எங்களுக்கு குழந்தை இல்லை.. தம்பி பையன் தான்! என் வேதனை எனக்குத்தான்! சோகங்களை பகிர்ந்த நடிகர் தேவ்
சென்னை: சின்னத்திரை நடிகர் ஆன தேவ் ஆனந்த் தன்னுடைய குடும்பத்தை பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார்.
25 வருடங்களாக சீரியலில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் தேவ் ஆனந்த் தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகள் பற்றியும் கூறி இருக்கிறார்.
நடிகர் தேவ் ஆனந்திற்கு குழந்தைகள் கிடையாதாம். அவருடைய தம்பி மகனை தான் தன்னுடைய மகனாக வளர்த்து வருகிறாராம்.

சின்னத்திரையில் பல வருடங்களாக நடித்து வரும் நடிகர் தேவ் ஆனந்த் சமீபத்தில் முடிவடைந்த ரோஜா சீரியலில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது பேட்டி ஒன்றில் தன்னுடைய இத்தனை வருட திரை வாழ்க்கை குறித்தும் தன்னுடைய குடும்பத்தை குறித்தும் கூறி இருக்கிறார். அதில் தனக்கு அரேஞ்ச் மேரேஜ் தான் நடந்தது என்றும் தங்களுக்கு இப்ப வரைக்கும் குழந்தை இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
இவருடைய தம்பியின் மகனை தான் இவர் வளர்த்து வருகிறாராம். இவருடைய தம்பியின் மகன் இவரை அப்பா என்று தான் அழைப்பாராம். எப்போதும் இவரோடு அதிகமாக பாசமாக இருப்பாராம். அதோடு இந்த நடிப்பு வாழ்க்கையில் பல வேதனைகளை தான் அனுபவித்து இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார் ஆரம்ப காலகட்டத்தில் எனக்கு அதிகமாக கோபம் வரும் அதனாலே என்னுடைய வாழ்க்கையில் பலவற்றை நான் இழந்து இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

இப்போது நடப்பது எல்லாம் பார்க்கும் போது இவ்வளவு தானா என்று தோன்றுகிறது. ஆனால் முன்னாடி அப்படி எனக்கு தோணாது இப்ப வர்ற நடிகர்கள் பலரும் யாரையும் மதிக்கிறது இல்லை. அது வேதனையாக இருக்கிறது. நான் 25 வருஷமா நடிச்சுகிட்டு இருக்கிறேன். பலர் இப்ப வந்துகிட்டு நீங்க எல்லாம் ஒரு ஆளா என்கிற மாதிரி நடந்து கொள்கிறார்கள். அது பார்க்கும்போது கடுப்பாக இருக்கிறது. குறிப்பாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நேரத்திற்கு வர மாட்டேங்குகிறார்கள் என்று பல குற்றச்சாட்டுகளையும் கூறியிருக்கிறார்.
சமீபத்தில் நான் நடித்து முடித்த ரோஜா சீரியலில் கூட இரண்டு பேர் என்னிடம் அப்படி நடந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அப்படி ஏதாவது நடந்தால் இப்ப அந்த இடத்தை விட்டு நான் எழுந்து போய் விடுவேன். அதுவும் சித்தி சீரியல் என்னால் மறக்கவே முடியாது. அந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பு சில மாதங்களாக எனக்கு வாய்ப்பு இல்லாமல் வாய்ப்புக்காக தேடிக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் தாடி எல்லாம் வளர்த்து ஒரு மாதிரி ஆகிவிட்டேன். அப்போதுதான் சித்தி சீரியல் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்று கூறி இருக்கிறார்.

சீரியலில் தனக்கு ஒரு டாக்டர் ரோல் கிடைத்ததாகவும் ஆனால் அது ஒரு சோம்பேறி டாக்டர் என்றும் வீட்டில் உட்கார்ந்து கொண்டு சாப்பிட்டுக் கொண்டே இருப்பவர் போன்று இருந்ததாம். எனக்கு ஏற்கனவே சும்மாவே சாப்பிட பிடிக்கும் என்பதால் இந்த கேரக்டரை சொல்லி நான் நன்றாகவே சாப்பிட்டு கொண்டிருந்தேன். வீட்டில் கிளினிக் வைத்து தந்தால்தான் நான் வேலை பார்ப்பேன் என்று சோம்பேறியாக நடித்த அந்த கதை பல வருடங்களாக ஓடிக்கொண்டிருந்தது. அதை மறக்க முடியாது என்று கூறி இருக்கிறார்.
-
“ஏ.ஆர். ரஹ்மானுக்கே இந்த நிலைமை என்றால், எனக்கு..? ‘கருப்பு’ படத்தில் நடந்த அதிர்ச்சி அனுபவம்! நடிகை ஆனந்தி ஓபன்! -
விஜய் சேதுபதி இவ்வளவு ஓபனா பேசுவாருன்னு நினைக்கலையே! வெடவெடுத்து போன VJ பார்வதி! அடுத்த பஞ்சாயத்து -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
“அந்த பாவம் நிம்மதியா வாழ விடாது…” பெத்தவங்களை தவிக்க விடாதீங்க.. உருக்கமாக பேசிய சிவகுமார்! பின்னணி சம்பவம் -
கென் கருணாஸ்க்கு வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் செய்த சிம்பு.. யூத் பட நடிகை நெகிழ்ச்சி போஸ்ட் -
Youth OTT: ஓடிடியில் வெளியாகும் யூத் படம்! எப்போ, எதில் பார்க்கலாம்? கென் கருணாஸ் ரசிகர்களுக்கு குட் நியூஸ் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications