விஜய்யைக் கூப்பிட்டு மடியில் படுத்துக்கோன்னு சொன்னாலும் வர மாட்டே ங்கிறார்.. ஒரு தாயின் ஏக்கம்
Recommended Video
சென்னை: சன் டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் நடிகர் விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகர் சிறப்பு விருந்தினரா வந்திருந்தாங்க. பல விஷயங்களை சுவாரஸ்யமாக பகிர்ந்துக்கிட்டாங்க.
ரொம்ப வருஷமா லைட் மியூஸிக்கில் மட்டுமே பாடிகிட்டு இருந்தவங்களுக்கு, திடீர்னு முறையா சங்கீதம் கத்துக்கிட்டு கச்சேரி பண்ணனும்னு ஆசை வந்திருக்கு.
ஜஸ்ட் 15 வருஷத்துக்கு முன்னாலதான் கர்நாடக இசை பயில ஆரம்பிச்சு, இன்னிக்கு பல பக்தி புராணங்களில் இருந்து பாடல்கள் எடுத்து, கச்சேரிகள் செய்துட்டு வராங்க.
ஆஹா.. வசிய மருந்து வேலை செய்யுதே.. ஆனா ஜோடி மாறிப் போச்சேய்யா!
தியாகராஜர் ஆராதனை
கடந்த சில வருஷங்களா திருவையாறு தியாகராஜர் ஆராதனையில் கச்சேரி பண்ணிக்கிட்டு இருக்கேன். ஒரு முறை விஜயும், மருமகளும் வந்திருந்தாங்க. மேடையில எனக்கு பொன்னாடை போர்த்தினார் விஜய். நான் பாடினதுல உனக்கு எது பிடிச்சிருந்துன்னு கேட்டேன்... எதோ ரரசனிதப சசசன்னு நீட்டிக்கிட்டு ஸ்வரம் பாடினீங்களே அது பிடிச்சிருந்துதுன்னு சொன்னார். நான் சிரிச்சுட்டேன்...
ரோட்டு மேல
தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டான்னு விஷ்ணு படத்துல ஒரு பாட்டும், ஒன்ஸ்மோர் படத்துல ஊர்மிளா ஊர்மிளான்னு ஒரு பாடலும்னு ரெண்டு டூயட் நானும் விஜயும் பாடி இருக்கோம். அம்மாவும், பையனும் டூயட் சாங் பாடினது அதுதான் முதன்முறையா இருக்கும்னு நான் நினைக்கறேன்.
ஏன் பாடலை
சர்கார் படத்துல பாடி இருக்கலாமே, ஏன் பாடலை விஜய்னு கேட்டேன், அது எல்லாம் ஹை பிட்ச்ல இருந்துச்சும்மா... நான் பாடி அதை கெடுக்க வேணாம்னு விட்டுட்டேன்னு சொன்னார்.
சினிமாவில்
விஜய்க்கு அம்மாவாக நடிக்க வாய்ப்பு வந்தா நடிப்பீங்களான்னு கேட்டபோது, நிச்சயமா நடிப்பேன். ஒரு நகைக்கடை விளம்பரத்துல ரெண்டு பெரும் நடிச்சிருந்தோம். அப்போ டைரக்டரை கூப்பிட்டு நான் நன்றி சொன்னேன். இவ்ளோ நாள் கழிச்சு என் மகனை மடியில படுக்க வச்சு ஷாட் எடுத்துக்கு. ஏன்னா இப்போ நானே மடியில படுத்துக்கோப்பான்னு கூப்பிட்டாலும் அவர் வர மாட்டார்னு சொல்லி சிரித்தார்