இதைப் பார்த்து அப்பாவுடைய வேல்யூ தெரிஞ்சுக்கோங்க..கண்ணீர் விட்டு அழுத டி.ராஜேந்திரன்
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமபா 3 நிகழ்ச்சியின் இந்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் டெடிகேஷன் ரவுண்ட் நடைபெற இருக்கிறது.
அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டி.ராஜேந்திரன் கண் கலங்கி பல அறிவுரைகளை கூறி இருக்கிறார்.

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பல பேருடைய திறமையை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் விதமாக புதியதாக பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த மாதிரி தான் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியும் இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் டெடிகேஷன் ரவுண்ட் நடைபெற இருக்கிறது. அதில் சிறப்பு விருந்தினராக டி.ராஜேந்திரன் கலந்து கொண்டிருக்கிறார். டெடிகேஷன் ரவுண்டில், உள்ளங்களுக்கு உயிர் கொடுத்த நல் உள்ளங்களுக்கு ஆக பலரும் தங்களுடைய மனதில் இருக்கும் பாசத்தை பாடல்களாக வெளிப்பாட்டி வருகின்றனர்.
அதில் ரசிகர்களின் செல்லப்பிள்ளை என்று அழைக்கப்படும் மணிகண்டன் தன்னுடைய அம்மாவிற்காக "ஆராரிராரோ நான் இங்கு பாட" எனும் பாடலைப் பாட, அதற்கு டி.ராஜேந்திரன் இந்த பாடலில் உள்ள வரிகளை விட அந்தப் பையனின் வலி தான் அதில் அதிகமாக தெரிகிறது என்று பாராட்டுகிறார்.

அதைத்தொடர்ந்து நாகார்ஜுன், "தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை" எனும் பாட்டை பாட அதைக் கேட்டு கண் கலங்கி அழுத டி.ராஜேந்திரன் இந்த நிகழ்ச்சியை பார்த்தாவது அப்பாவுடைய வேல்யூ தெரிஞ்சுக்கோங்க டா... என்று பெரும் வருத்தத்தில் கூறியிருக்கிறார்.
அதைத்தொடர்ந்து அக்ஷயா," கந்தல் ஆனாலும் தாய்மடி போல்" எனும் பாடலை பாட தாய் மண்ணுக்காக பாடிய இந்தப் பாடலுக்காக என்னையே தந்துட்டேன் என்று எழுந்து நின்று பாராட்டி இந்த நிகழ்ச்சிக்கு இறைவன் என்னை வரவைத்து இருக்கிறான் என்றால் அந்த இறைவனை நான் பார்த்து விட்டேன் என்று அவர் உருக்கமாக பேசியிருக்கிறார். தற்போது இந்த ப்ரோமோ வைரலாகி வருகிறது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications