நான் ராத்திரி டைட்டாதான் தூங்குவேன்.. போட்டோ போட்ட சாக்ஷி.. குவிந்த கமெண்ட்டுகள்!
சென்னை: நான் ராத்திரி அந்த மாதிரி தான் தூங்குவேன் என அனைவருக்கும் வெளிச்சம் போட்டு காட்டிய சாக்ஷி அகர்வாலுக்கு நெட்டிசன்கள் இந்த மாதிரி எல்லாம் கமெண்ட் போடுவார்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
அந்த அளவிற்கு சாக்ஷி அகர்வால் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து கமெண்டுகளில் பாடாய்படுத்துகிறார்கள் நெட்டிசன்கள்.
சாக்ஷி அகர்வால் திரைப்படங்களில் அறிமுகம் ஆகி இருப்பதற்கும் தற்போது இருப்பதற்கும் நிறையவே வித்தியாசத்தை கொண்டு வந்து விட்டார்.

சில்வண்டு போல சிலிர்த்து
இவர் காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடிக்கும் போது புசுபுசுவென இருந்த இவர் தற்போது உடற்பயிற்சிகளால் சிக்கென மாறி சில்வண்டு போல சிலுத்து வருகிறார். இவருடைய சேட்டைகளும் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .இவர் விதவிதமாக போட்டோ ஷூட் எடுக்கிறேன் என்ற பெயரில் ரசிகர்களை பாடாய் படுத்தி எடுத்து வருகிறார் .

பெட்ரூம் வரை
ஜிம்மில் தொடங்கி பெட்ரூம் வரைக்கும் தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ரசிகர்களுக்காக வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டிருக்கிறார் .இவருடைய போஸ்ட் பார்த்ததும் ரசிகர்கள் ஹாட்டின்களை பறக்க விட்டபடி இருக்கின்றனர். உடற்பயிற்சி செய்வதில் அதிக ஆர்வம் கொண்ட இவரைப் பார்த்து பல பேர் தாங்களும் இந்த மாதிரி செய்யலாம் என யோசிக்கும் வகையில் ஈஸியாகவும பார்ப்பவர்களையும் மீண்டும் மீண்டும் பார்க்கத்
தூண்டும் அளவிற்கு கவர்ச்சியாகவும் தன்னால் முடிந்த அளவிற்கு வீடியோவை வெளியிட்டு வருகிறார்

இப்படிப் பண்ணலாமே
இவருடைய வீடியோக்களை பார்த்ததும் இந்த மாதிரி பண்ண ரொம்ப ஈசியா இருக்கிறதே என பல பேர் இவரைப் பின்தொடர்ந்து வருகின்றனர் .கொரானாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அனைவரும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என இவர் அடிக்கடி உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு வந்தாலும் பலபேர் உடற்பயிற்சி செய்வதற்காகவும் சிலர் இவருடைய அழகை ரசிப்பதற்கும் இவருடைய வீடியோக்களை பார்த்து வந்து கொண்டிருக்கின்றனர்.

போட்டோஸ்தான்
இவர் புதியதாக சில படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் பிக் பாஸுக்குப் பிறகு இவருக்கு அதிகமாகவே பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்ளும் போது இவருடைய ரசிகர்கள் பலர் இந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் செல்ல வேண்டாம் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டுக் கொண்டே இருங்கள் என அன்புக் கட்டளையிட்டு வந்தனர் .

கவர்ச்சி ரசம்
ஆனால் இவர் அந்த வீட்டிற்குள் இருக்கும் போதும் நான் நானாகத்தான் இருப்பேன் என தன்னுடைய சேட்டையாளும் அழகா லயும் அனைவரையும் கவர்ந்து இழுத்தவர். ஆனால் இந்த வீட்டிற்குள் அவரால் கடைசி வரைக்கும் இருக்க முடியவில்லை என்றாலும் பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு விட்டு தான் வெளியே வந்து இருக்கிறார்.

தனிப் பெரும் ராணி
இன்ஸ்டாகிராம் இவருக்கு போட்டியாக பல நடிகைகள் போட்டோஷூட் நடத்திக் கொண்டிருந்தாலும் இவருடைய இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை .இவர் ஒரு போஸ்ட் போட்டாலும் ஒரு மணி நேரத்துக்குள் லைக்களும் கமெண்டுகளும் மலைபோல உயர்ந்து வருகிறது .அதுவும் நாளுக்குநாள் இவருக்கு ரசிகர் வட்டாரமும் பெருகிக் கொண்டிருக்கிறது.

டைட்டா தூங்குவேன்
யாரும் எதிர்பார்க்காத வகையில் இவர் தற்போது படுக்கை அறையில் உள்ளாடையோடு அமர்ந்தபடி இந்த மாதிரிதான் நான் நைட்டு தூங்குவேன் என அதிரடியாக போட்டோவை வெளியிட்டிருக்கிறார் .இதனை பார்த்ததும் பலபேர் தலக்கி தில்லு பாத்தியளா என கேட்டு வருகின்றனர் .அந்த அளவிற்கு சிலருக்கு பார்த்ததும் சில்லரையை அங்கே போட வேண்டும் என தோன்றுகிறதாம். ரொம்பத்தாம் குசும்பா போச்சு ரசிகர்களுக்கு.












Click it and Unblock the Notifications