சரிகமப மேடையில் அப்பா காலில் விழுந்துட்டாரு.. சொந்தக்காரங்க கேட்ட கேள்வி இருக்கே! மனம் திறந்த ஸ்வேதா
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீசன் 4 நிகழ்ச்சியில் கடந்த வாரத்தில் டெடிகேஷன் ரவுண்டு நடைபெற்றது. அப்போது எல்லா போட்டியாளர்களும் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு பாடல்களை டெடிகேஷன் செய்தனர். அதில் ஸ்வேதா என்ற போட்டியாளர் தன்னுடைய அப்பாவிற்காக பாடல் ஒன்றை டெடிகேட் செய்திருந்தார். அப்போது அவருடைய அப்பா ஸ்வேதாவின் காலில் விழுந்திருந்தார். இது குறித்து இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தன்னுடைய வீட்டில் என்ன நடந்தது என்பது குறித்து ஸ்வேதா பேசியிருக்கிறார்.
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நம்பர் 1 ரியாலிட்டி ஷோ சரிகமப சீசன் 4. மொத்தம் 23 போட்டியாளர்களுடன் தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை அர்ச்சனா தொகுத்து வழங்க ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், கார்த்திக் மற்றும் சைந்தவி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான ரவுண்ட் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் டெடிகேஷன் ரவுண்ட் நடைபெற்றது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடலை தேர்வு செய்து தனக்கு நெருக்கமானவர்களுக்கு டெடிகேட் செய்து பாடினார்.
அதில் ஒருவராக ஸ்வேதா தனது அப்பாவிற்கு டெடிகேட் செய்வதாக சொல்லி "ஆனந்த யாழை மீட்டுகிறாயே" என்ற பாடலை பாடி அரங்கத்தை அசத்தினார். இவர் பாடுவதற்கு முன்பாக தனது அப்பாவுக்காக முதல் முறையான லெட்டர் ஒன்றை எழுதி இருப்பதாக சொல்லி அப்பாவை மேடைக்கு ஏற்றி படிக்க வைத்தார்.
அதில் எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் ஆனால் உங்களுக்கு என்னை பிடிக்குமா பிடிக்காதானு இதுவரைக்கும் எனக்கு தெரியவே தெரியாது. அதை நீங்க இதுவரைக்கும் சொன்னதும் இல்லை பாசத்தை காட்டியதும் இல்லை என்று படிக்க, அவர் அப்பா பிடிக்கும் ஆனால் இதுவரைக்கும் வெளியே காட்டியதில்லை என அப்படியே உடைந்து போய் கண்ணீர் விட, அப்பாவுக்கு பதிலாக ஸ்வேதா அந்த லெட்டரை படிக்க தொடங்கினார்.
எனக்கு ரொம்ப நாள் ஏக்கம் இது.. எனக்கு உங்க கிட்ட இருந்து ஒரே ஒரு முத்தமும் அரவைணைப்பும் வேண்டும் என்று சொல்ல, அவரது அப்பா யாரும் எதிர்பாராத விதமாக காலில் விழுந்து மன்னிப்பு கேட்க மொத்த மேடையும் கண்ணீர் மயமானது. அதே நேரத்தில் ஸ்வேதாவின் ஆசைகளும் நிறைவேறின, ஆமாம் அவரது அப்பா முதல் முறையாக மகளை கட்டியணைத்து முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்த அந்த அன்பில் அரங்கமே கரைந்து போனது.
ஸ்வேதாவின் பல நாள் ஏக்கத்தை தீர்த்த இந்த தருணம் குறித்து அவர் பேசிய விஷங்களை பற்றி பார்க்கலாம். என் அப்பா என்னையே காலில் விழ விட மாட்டார், அதெல்லாம் வேண்டாம்னு தள்ளி போயிடுவார். அப்படி இருக்கும் போது அவர் என் கால்ல விழுவார்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல, அவர் கீழே குனிந்தும் நானும் அப்படியே உட்கார்ந்துட்டேன். என்னை மீறி என் கண்கள் கலங்க தொடங்கிடுச்சு.
உன்னை நான் இவ்வளவு ஏங்க வைத்திருக்கேனா.. உன் மனசை புரிஞ்சிக்காமல் போய்ட்டேனு அழுதார். இறுதியா நான் கேட்ட முத்தமும் அரவணைப்பும் கிடைச்சது. அது என்னால் மறக்க முடியாது. ரொம்ப சந்தோசமாக இருந்தது. பொதுவா என் அப்பா அழ மாட்டார், அவர் அவ்வளவு ஸ்ட்ராங். ஆனால் இந்த நிகழ்ச்சியில் தேம்பி தேம்பி அழுதார், சொந்தகாரங்க நிறைய பேர் போன் பண்ணி பேசுனாங்க. இப்போ உனக்கு சந்தோசமா, உன் ஏக்கம் தீர்ந்ததா என்று கேட்டாங்க.
அதே நேரம் சிலர் போன் பண்ணி ஏன் டி அவனை அப்படி அழ வச்ச, அவன் அழுது நாங்க எல்லாம் பார்த்ததே இல்லனு செல்லமா திட்டினாங்க. ப்ரண்ட்ஸ் சிலர் எல்லாம் பாடி தான் பாப்புலர் ஆவாங்க, ஆனால் நீ எல்லாரையும் அழ வச்சே பாபுலாராகிட்ட என்று கலாய்க்கவும் செய்தாங்க என்று சொல்கிறார்.
இத்தனை வருஷமா பார்த்த அதே அப்பா தான், ஆனால் இப்போ பார்க்கும் போது இன்னும் புதுசா தெரியுறாரு. இந்த பீல் ரொம்ப நல்லா இருக்கு என்று மகிழ்ச்சி பொங்க பேசினார். மேலும் அவர் பேசுகையில் அப்பா வெளிநாடு போய் இருக்கும் போது அம்மா கூட நிறைய லெட்டர்ல தான் பேசுவாரு. அம்மா அனுப்புற லெட்டரை படிக்கவும் அவருக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் தான் என் மனசுல இருக்கிற விஷயத்தை சொல்ல லெட்டரை பயன்படுத்தினேன் என்று சொல்லி இருக்கிறார்.
அதுபோல லைப்ல ஒரு பேக்கப்பே இல்லாமல் ட்ரையா போயிட்டு இருந்தது, இந்த சரிகமப தான் எனக்கு ஒரு அடையாளத்தையும் நம்பிக்கையும் கொடுத்து இருக்கு. என் வீட்லயும் என் மேல நம்பிக்கை வந்திருக்கு என்று பேசி ஸ்வேதா முடித்தார்.












Click it and Unblock the Notifications