“சிங்கப் பெண்ணே” சீரியல் நடிகருக்கு குழந்தை பிறந்தது.. புகைப்படத்தை வெளியிட்டு உருக்கமான பதிவு
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியலில் மகேஷ் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் தர்ஷக் தனக்கு குழந்தை பிறந்திருக்கும் மகிழ்ச்சி செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்துஇருக்கிறார். அதோடு தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தையும் வெளியிட்டு குழந்தை குறித்து சில நெகிழ்ச்சியான வார்த்தைகளையும் பகிர்ந்து இருக்கிறார்.
சன் டிவியில் டிஆர்பியில் முதல் இடத்தை சிங்க பெண்ணே சீரியல் தொடர்ச்சியாக பிடித்துக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கிராமத்தில் இருக்கும் ஆனந்தி தன்னுடைய குடும்ப சூழ்நிலையால் நகரத்திற்கு வந்து வேலை செய்யும் இடத்தில் படும் கஷ்டங்கள், காதல், நட்பு என்று கலவையாக இந்த சீரியல் பயணித்துக் கொண்டிருக்கிறது.

இந்த சீரியலில் மகேஷ், அன்பு மற்றும் ஆனந்தியின் முக்கோண காதலை மையமாகக் கொண்டு இந்த சீரியல் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இதில் ஆனந்தி அழகனை காதலித்துக் கொண்டிருக்கும் நிலையில் அழகன் யார் என்ற உண்மை தெரிய வருமா? என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறது.
அன்பு அழகனாக நடித்துக் கொண்டிருப்பதை தெரிந்து கொண்ட வில்லி ஒரு ஆளை செட் பண்ணி ஆனந்தியை மகேஷ் வாழ்க்கையில் இருந்து விலக்கிவிட பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் மகேஷ் தன்னுடைய காதலை ஆனந்தியிடம் சொல்ல வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக கதை போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் மகேஷ் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் தர்ஷக்கு சமீபத்தில் வெளியிட்ட பதிவு இணையத்தில் அதிகமான வாழ்த்துக்களை பெற்று வருகிறது.

அதாவது நடிகர் தர்ஷக், ஷில்பா என்பவரை திருமணம் செய்திருந்தார். இந்த தம்பதிக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. தன்னுடைய மகனின் புகைப்படத்தை தர்ஷக் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதோடு அந்த பதிவில் நாங்கள் எதிர்பார்த்திருந்த நிகழ்வு இறுதியாக நடந்து விட்டது.எங்கள் இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
என்னுடைய குழந்தையும், எங்கள் குழந்தையும் நன்றாக இருக்கிறார்கள். உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு அனைவருக்கும் நன்றி... என்று குறிப்பிட்ட தர்ஷக் அதோடு, என் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு சந்தர்ப்பத்தை நான் தவற விட்டேன். அது இன்னொரு நாளுக்கான கதை... இரண்டு நாட்கள் தாங்க முடியாத வேதனையான காத்திருப்புக்குப் பிறகு என்னுடைய அப்பாவாக என்னுடைய மகன் வீட்டிற்கு வந்து விட்டார்.

என்னுடைய மகளும் மனைவியும் நன்றாக இருக்கிறார்கள் என்று அந்த பதிவில் தர்ஷக் கூறி இருக்கிறார். இதற்கு அவரோடு சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் தொடர்ச்சியாக வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications