நாக்க புடுங்குற மாதிரி கேளுங்க..சம்யுக்தாவிற்கு எதிராக அம்மா..விஷ்ணுகாந்த் வெளியிட்ட ஆடியோ
சென்னை: சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் தன்னுடைய மனைவி சம்யுக்தா பற்றி இரண்டாவது ஆடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
விஷ்ணுகாந்த் காதலிக்கும் போது சம்யுக்தா வேறொரு நபரிடம் பேசிக் கொண்டிருந்தது குறித்து சம்யுக்தாவின் அம்மா அந்த ஆடியோவில் பேசியிருக்கிறார்.
சம்யுக்தா அண்ணா என்று அழைத்த நபர் சம்யுக்தாவின் அம்மாவிடம் பல விஷயங்களை சொல்ல அதற்கு அவர் சம்யுக்தாவிடம் நாக்கை புடுங்குற மாதிரி கேள்வி கேளுங்க என்று கூறி இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியலில் ஒன்றாக நடித்து காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் இருவருடைய குடும்பப் பிரச்சனையும் சமூக வலைத்தளத்தில் சின்னத்திரை ரசிகர்களுக்கு தெரிந்ததுதான். தற்போது இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது விஷ்ணுகாந்த் சம்யுக்தா தன்னை காதலிக்கும் போதும் வேறொரு நபரிடம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார் என்பதற்கான முதல் ஆடியோவை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் அதை தொடர்ந்து இரண்டாவது ஆடியோ வெளியிட்டு இருக்கிறார். அது நான் ரெக்கார்டு செய்யவில்லை சம்யுக்தாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் எனக்கு சென்ட் பண்ணுனது என்றும் கூறியிருக்கிறார்.
அந்த வீடியோவில் சம்யுக்தா ஒரு நபரை அண்ணன் என்று அழைத்திருக்கிறார். அவர் சம்யுக்தா பற்றி அவருடைய அம்மாவிடம் பல ரகசியங்களை உடைத்து இருக்கிறார். அதாவது அந்த நபர் சம்யுக்தா நம்மிடம் ரவி இடம் பேசவில்லை என்று கூறிவிட்டு பேசியிருக்கிறார். அது உங்களுக்கு தெரியுமா? என்று கேட்க, அது எனக்கு தெரியாது என்று சம்யுக்தாவின் அம்மா சொல்லி இருக்கிறார். சம்யுக்தா நம்மிடம் நடித்துவிட்டு ரவியிடம் நாம செய்ற எல்லா வேலையும் சொல்லி இருக்கிறார்.
ரவி எவ்வளவு மோசம் தப்பானவன் என்பதை பற்றி எல்லாம் அவ சொன்னத நாம நம்புறோம். ஆனால்
விஷ்ணுகாந்திடம் பேசிக் கொண்டிருக்கும் போது கூட ரவியிடம் பேசி இருக்கிறார். இது எப்படி சரி? அதுவும் நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்கிற மாதிரி பேசி இருக்கிறார் என்று சொல்ல அதற்கு சம்யுக்தாவின் அம்மா அதிர்ச்சி அடைந்து எனக்கு இதுவெல்லாம் தெரியாது.

என்னிடம் ஒரு ரெண்டு முறை பேசியிருக்கிறேன் அதுவும் ஏதாவது அவனா கேட்டதுக்கு பதில் சொல்லி இருக்கிறேன் என்று சொல்லி இருக்கா. ஆனா இப்படி எல்லாம் பண்ணுவானு எனக்கு தெரியாது என்று கூறியிருக்கிறார். மேலும் இது பற்றி நீங்களே அவ கிட்ட கேளுங்க, நாக்கு புடுங்குற மாதிரி பேசுங்க. அப்பதான் அவ சரி ஆவா, நான் எவ்வளவோ பேசியாச்சு ஆனா கேட்கிறதே இல்ல என்று அந்த ஆடியோவில் பேசியிருக்கிறார்.
தற்போது இந்த ஆடியோ குறித்து ரசிகர்கள் சம்யுக்தாவிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்க அதற்கு தன்னுடைய பதில்களையும் கூறி அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக சம்யுக்தா தொடர்ந்து பதிவிட்டு கொண்டிருக்கிறார். அதில் இந்த மாதிரி வெளியான ஆடியோகளுக்கு நான் விரைவில் பதில் சொல்வேன் என்று கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications