சிறகடிக்க ஆசை: முக்கியமான விஷயத்தை சொல்லி மிரட்டும் சுதா! ரோகிணி எடுத்த புது முடிவு! கோபத்தில் விஜயா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில், கடந்த எபிசோடில் ரோகிணி ஷோரூமிலிருந்து கொண்டு வந்த பையில் வந்த பாம்பால் வீட்டில் பெரும் கலவரம் ஏற்பட்டது. முத்துவின் சாமர்த்தியத்தால் பாம்பு வெளியேற்றப்பட்டாலும், அந்தச் சம்பவம் விஜயாவை ஆழமாகப் பாதித்துள்ளது. இன்று நடந்த எபிசோட், விஜயாவின் கவலையும், ரோகிணிக்கு வந்த அடுத்தத் தலைவலியும் தான்!

விஜயாவின் பதற்றம்
விஜயாவின் ரூமுக்குள் பாம்பு வந்தச் சம்பவத்தால், விஜயா மற்றும் மனோஜ் இருவரும் பேயடித்தது போல் ஆகிப் போனார்கள். ரோகிணி செய்த அசட்டுத்தனத்தால் தான் இந்தச் சிக்கல் வந்தது. மறுநாள் தனது யோகா கிளாசுக்குச் சென்ற விஜயா, அங்கே சிந்தாமணியை சந்திக்கிறார். அவரிடம் தனது ரூமுக்குள் பாம்பு வந்த விஷயத்தைச் சொல்ல, சிந்தாமணி அதைக் கேட்டதும் விஜயாவை இன்னும் அதிகப் பதற்றத்திற்கு உள்ளாக்குகிறார்.
"பாம்பு வந்தால் வீட்டிற்கு நல்லதல்ல" என்று கூறி, "இதுபோல் தனது உறவினரின் வீட்டுக்கு பாம்பு வந்த பின்னர், அவர்களின் வீடே எறிந்து நாசமானது" என்று சொல்லி விஜயாவுக்கு அச்சமூட்டுகிறார் சிந்தாமணி. பதற்றமடைந்த விஜயா, இதற்குக் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று பரிகாரம் செய்ய வேண்டும் என்று வீட்டில் வந்து அனைவரிடமும் விவரிக்கிறார். அப்போதுதான் முத்து, "அந்தச் சிந்தாமணியே ஒரு பாம்பு, அவங்க சொன்னதெல்லாம் நம்புறீங்களா?" என்று பதிலடி கொடுக்கிறார்.
தீபாவளி ட்விஸ்ட்
விஜயா கவலையுடன் இருக்க, அருகில் இருந்த அண்ணாமலை, "நானும் என்னோட அம்மாகிட்ட இந்தப் விஷயத்தைப் பத்திப் பேசினேன். அவங்களும் குலதெய்வம் கோவிலுக்கு வந்துட்டு போகச் சொன்னாங்க. அதனால் நாம எல்லாரும் ஒன்றாக குலதெய்வம் கோவிலுக்குச் சென்று வருவோம்" என்று சொல்கிறார்.
மனோஜின் மறுப்பு
அதுமட்டுமின்றி, தீபாவளியையும் அங்கு கொண்டாடிவிட்டு வருவோம் என்று அவர் கூறுகிறார். அனைவரும் சம்மதம் தெரிவிக்க, மனோஜ் மட்டும் முடியாது என மறுக்கிறார். ஷோரூமில் வியாபாரம் அதிகமாக இருக்கும் என்பதால், தன்னால் வர முடியாது என மனோஜ் சொல்கிறார். பாம்பு விவகாரம் ஒருபக்கம் ஓடிக் கொண்டிருக்க, ரோகிணிக்கு அடுத்த சிக்கல் ஆரம்பமாகிறது.
சுதாவின் மிரட்டல்
ரோகிணிக்கு ஒரு போன் கால் வருகிறது. அந்தப் பக்கம் பேசிய ஸ்ருதியின் அம்மா சுதா, தன்னிடம் வாங்கிய 2 லட்சத்தை உடனே திருப்பித் தருமாறு கேட்கிறார். பணம் அப்படியே கொடுக்காமல் விட்றலாம்னு நினைக்கிறியா? என்று ஆவேசமாகக் கேட்ட சுதா, ரோகிணியை நோக்கி, "நீ என்கிட்ட வாங்குன பணத்தை கொடுக்கலேனா உன்னோட மாமியாருக்கு (விஜயாவுக்கு) போன் பண்ணி, நீ கடன் வாங்குன விஷயத்தை சொல்லிடுவேன்" என்று அப்பட்டமாக பிளாக்மெயில் செய்கிறார்.
இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் மாட்டிக் கொண்டு முழிக்கும் ரோகிணி, இந்தப் பணத்தை அடைப்பதற்காக, அடுத்த திருட்டுத் திட்டத்திற்குத் தயாராவது போலத் தெரிகிறது. சுதா பிளாக்மெயில் செய்வது விஜயாவுக்குத் தெரிந்தால், ரோகிணியின் நிலை என்னவாகும் என்றக் கேள்வியுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்துள்ளது.
இதற்கிடையில் புதிய ரெஸ்டாரண்டுக்கு இரண்டு பெண்கள் வருகிறார்கள். அதில் ஒருவரிடம் தான் விஜயா அவார்ட் வாங்குவதற்காக நடித்துக் கொண்டிருந்தார். அந்த பெண் ஸ்ருதியிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது மீனா அங்கு வந்து தான் புதியதாக தொடங்கி இருக்கும் பொக்கேவை வைக்க அதை பார்த்தது அது பற்றி அந்தப் பெண் விசாரிக்க, உடனே ஸ்ருதி மீனாவின் புது பிசினஸ் பற்றி சொல்கிறார். அதற்கு அந்த பெண் தான் புதியதாக கட்டி இருக்கும் அப்பார்ட்மெண்டுக்கு நீதான் என்னை பூ கொடுக்கணும் என்று சொல்கிறார்.
பிறகு அதற்கு ஹோம் அப்ளையன்ஸ் வாங்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்க, மீனா ரோகிணியின் ஷோரூமில் வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்கிறார். அதற்கு அந்த பெண்ணும் சரி என்று சொல்லிவிடுகிறார். பிறகு ஸ்ருதி மீனாவிடம் உங்களைப் போல யாராலும் இருக்க முடியாது என்று பாராட்டுகிறார். இனி வரும் எபிசோடுகளில் நிச்சயம் செம ட்விஸ்ட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
Pandian Stores 2 serial update: பாண்டியன் செய்த முட்டாள்தனம்.. உயிருக்கு போராடும் கோமதி.. அரசி கேட்ட கேள்வி! -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications