சிறகடிக்க ஆசையில் சூடு பிடித்த கதை.. ரோகிணிக்கு வரப்போகுது பெரிய பிரச்சனை! முத்து வாழ்க்கையில் திருப்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நாளை என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரோகிணியின் அம்மா மயக்கம் போட்டு ரோட்டில் விழுந்திருக்கிறார். இதனால் கிரிஷ் தனியாக தவித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் மிகப்பெரிய பிரச்சனை வரப்போகிறது.
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி பற்றிய ஒவ்வொரு உண்மைகளையும் முத்துமீனா தான் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே ரோகிணி பணக்கார வீட்டு பொண்ணு இல்ல என்று உண்மை கறிக்கடைக்காரர் மூலமாக முத்துவுக்கு தெரிய வந்து குடும்பத்தினரிடம் சொல்லி இருந்தனர். அதனால் விஜயா இப்போ வரைக்கும் ரோகிணியை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறார்.

விஜயாவை சமாதானப்படுத்துவதற்காக ரோகிணி மீண்டும் மீண்டும் கடன் வாங்கி ஒவ்வொரு பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே பழைய பிஏ ரோகிணியை மிரட்டிக் கொண்டிருக்கிறார். அது போதாது என்று சிட்டியும் அவ்வப்போது ரோகிணியை மிரட்டுகிறார். இந்த வரிசையில் இப்போது ஸ்ருதியின் அம்மாவும் ரோகிணியை மிரட்டிக் கொண்டிருக்கிறார். இப்படி திரும்பும் பக்கம் எல்லாம் அணுகுண்டுக்கு பக்கத்தில் இருக்கும் ரோகிணிக்கு இப்போது புது பிரச்சனை வரப்போகிறது.
அதாவது ரோகிணிக்கு கல்யாணம் முடிந்து ஒரு குழந்தை இருக்கும் உண்மை இப்பொழுது குடும்பத்திற்கு தெரியாமல் இருக்கிறது. ஆனால் இனி அது தான் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ரோகிணியின் மகன் கிரிஷை தத்தெடுக்க வேண்டும் என்று முத்துமீனா ஏற்கனவே முடிவெடுத்திருந்தனர். ஆனால் ரோகிணி மிரட்டியதால் அவருடைய அம்மா இதற்கு சம்மதிக்காமல் இருந்தால் இந்த நிலையில் நாளைக்கு என்று வெளியான ப்ரோமோவில் முத்து தன்னுடைய அப்பாவை ஸ்கூலில் விட்டு விட்டு காரில் வரும்போது தெருவில் ஒரு அம்மா விழுந்து கிடக்கிறார்.
அப்போது அங்கு ஒரு சிறுவன் அழுது கொண்டிருக்கிறார். சுற்றி கூட்டத்தினர் நின்று கொண்டிருக்கின்றனர். அப்போது முத்து பார்க்கும் போது கிரிஷ் பாட்டி என்று தெரிகிறது. அக்கம் பக்கத்தினரிடம் என்ன நடந்தது என்று விசாரிக்கும் போது ஒரு பைக்காரன் வேகமாக வந்தது, அப்போ அந்த பாட்டி அம்மா அவங்க பேரனை காப்பாத்திட்டு கீழ விழுந்துட்டாங்க, அதில் மூச்சுப்போச்சு இல்லாம இருக்காங்க என்று சொன்னதும் முத்து ரோகிணி அம்மாவை ஹாஸ்பிடலுக்கு கூட்டிக்கொண்டு போகிறார்.
அங்கு இருந்தவர்கள் எல்லோரும் இந்த அம்மா உயிரோடு இருக்கா? இல்லையா? என்று தெரியலையே என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ரோகினியின் அம்மா இறந்து போய்விட்டார் க்ரிஷ் நிலைமை பரிதாபமாக இருக்கும். அதனால் கிரிஷ் உடைய அம்மா யார் என்று முத்துவும் மீனாவும் தேட தொடங்குவார்கள். ஏற்கனவே அந்த குழந்தை மனோஜின் குழந்தையாக இருக்குமோ என்று முத்துவிற்கும் மீனாவிற்கும் சந்தேகம் இருக்கிறது.
அது போல கிரிஷ்க்கு ரோகிணி தான் தன்னுடைய அம்மா என்ற உண்மை தெரியும் என்பதால் முத்து கிரிஷை வீட்டிற்கு கூட்டிட்டு வரும்போது ரோகினிக்கு தான் அடுத்த பிரச்சனை வர இருக்கிறது. எது எப்படியோ இனி அடுத்த வாரம் இந்த சீரியல் சூடு பிடிக்கப் போகிறது.












Click it and Unblock the Notifications