற்றி அடைந்து விடுகிறார்கள்.

மாமியாராக அசத்தல்
அந்த மாதிரிதான் இவர் கதாநாயகியாக கலக்க முடியாவிட்டாலும் சீரியல்களில் தற்போது அம்மா கேரக்டரிலும் மாமியார் கேரக்டரிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார் .முதல் முதலில் சன் சன் டிவியில் சீரியலில் இவர் அறிமுகமாகி இருந்தாலும் அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலமாக குடும்ப பெண்களின் வரவேற்பைப் பெற்றார்.

கண்ணம்மாவின் மாமியார்
தற்போது இவர் பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் மாமியாராக அனைத்து பெண்களின் மனதிலும் வாழ்ந்து வருகிறார். சௌந்தர்யா என்னும் கேரக்டருக்கு பொருத்தமாக இவர் தான் இருப்பதாக பல்வேறு ரசிகர்களும் கூறி வருகிறார்கள் .அந்த அளவிற்கு இவர் தற்போது ரசிகர்களிடம் மனதில் நல்ல இடத்தைப் பெற்றுவிட்டார்.

பாராட்டித் தள்ளும் வாய்கள்
இதற்கு முன்பு இவரை கழுவி கழுவி ஊற்றிய ரசிகர்கள் கூட தற்போது புகழ்கிறார்கள் இந்த சீரியல் திடீரென்று இந்த அளவிற்கு பாப்புலர் ஆவதற்கு காரணம் ரூபஸ்ரீயும் ஒருவர். அதனாலே இவர் பல பெண் ரசிகர்களின் செல்ல மாமியாராக மாறிவிட்டார். அடிக்கடி ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்யும் சேட்டைகளை வீடியோ காக தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வரும் இவர் தற்போது வீடியோவில் கலக்கியுள்ளார்.

குத்து
எல்லோரும் ஆட்டம் போடும் போட்டான புட்ட பொம்மா பாடலுக்கு அந்த சீரியலின் குழந்தையோடு இவரும் குழந்தையாக மாறி ஆட்டம் போட்ட வீடியோக்கள் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்ததும் ரசிகர்கள் நீங்கதான் இந்த சீரியலில் மாமியார் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் . கதாநாயகி மாதிரி இருக்கீங்க என்று இவருக்கு ஐஸ் வைத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications