எங்களுக்கு குழந்தை இல்லை.. தம்பி பையன் தான்! என் வேதனை எனக்குத்தான்! சோகங்களை பகிர்ந்த நடிகர் தேவ்
சென்னை: சின்னத்திரை நடிகர் ஆன தேவ் ஆனந்த் தன்னுடைய குடும்பத்தை பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார்.
25 வருடங்களாக சீரியலில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் தேவ் ஆனந்த் தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகள் பற்றியும் கூறி இருக்கிறார்.
நடிகர் தேவ் ஆனந்திற்கு குழந்தைகள் கிடையாதாம். அவருடைய தம்பி மகனை தான் தன்னுடைய மகனாக வளர்த்து வருகிறாராம்.

சின்னத்திரையில் பல வருடங்களாக நடித்து வரும் நடிகர் தேவ் ஆனந்த் சமீபத்தில் முடிவடைந்த ரோஜா சீரியலில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது பேட்டி ஒன்றில் தன்னுடைய இத்தனை வருட திரை வாழ்க்கை குறித்தும் தன்னுடைய குடும்பத்தை குறித்தும் கூறி இருக்கிறார். அதில் தனக்கு அரேஞ்ச் மேரேஜ் தான் நடந்தது என்றும் தங்களுக்கு இப்ப வரைக்கும் குழந்தை இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
இவருடைய தம்பியின் மகனை தான் இவர் வளர்த்து வருகிறாராம். இவருடைய தம்பியின் மகன் இவரை அப்பா என்று தான் அழைப்பாராம். எப்போதும் இவரோடு அதிகமாக பாசமாக இருப்பாராம். அதோடு இந்த நடிப்பு வாழ்க்கையில் பல வேதனைகளை தான் அனுபவித்து இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார் ஆரம்ப காலகட்டத்தில் எனக்கு அதிகமாக கோபம் வரும் அதனாலே என்னுடைய வாழ்க்கையில் பலவற்றை நான் இழந்து இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

இப்போது நடப்பது எல்லாம் பார்க்கும் போது இவ்வளவு தானா என்று தோன்றுகிறது. ஆனால் முன்னாடி அப்படி எனக்கு தோணாது இப்ப வர்ற நடிகர்கள் பலரும் யாரையும் மதிக்கிறது இல்லை. அது வேதனையாக இருக்கிறது. நான் 25 வருஷமா நடிச்சுகிட்டு இருக்கிறேன். பலர் இப்ப வந்துகிட்டு நீங்க எல்லாம் ஒரு ஆளா என்கிற மாதிரி நடந்து கொள்கிறார்கள். அது பார்க்கும்போது கடுப்பாக இருக்கிறது. குறிப்பாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நேரத்திற்கு வர மாட்டேங்குகிறார்கள் என்று பல குற்றச்சாட்டுகளையும் கூறியிருக்கிறார்.
சமீபத்தில் நான் நடித்து முடித்த ரோஜா சீரியலில் கூட இரண்டு பேர் என்னிடம் அப்படி நடந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அப்படி ஏதாவது நடந்தால் இப்ப அந்த இடத்தை விட்டு நான் எழுந்து போய் விடுவேன். அதுவும் சித்தி சீரியல் என்னால் மறக்கவே முடியாது. அந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பு சில மாதங்களாக எனக்கு வாய்ப்பு இல்லாமல் வாய்ப்புக்காக தேடிக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் தாடி எல்லாம் வளர்த்து ஒரு மாதிரி ஆகிவிட்டேன். அப்போதுதான் சித்தி சீரியல் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்று கூறி இருக்கிறார்.

சீரியலில் தனக்கு ஒரு டாக்டர் ரோல் கிடைத்ததாகவும் ஆனால் அது ஒரு சோம்பேறி டாக்டர் என்றும் வீட்டில் உட்கார்ந்து கொண்டு சாப்பிட்டுக் கொண்டே இருப்பவர் போன்று இருந்ததாம். எனக்கு ஏற்கனவே சும்மாவே சாப்பிட பிடிக்கும் என்பதால் இந்த கேரக்டரை சொல்லி நான் நன்றாகவே சாப்பிட்டு கொண்டிருந்தேன். வீட்டில் கிளினிக் வைத்து தந்தால்தான் நான் வேலை பார்ப்பேன் என்று சோம்பேறியாக நடித்த அந்த கதை பல வருடங்களாக ஓடிக்கொண்டிருந்தது. அதை மறக்க முடியாது என்று கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications