Sarathkumar: எனக்கும் ராதிகாவுக்கும் சண்டை? வீடு பற்றிய பேச்சு! இதுவரை நடக்காத அதிசயம்! நெகிழ்ந்த சரத்குமார்
சென்னை: சில நாட்களாக சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்ட விஷயங்களில் சரத்குமார் (Sarathkumar) மற்றும் ராதிகா சரத்குமார் வாழும் அந்த பிரமாண்ட வீடு பற்றிய தகவலும் இருந்தது. 14 ஆயிரம் சதுர அடியில் அமைந்த அந்த பங்களா, 500 கோடி மதிப்பு, 7 கதவு, 15 வேலைக்காரர்கள்... இப்படி கதைக்கு கதை சேர்த்து பேசப்பட்டதால் ரசிகர்களே குழப்பத்தில் ஆழ்ந்துவிட்டனர்.
இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது புதிய படம் 'ஆழி' தொடர்பான பேட்டியில் சரத்குமார் வழக்கமான சீரியஸ் டோனில் இல்லாமல், முழுக்க ஜாலியான பாணியில் பதில் சொல்லியிருக்கிறார்.

சரத்குமார் பேட்டி
"நான் கட்டியது பெரிய வீடு தான்... அதில் சந்தேகமே இல்லை. குடும்பம் பெரியது... எல்லாரும் சேர்ந்து இருக்கணும் என்ற ஆசையில்தான் கட்டினேன். ஆனா அது 500 கோடி என்று சொன்னது எங்கிருந்து வந்த கணக்கு?" என்று சிரித்தபடி கேட்டார்.
அதோடு நின்றுவிடாமல், "என்னிடம் உண்மையிலேயே 500 கோடி இருந்திருந்தால் நான் இன்னும் சினிமாவில் கஷ்டப்பட்டு வேலை பார்த்திருப்பேனா? அந்த பணத்தை வங்கியில் போட்டுட்டு வட்டி வாங்கி ரிலாக்ஸாக இருந்திருப்பேன்" என்று அவர் சொன்னபோது பேட்டி itself ஒரு காமெடி டிராக்காக மாறிவிட்டது.
வீட்டை பராமரிக்க முடியாமல் வாடகை வீட்டுக்கு மாறிவிட்டார்களாம் என்ற பேச்சு பற்றியும் அவர் மிக லைட்டாகவே எடுத்துக்கொண்டார். பெரிய வீடு இருந்தால் பராமரிப்பு இருக்கும்; அதற்காக கதவுகளை எண்ணி கதைகள் உருவாக்க வேண்டாம் என்பதுதான் அவரது கருத்து.
இந்த பேட்டியில் சரத்குமார் பேசும் போது தெரிந்த முக்கிய விஷயம் - அவர் இந்த ருமர்களை கோபமாக அல்ல, காமெடியாக பார்க்கிறார் என்பதுதான். அதே நேரத்தில் பற்றிய வதந்திகளுக்கும் பதிலடி கொடுத்திருக்கிறார்.
மேலும் படங்களைப் பற்றியும் அவர் பேசினார். சினிமாவில் ஹீரோவாக மாஸ் காட்டிய காலத்திலிருந்து இன்று குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து பிஸியாக இருப்பது வரை அவரது பயணம் இன்னும் ஸ்ட்ராங் ஆகவே இருக்கிறது. 70 வயதை கடந்த பிறகும் ஜிம் போய் வொர்க்அவுட் செய்வது, தொடர்ந்து புதிய படங்களில் நடிப்பது - இவை எல்லாம் இளம் தலைமுறைக்கு அவர் ஒரு ரோல்மாடல் ஆக இருப்பதற்கான காரணங்களாகவே பார்க்கப்படுகிறது.
ஒரே நாளில் தனது படமும், ராதிகாவின் படமும் வெளியாகிறது என்ற கேள்விக்கும் அவர் சிரித்தபடியே ரியாக்ட் செய்தார். "வீட்டில் போட்டி இல்ல...ஆனால் தியேட்டரில் எங்க ரெண்டு பேருடைய படமும் ஒரே நாளில் வருவது போட்டியாக தான் பார்க்கப்படுகிறது " ஒரு சிலர் ராதிகாவிற்கும் சரத்குமாருக்கும் போட்டி என்று கூட பேச தொடங்கி விட்டார்கள் .
ஆனால் நான் கேள்விப்பட்ட வரைக்கும் சினிமாவில் இப்படி கணவன் மனைவி இருவரும் ஹீரோவாக நடித்திருக்கும் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனதாக சரித்திரம் இல்லை, இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன் என்றும் சரத்குமார் பெருமைப்பட்டு இருக்கிறார்.
ஒருகாலத்தில் வில்லனாக அறிமுகமாகி, பிறகு ஹீரோவாக உயர்ந்து, இன்று கதாபாத்திர நடிகராகவும் அரசியல்வாதியாகவும், தயாரிப்பாளராகவும் பல முகங்களுடன் இன்னும் அதே எர்னஜியோடு ஓடிக்கொண்டிருக்கும் சரத்குமார் - அவரைப் பற்றி வரும் ருமர்களையும் அதே ஸ்டைலில் ஹாண்டில் செய்வது தான் அவரின் தனித்துவம்.
-
விஜய் எனக்காக செய்ததை மறக்க முடியாது! அதுவும் அந்த நேரத்தில்.. உருக்கமாக பேசிய சத்யராஜ் -
Happy Raj Review: ஹேப்பி ராஜ் கதை இதுதான்.. ஆனால் இப்படி பண்ணலாமா? ப்ளூ சட்டை மாறன் ஓபன் ரிவ்யூ -
இந்தியன் பாகிஸ்தானில் உளவாளியானால் ஹீரோ.. அவங்க இங்க வந்தா தீவிரவாதியா? துரந்தர் பற்றி அமீர் சர்ச்சை பேச்சு -
பிரதமர் நடித்த ஒரே படம் அமைதிப்படை தான்.. அதுவும் இந்த காட்சியை மறக்க முடியுமா? சத்யராஜ் சர்ச்சை பேச்சு -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்?












Click it and Unblock the Notifications