உங்களுக்கு கஷ்டமா இருந்தா உடனே வெளியே போங்க! இயக்குனர் சொன்ன வார்த்தை.. சாய் பல்லவி ரியாக்ஷன்
சென்னை: நடிகர் சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவான தண்டேல் படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சியில் சாய்பல்லவி கலந்து கொண்ட போது அவரிடம் இயக்குனர் உங்களால் இருக்க முடியவில்லை என்றால் வெளியே போங்க என்று பேசி இருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
நடிகை சாய் பல்லவி சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்து இப்போது கொடிகட்டி பறந்து வருகிறார். டிவி நிகழ்ச்சியில் டான்ஸ் ஆட வந்து அவருடைய டான்ஸ் சரியில்லை என்று நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் இப்போது அவருடைய டான்ஸ் பலருடைய ஃபேவரைட்டாக மாறி இருக்கிறது.

எந்த இடத்தில் புறக்கணிக்கப்பட்டாரோ அதே இடத்தில் அதைவிட இப்போது பெரிதாக வளர்ந்து நிற்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் சாய் பல்லவி நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே ஹிட் அடித்துக் கொண்டிருக்கிறது. தமிழில் சில மாதங்களுக்கு முன்பு நடிகர் சிவகார்த்திகேயனோடு நடித்த அமரன் திரைப்படம் வெளியாகி பட்டித்தொட்டி எல்லாம் வெற்றி அடைந்தது.

அதைத் தொடர்ந்து இப்போது நாக சைதன்யாவுடன் சாய் பல்லவி தண்டேல் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு காதல் திரைப்படமாக எடுத்து முடித்திருக்கின்றனர்.
இந்த திரைப்படத்தை இயக்குனர் சந்து முன் பேட்டி இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. அதில் கார்த்திக் சுப்புராஜ், வெங்கட் பிரபு, நடிகர் கார்த்தி என்று பல பிரபலங்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அப்போது இந்த நிகழ்ச்சியில் பேசிய வெங்கட் பிரபு நாக சைதன்யா கூட கஷ்டடி திரைப்படத்தை இயக்கி இருக்கிறேன். ரெண்டு வருஷம் கழிச்சு அவரை இப்போதுதான் பார்க்கிறேன்.

அவர் கதைகளை தேர்வு செய்யும் விதம் ரொம்பவே பயங்கரமாக இருக்கும். சொல்லப்போனால் அவருக்கு கதை சொல்லி சமாதானப்படுத்துவது ரொம்ப கஷ்டமாக இருக்கும். இந்த திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது என்று நடிகர் கருணா சொன்னாரு. ட்ரைலர் பார்க்கும்போது அந்த படத்திற்காக எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்காங்க என்று தெரிகிறது.
சாய்பல்லவி மேடம்க்கு மிகப்பெரிய ரசிகன் நான். பல டைரக்டர் சாய்பல்லவி மேடமோட ரசிகர்கள் என்று நினைக்கிறேன். அந்த அளவுக்கு நல்லா நடிக்கிறாங்க என்று பாராட்டி இருந்தார். அதைத் தொடர்ந்து இசைஅமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாந்த் பேசும்போது இந்த படத்தின் போஸ்டர் வெளியான போது நாக சைதன்யாவின் கெட்டப்பை பார்த்து ரொம்பவும் மிரண்டு போயிட்டேன்.
இது நம்ம நாக சைதன்யாவா என்று எனக்கே வியப்பாக இருந்தது. ஏனென்றால் அந்த படத்தில் அந்த அளவிற்கு அவர் ரொம்ப மாறி இருக்கிறார். ஒரு கடல் சார்ந்த படம் என்றாலே அது தமிழ்நாட்டுடன் தொடர்புடையதாகவே காணப்படுகிறது. கண்டிப்பா இந்த படம் எல்லோருக்கும் ஸ்பெஷல் படமாக இருக்கும் என்று பாராட்டி விட்டு சாய் பல்லவி பற்றி தேவி பிரசாந்த் பேசும்போது மணிரத்தினம் சார் சாய்பல்லவிக்கு ரசிகர் என்று சொல்லிவிட்டார்.
இந்த படம் இடம் பெற்ற பாடலில் சாய் பல்லவி நடனம், கோரியோகிராபி என எல்லாமே அட்டகாசமாய் இருக்கிறது. ஒரு பாட்டு ஹிட் ஆகணும்னா அதில் பல்லவி அவசியம் என்று சொல்லிய தேவி பிரசாத் நான் சொன்னது சாய்பல்லவி இல்லை என்று கிண்டல் செய்திருந்தார்.
அதை தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் சாய் பல்லவிக்கு உடல்நிலை சரியில்லை. அவரா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என்று சொல்லி இருந்தார். ஆனாலும் வலுக்கட்டாயமாக நாங்க தான் அவரை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சொன்னோம். இவ்வளவு நேரம் அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்தது எங்களுக்கு ரொம்பவும் சந்தோஷம். அதனால் முடியலன்னா தயவு செய்து வெளியே போறீங்களா? என்று மைக்கில் கேட்டதும் ஒரு நிமிடம் திகைத்து போன சாய்பல்லவி, வேண்டாம் நான் அட்ஜஸ்ட் செய்து கொள்கிறேன் என்று சிரித்தப்படியே சொல்லி இருக்கிறார்.
அதற்கும் தயாரிப்பாளர் இல்ல நீங்க போகலாம் என்று சொல்ல அதற்கு சாய் பல்லவி நான் ஹீரோ பேசினதும் போறேன் என்று சொல்லியிருக்கிறார் அதற்கு தயாரிப்பாளர் அவர் ஏற்கனவே சொல்லி வச்சாரு நான் பேசின பிறகு தான் நீங்க போகணும்னு சொல்லி இருக்காரா என்று கேட்டிருக்கிறார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அதிகமான ரசிகர்கள் ஒருத்தங்க உடம்பு சரியில்லன்னா அவங்கள போக சொல்லி மைக்ல தான் சொல்லுவீங்களா? என்று தயாரிப்பாளரை கிண்டல் செய்து வருகிறார்கள்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications