கையை ஊன்றி என்னா மாதிரி போஸ்.. மனசை பிசையும் செம்பருத்தி சபானா!
சென்னை: செம்பருத்தி சீரியலின் மூலமாக இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் ஷபானா மஞ்சக் கலர் உடையில் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.
இந்த புகைப்படம் அவரது ரசிகர்கள் மனதில் பசைபோல ஒட்டிக் கொண்டு ஏக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம். ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக தொடர்ந்து இவர் வலம் வருவது நினைவிருக்கலாம்.
ஜீ தமிழில் ஒளிபரப்பப்படும் சீரியல்களில் முதல் இடத்தில் ஜொலித்து மணம் வீசிக்கொண்டிருக்கும் செம்பருத்தியின் தேவதையாக ரசிகர்களின் இதயத் துடிப்பாகவும் இளைஞர்கள் மத்தியிலும் வாடாத மலராக திகழ்பவர்தான் சபானா.

புத்தம் புது மலர் போல
ரசிகர்கள் மனதில் தினமும் பூத்துக் குலுங்கி கொண்டிருக்கும் ஷபானா சீரியலில் அமைதியும் சொரூபமாக இருக்கும் இவர் உண்மையில் எவ்வளவு பெரிய வாலு என்று அவரது பிரண்ட்ஸ்களுக்கு மட்டும் தான் தெரியுமாம். அந்த அளவிற்கு அனைவரையும் பாடாய் படுத்தி எடுத்துவிடுவார். ஆனால் இவர் எந்த அளவிற்கு முதலிடத்தில் இருந்தாலும் இன்னும் குழந்தை போல தான் என்ஜாய் பண்ணி கொண்டு இருக்கிறார்.

வால்தனம் ஜாஸ்தி
இவரும் இவருடைய பிரண்ட்ஸ் களும் சேர்ந்து செய்யும் சேட்டைகளை அடிக்கடி இன்ஸ்டாகிராம் என்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவார்கள். கொஞ்ச நாளைக்கு முன்னாடி இவரது பிரன்டான யாரடி நீ மோகினி சீரியலில் ஸ்வேதாவாக நடிக்கும் சைத்ரா ரெட்டியின் எங்கேஜிமெண்ட்டில் கலக்கலான ஆட்டம் போட்டு மணப் பெண்ணும் மாப்பிளையும் பாடாய்ப்படுத்தி எடுத்திருந்தார்.

ரசிக்கும் ரசிகர்கள்
அதில் அனைவரையும் விடவும் ரொம்பவும் வால்தனம் பண்ணுனது இவர்தானாம். இவரது சேட்டைகளை பற்றி அவருடைய ரசிகர்கள் கூட ரசித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் ஜீ தமிழில் இவருக்கு விருதுகள் வழங்கும் போது இவருடைய ரசிகர்கள் ரொம்பவே சந்தோஷம் அடைந்து இருக்கிறார்கள்.

செம்பருத்தி டாப்பு
புதுசு புதுசா பல சீரியல்கள் வந்தாலும் இந்த சீரியலின் இடத்தை எந்த சீரியலும் அடிச்சுக்க முடியாது. அந்த அளவிற்கு இந்த சீரியலுக்கு வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்கள் .அதிலும் இவருக்கு தான் ஆண் ரசிகர்களும் பெண் ரசிகர்களும் அதிகமாக இருக்கின்றனர். பொதுவாக சினிமாக்களில் நடிக்கும் நடிகைகளுக்கு தான் ரசிகர்கள் அதிகம்.

தேவதை போல
ஆனால் சீரியலில் நடித்து இருந்தாலும் இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் தேவதையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சீரியலில் இவரது கேரக்டரை பார்த்து பல ரசிகர்களும் இந்த மாதிரி ஒரு பொண்ண தான் கட்ட வேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அந்த அளவிற்கு அவரது காதல் கணவர் என் மீது பாசத்தை பொழிந்து அவருக்காக எவ்வளவு கஷ்டங்களையும் தாங்கி கொண்டு இருக்கிறார்.

இவர்தானா அவரு
ஆனால் உண்மையில் இவருடைய சேட்டைகளை பார்த்த ரசிகர்கள் அவரா இவர் என்று ஆச்சரியம் அடைந்து இருக்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் உலாவரும் வீடியோஸ் களிலும் இவர் ஜாலியாக நடந்து கொள்வதால் ரசிகர்களின் மனதிலும் நல்ல ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். சீரியலில் சேலைகளில் பார்த்துக்கொண்டிருந்த இவரது ரசிகர்களுக்கு இவர் குடும்ப குத்துவிளக்காக தான் போட்டோ சூட்டும் நடத்திக்கொண்டிருக்கிறார்.

மஞ்சள் நிறமே மஞ்சள் நிறமே
அடிக்கடி இவர் எடுக்கும் போட்டோக்களை பார்த்து அவருடைய ரசிகர்கள் ரசித்து உருகி கமெண்டுகளை போட்டு வருவார்கள் .அந்த மாதிரி தான் தற்போது அழகான மஞ்ச கலர் உடையில் கலக்கலான ஒரு போஸ் கொடுத்திருக்கிறார் .அதை பார்த்து பல ரசிகர்களும் உச்சி கொட்டி ரசித்து வருகிறார்கள் .அதுவும் கவிதைகளுக்கும் பஞ்சமில்லாமல் தான் பொழிந்து கொண்டிருக்கிறார்கள்.
-
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர் -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications