Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறகடிக்க ஆசை: சத்யா கேட்ட கேள்வி, முத்துவுக்கு வந்த சந்தேகம்! ரோகிணிக்கு வைத்த செக், இன்றைய அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறக்கடிக்க ஆசை சீரியலில் 2025 நவம்பர் 25ஆம் தேதிக்கான இன்றைய காட்சிகள் ரொம்ப பரபரப்பாக போயிருக்கு. மீனா வீட்டை விட்டுப் போனதால, குடும்பத்தில் என்னென்ன நடக்குதுன்னு பார்க்கலாம்.

Siragadikka aasai serial vijay tv

சத்யாவுக்கு யோசனை

முத்து கூட சண்டைபோட்டு வீட்டை விட்டுப் போன மீனா தன் அம்மா வீட்டுக்கு போகிறார். அங்க, அவரது அம்மாவும், தம்பி சத்யாவும் என்னப் பிரச்சனைன்னு கேட்குறாங்க. "மாமா கூடச் சண்டைபோட்டு வந்துட்டியா" என்று கேட்டதும் மீனா கண்ணீர் விட்டு அழத் தொடங்குகிறாள். அதனால அம்மா அவளை சமாதானப்படுத்தி, "நீ எதுவும் சொல்ல வேண்டாம்" என்று சொல்றாங்க. ஆனா, மீனா எந்த உண்மையையும் சொல்லலையா, இல்லையான்னு தெரியல.

ரேகாவின் உதவி

பின்னர் சத்யா அலுவலகத்திற்கு போகும்போது வருத்தமா இருக்கதை பார்க்கும் அவரது பாஸ் ரேகா, அவன்கிட்ட என்ன பிரச்சனைன்னு கேட்குறாங்க. குடும்பத்தில் பிரச்சனைன்னு சத்யா சொல்ல, அந்த பிரச்சனையை எப்படிச் சரி செய்வதுன்னு சத்யாவுக்கு அட்வைஸ் பண்ணுகிறார் ரேகா. பிறகு சத்யா, முத்துவை சந்திக்க போறான்.

முத்துவுக்கு வந்த சந்தேகம்

சத்யா முத்துவை பார்த்து பேசும்போது, முத்து நடந்ததெல்லாம் சொல்றார். முத்து, "நான் குடிச்சுட்டு வந்ததால் தான் அவ கோபிச்சுட்டு போனாள் என்பதை என்னால ஏத்துக்கவே முடியல" என்று சத்யாவிடம் புலம்புறார். "கண்டிப்பாக அதற்கு வேறு ஏதோ காரணம் இருக்கிறது, அதை எப்படியாவது கண்டுபிடிக்கணும்" என்று முத்து தீர்மானமாச் சொல்றார்.

மறுபுறம், வீட்டில் மீனா இல்லாததால, ரோகிணி எல்லா வேலைகளையும் இழுத்து போட்டுச் செய்கிறார். வீடு துடைத்துவிட்டு, அண்ணாமலைக்கு காப்பி போட்டுக் கொடுக்கிறாள். அந்த காப்பி மோசமாக இருந்ததால அண்ணாமலை சமிக்ஞை கொடுக்க, மற்றவர்கள் உஷாராகி "எங்களுக்குக் காப்பி வேண்டாம்" என்று சொல்றாங்க.

முத்துவின் எச்சரிக்கை:

அடுத்ததா காலை டிபன் செய்கிறேன் என ரோகிணி சொல்ல, ஸ்ருதி, ரவி ஆகியோர் "தாங்கள் வெளியே சாப்பிட்டுக் கொள்வதாக" சொல்லிட்டுப் போறாங்க. ரோகிணி இப்படி அதிகமாக வீட்டு வேலை செய்வதை பார்த்த முத்து, அவளை பார்த்து சந்தேகமா கேட்குறார்: இனி மீனா இந்த வீட்டுக்கு வரவே கூடாதுங்குறதுக்காக நீ இதெல்லாம் பண்ணுறியா" என்று கேட்கிறார்.

இதையடுத்து என்ன ஆனது? முத்து-மீனா சண்டை முடிவுக்கு வருமா? மீனா உண்மையைச் சொல்லுவாளா? ரோகிணி சிக்குவாளா, மாட்டாளா என்பதை இனி வரும் நாட்களில் பார்க்கலாம்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+