திருமணமாகி ஒரு மாதத்திற்குள் சின்னத்திரை பிரபலங்களுக்குள் விவாகரத்து..?அதுக்குன்னு இப்படியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடித்த சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் ஒரு மாதத்திற்கு முன்புதான் காதல் திருமணம் செய்திருந்தனர்.

இந்த நிலையில் தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் இருவரும் தங்களுடைய திருமண புகைப்படங்களை டெலிட் செய்திருக்கின்றனர்.

இந்த நிலையில் விஷ்ணுகாந்த் வெளியிட்ட பதிவு பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Serial actor Vishnu Kanth and Samyutha going for divorce within a month of marriage

சீரியலில் ஒன்றாக நடிப்பவர்கள் காதலித்து திருமணம் செய்வது கொள்வது ஒன்றும் புதிது அல்ல. ஏற்கனவே பல நடிகர்கள் தங்களுடைய மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையில் வாழ்ந்து வருகின்றனர். இந்த வரிசையில் சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து சீரியலில் நடிகர்கள் சேர்ந்து இருந்தனர்.

சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா இருவரும் காதலிக்கும் செய்தியை தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் ரசிகர்களிடம் சில மாதங்களுக்கு பிறகு முன்பு தெரிவித்து இருந்தனர். இது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருப்பதாக கூறி இவர்களுடைய காதலுக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வந்தனர்.

விஷ்ணுகாந்த் ஏற்கனவே பல சீரியல்களில் நடித்திருக்கிறார். ஜீ தமிழில் தற்போது முடிவடைந்த ரஜினி சீரியலிலும் இதற்கு முன்பு ஒளிபரப்பாகி வந்த கோகுலத்தில் சீதை என்ற சீரியலிலும் நடித்திருந்தார். அது போல சம்யுக்தாவும் நிறைமாத நிலவே என்னும் சீரியல் மூலமாக பிரபலமானவர்தான். இவர்கள் இருவரும் சீரியல்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நிலையில் தங்களுடைய காதலை மறைத்து வைத்திருந்தனர்.

Serial actor Vishnu Kanth and Samyutha going for divorce within a month of marriage

சிப்பிக்குள் முத்து சீரியல் முடிவடையும் நேரத்தில் தங்களுடைய காதலை இருவரும் ரசிகர்களோடு பகிர்ந்து இருந்தனர். நடிகை சம்யுக்தா நடிகர் விஷ்ணுகாந்த்தை டேக் செய்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், எல்லா குழப்பங்களுக்கும் நடுவில் உன்னை நான் கண்டேன். நீங்கள் உண்மையிலேயே என் புன்னகையின் அளவு. என் வாழ்வின் அனைத்து துன்பங்களையும் மகிழ்ச்சியாக மாற்றுபவர். நான் உங்களுடன் இருக்கும்போது என்னை நன்றாக உணர்கிறேன். என் வாழ்வில் வந்ததற்கு மிக்க நன்றி என்று கூறியிருந்தார்.

அதற்குப் பிறகு கடந்த மாதம் தான் இவர்களுடைய திருமணம் வெகு விமர்சனமாக நடைபெற்றது. பிரபலங்கள் பலரும் இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்துக்களை கூறி வந்தனர். இந்த நிலையில் இவர்கள் இருவருடைய கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இருவரும் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் இருந்த திருமண புகைப்படங்களை டெலிட் செய்திருக்கின்றனர். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இது குறித்து இருவருடைய பதிவுகளிலும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதில் விஷ்ணுகாந்த் விரைவில் எல்லாம் தெரியவரும் என்று பதில் கொடுத்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+