Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நச்சரிச்ச மொட்டை சுரேஷ்.. சனம் மட்டும் வாயைத் திறந்தா போச்சு..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நாலு தொடங்கியதிலிருந்து வீட்டுக்குள் வாலுத்தனம் ஜாஸ்தியாவே போய்ட்டிருக்கு.

அடிக்கடி சண்டை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த நிகழ்ச்சியில் தற்போது தான் கேம் ஷோக்களில் களை கட்ட ஆரம்பித்து இருக்கிறது. இதுவரைக்கும் சண்டை போட்டுக் கொண்டிருந்தவர்கள் இன்று அவர்கள் மனதில் இருப்பதையெல்லாம் கொட்டி தீர்த்து இருக்கிறார்கள்.

விடுவார்களா நம்ம ரசிகர்கள். இதற்குத்தானே காத்திருந்தார்கள். இதைப் பற்றி ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள்.

 அரச குடும்பம்

அரச குடும்பம்

நேற்றைய எபிசோடில் அரக்கர் குடும்பத்திற்கும் மன்னர் குடும்பத்திற்கும் போட்டி என்று வைத்திருந்தார்கள். அதில் அரக்கன் குடும்பத்தின் தலைவராக சுரேஷ் சக்கரவர்த்தி இருந்தார். அரச குடும்பத்தின் மன்னராக வேல்முருகன், அவருடைய மனைவியாக நிஷாவும் இருந்தனர். அரச குடும்பத்தில் ரியோ, பாலாஜி சோமசேகர் ,ரம்யா, சனம் ஷெட்டி மற்றும் சம்யுக்தா இடம்பெற்றிருந்தனர்.

 அரக்கி அனிதா

அரக்கி அனிதா

அரக்கர் குடும்பத்தில் ஆஜித் ,ஷிவானி, கேப்ரில்லா ,ஜித்தன் ரமேஷ், அனிதா மற்றும் அர்ச்சனா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். அரக்கர்கள் குடும்பம் தொந்தரவு செய்ய வரும் போது அரச குடும்பத்திலிருந்து ஒருவர் சென்று சிலையாக இருக்க வேண்டும் . குறிப்பிட்ட நேரம் வரை தாக்குப் பிடித்தால் அவர்கள் வெற்றி பெற்றதாக அர்த்தம். இல்லை எனில் அரக்கர்கள் குடும்பத்தில் அடிமையாக இருக்க வேண்டும்.

 சிலையாக மாறிய போட்டியாளர்கள்

சிலையாக மாறிய போட்டியாளர்கள்

இந்த டாஸ்க் கொஞ்சம் விரு விருப்பாக தான் இருந்தது. ஏனென்றால் அரக்கர்கள் குடும்பத்தின் கொலைவெறி தாக்குதலை சிரிக்காமல் அரச குடும்பத்தினர் சிலையாக இருந்து வந்தனர். அதில் பாலாஜியும், சோமசுந்தரமும் தோற்றுப்போய் அரக்கர்கள் குடும்பத்தில் அடிமைகளாக போய்விட்டனர் . ஆனால் சனாம் மற்றும் சம்யுக்தா, ரியோ 3 பேரும் வெற்றி பெற்று மீண்டும் அரசர்கள் குடும்பத்தில் வந்துவிட்டனர்.

 சனத்தை வைத்து கும்மியடித்த சுரேஷ்

சனத்தை வைத்து கும்மியடித்த சுரேஷ்

அதில் சனம் வரும்போது சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் அர்ச்சனா எல்லோரும் சேர்ந்து சனத்தை ஒருவழி படுத்தி விட்டார்கள். இதுவரையிலும் மனதில் இருந்ததை அப்படியே திட்டி தீர்த்தும் விட்டனர். எப்பவும் சண்டக்கோழி ஆக சீறிக் கொண்டிருக்கும் சனம் இதில் தலைவிரிகோலமாக குனிந்த தலை நிமிராமல் கீழே பார்த்தபடி அமைதியாக இருந்தார். இதில் முதல்முறையாக இவரை இப்படி பார்ப்பதால் ரசிகர்களும் விழுந்து விழுந்து சிரித்து இருக்கிறார்கள்.

 அசைக்க முடியலையே

அசைக்க முடியலையே


எவ்வளவோ இவரை கோபப்படுத்தி பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் கோபத்தை எல்லாம் அப்படியே கண்ட்ரோல் பண்ணி இருந்து விட்டார். அவர் கோபத்தை கண்ட்ரோல் பன்னி அப்படியே இருந்ததை பார்த்து ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள். சக்கரவர்த்தி கிண்டல் பண்ணும் போது இன்னும் எவ்வளவு வேணாலும் பேசு நான் கேம் முடிந்ததும் உங்க கூட சண்டைக்கு வருகிறேன் என்று மீம்ஸ் போட்டிருக்கிறார்கள்.

 சனம் திறந்தா போச்சு

சனம் திறந்தா போச்சு

சுரேஷ் சக்கரவர்த்தி சனத்தை பார்த்து எப்பவும் எந்தப் பிரச்சினைகளும் மூக்கை நுழைத்துக் கொண்டு வருவாயே இப்பொழுது பேசு பார்ப்போம் .இப்போது போது வாயை திறந்து பேசு என்றெல்லாம் இவரை கலாய்த்துக் கொண்டிருந்தார். அதற்கு யோ சும்மா இருய்யா மொட்ட அவ வாய திறந்தா கலகலப்பு 2 படத்தில் அஞ்சலி கத்தும் போது அனைவரும் பறப்பதுபோல பறந்து விடுவீர்கள் என்று மீம்ஸ் போட்டு கலாய்க்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+