நேருக்கு நேராக மோதும் போட்டியாளர்கள்.. வெல்ல போவது யார்? வெளியேற போவது யார்? சூடு பிடிக்கும் சரிகமப
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப, இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
அர்ச்சனா தொகுத்து வழங்க ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், கார்த்திக் மற்றும் சைந்தவி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.

23 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி பரபரப்பான ரவுண்டுகளுடன் பட்டய கிளப்பி வருகிறது. பக்தி பாடல்கள் சுற்று நடந்து முடிந்ததை தொடர்ந்து கடந்த வாரம் சரிகமப சங்கமம் என்ற சுற்று நடைபெற்றது. அதாவது சரிகமப நிகழ்ச்சியின் கடந்த இரண்டு சீசன்களில் பங்கேற்ற பைனலிஸ்ட் போட்டியாளர்கள் சீசன் 4 போட்டியாளர்களுடன் இணைந்து பாடினர்.
அப்போது குடிசை வீட்டில் வாழ்ந்து வந்த மாற்றுத்திறனாளி போட்டியாளரான புருஷோத்தமன் தான் சொந்த உழைப்பால் தற்போது ஒரு மாடி வீடு கட்டி குடியேறியது குறித்த காணொளியை இந்த நிகழ்ச்சியில் வெளியிட்டுள்ளனர், மேலும் புருசோத்தமன் என்னுடைய அம்மா இப்போ தான் கால் வலி இல்லாமல் சந்தோசமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இப்படி பல சர்ப்ரைஸ்கள் நிறைந்த ரவுண்டாக இருந்தது.

சரிகமப மேடையில் அப்பா காலில் விழுந்துட்டாரு.. சொந்தக்காரங்க கேட்ட கேள்வி இருக்கே! மனம் திறந்த ஸ்வேதா
அதைத்தொடர்ந்து கடந்த வாரம் ரெட்ரோ ரவுண்ட் நடந்து முடிந்தததை தொடர்ந்து இந்த வாரம் ஒன் & ஒன் ரவுண்ட் நடைபெற உள்ளது.
அதாவது இரண்டு போட்டியாளர்கள் நேருக்கு நேராக மோதி கொள்ள உள்ளனர். இதற்கான ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒன் அண்ட் ஓன் ரவுண்டில் ஜெயிக்க போவது யார்? வெளியேற போகும் அந்த ஒரு போட்டியாளர் யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications