Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எதிர்நீச்சல் 2வில் நான் இல்ல! அதிரடி போஸ்ட் போட்ட விசாலாட்சி.. இவங்களுமா இப்படி! அட காரணம் இதுதானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் விசாலாட்சி கேரக்டரில் நடித்த சத்ய பிரியா நேற்று எதிர்நீச்சல் 2 சீரியலில் நான் நடிக்கவில்லை என்றால் நீங்கள் எல்லோரும் ஃபீல் பண்ணுவீங்களா? யாரெல்லாம் என்னை மிஸ் பண்ணுவீங்க என்று ஒரு போஸ்ட் போட்டிருந்தார். ஆனால் இன்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

சீரியலுக்கு பெயர் போன சன் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் பிரைம் டைமில் இரவு நேரத்தில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள்.

ethirneechal 2 serial sun tv

அதுபோல ஒரு சில சீரியல்கள் மட்டும் பல வருடங்களாக மக்கள் மனதில் ஒரு இடத்தை பிடித்து விடுகிறது. அதில் எதிர்நீச்சல் சீரியலுக்கும் தனி இடம் உண்டு. எதிர்நீச்சல் சீரியலை இயக்குனர் திருச்செல்வம் தான் இயக்கியிருந்தார். திருச்செல்வம் ஏற்கனவே இயக்கிய கோலங்கள், மெட்டிஒலி போன்ற சீரியல்கள் இப்ப வரைக்கும் மக்களால் பேசப்படுகிறது.

அந்த வரிசையில் எதிர்நீச்சல் சீரியலும் காலத்துக்கும் நிலைத்திருக்கும் என்று நினைத்த நேரத்தில் இந்த சீரியலில் வில்லனாக நடித்து வந்த மாரிமுத்து திடீரென்று காலமானார். அவருடைய மரணத்திற்கு பிறகு சீரியல் கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. அதனால் மக்கள் அதை விமர்சிக்க தொடங்கியிருந்தனர்.

ethirneechal 2 serial sun tv

அதுவரைக்கும் எதிர்நீச்சல் சீரியல் பற்றி பாராட்டியவர்கள் கூட அந்த சீரியலை விமர்சிக்க தொடங்கி இருந்தார்கள். ஆரம்பத்தில் சீரியல் பார்க்காத ஆண்கள் கூட எதிர்நீச்சல் சீரியலை பார்ப்பதாக போஸ்ட் போட்டுக் கொண்டிருந்தனர். அது போல அரசியல் பிரமுகர்கள் முதல் நடிகர் ரஜினிகாந்தின் குடும்பத்தினர் வரை பலரும் எதிர்நீச்சல் சீரியலை தொடர்ந்து பார்ப்பதாக கூறியிருந்தனர்.

நடிகர் விஜயின் அம்மாவான சோபாவும் எங்கள் வீட்டில் எதிர்நீச்சல் சீரியலை தொடர்ந்து பார்ப்போம் என்று கூறியிருந்தார். இப்படி நல்ல பெயர் வாங்கி இருந்த நேரத்தில் விமர்சனங்கள் வந்த நிலையில் உடனே சீரியலுக்கு இயக்குனர் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். ஆனால் அது அந்த சீரியலின் தீவிர ரசிகர்களை வருத்தமடைய செய்தது.

ethirneechal 2 serial sun tv

அதனாலயே ரசிகர்கள் எப்போது இந்த சீரியலில் இரண்டாவது பாகம் வரும் என்று கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் இந்த சீரியல் வரும் திங்கள்கிழமை முதல் இரண்டாவது பாகம் ஒளிபரப்பாக இருக்கிறது என்ற ப்ரோமோக்கள் வெளியாகி இருக்கிறது. இதில் முதல் சீசனில் நடித்த நடிகர்கள் இரண்டாவது சீசனில் தொடர்வார்களா? அல்லது சிலர் மாற்றப்படுவார்களா? என்ற கேள்விகள் எழுந்து வருகிறது.

காரணம் ஜனனியாக நடித்த மதுமிதா சீரியலில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். அவருக்கு பதிலாக விஜே பார்வதி ஜனனி கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த சீரியலில் குணசேகரனுக்கு அடுத்தபடியாக விசாலாட்சி கேரக்டரில் நடித்து வந்த நடிகை சத்யபிரியா நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.

ethirneechal 2 serial sun tv

அதில், நான் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கவில்லை என்றால் நீங்கள் யாராவது வருத்தப்படுவீங்களா? என்னை யாரெல்லாம் மிஸ் பண்ணுறீங்க? என்று ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இவர் தொடர்ந்து நடிக்க வேண்டும் இவரால்தான் வில்லியாகவும் நடிக்க முடியும், பாசத்தில் பார்ப்பவர்களை உருக வைக்கவும் முடியும் என்று கமெண்ட் கொடுத்து வந்தனர். இந்த நிலையில் இன்று ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் நான் இல்லாமல் எதிர்நீச்சல் சீரியலா? இந்த சீரியலில் இல்லாமல் இருப்பேனா? ஏட்..டி ஜனனி, ஈஸ்வரி, நந்தினி நான் மீண்டும் வந்துட்டேன் என்கிற மாதிரி அதில் பேசியிருக்கிறார்.

ethirneechal 2 serial sun tv

அதோடு நான் உங்க எல்லாரையும் பிராங்க் பண்ணுனேன் என்றும் கூறியிருக்கிறார். இந்த வீடியோவை பார்த்ததும் ரசிகர்கள் என்ன இவங்களும் பிராங்க் பண்ண தொடங்கிட்டாங்களே என்று கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+