Siragadikka Aasai: கிரிஷின் பிரச்சனைக்கு அம்மாதான் காரணம்.. டாக்டர் சொன்ன விஷயம்! சிறகடிக்க ஆசை சீரியல் சொன்ன பாடம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியல், குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்வுபூர்வமாகப் பேசி வருகிறது. இன்றைய எபிசோடில், கிரிஷின் மனநிலை மற்றும் அவனது தனிப்பட்ட பிரச்சினைகள் குறித்து டாக்டர் சொன்ன கருத்து, பலரையும் யோசிக்க வைத்துள்ளது.

ஸ்ருதியின் புதிய தொடக்கம்
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ஸ்ருதி, தனது வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கமாக, ஒரு கடையைத் திறக்க முடிவு செய்கிறார். அதற்குச் சீஃப் கெஸ்ட் ஆக ஒரு நடிகையைக் கூப்பிடலாம் என முயற்சி செய்தபோது, அதற்கான செலவு அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. இதை அறிந்த முத்து, "உன் அப்பாவைக் கொண்டே கடையைத் திறந்துவிடு. அவர் கைராசியானவர். இதுவரை அவர் திறந்து வைத்த கடைகள் எல்லாமே நல்லாத்தான் போயிட்டு இருக்கு" என்று கூறுகிறார்.
ஆனால், "சாப்பாட்டை கம்மி விலையில் கொடுத்தால் மக்கள் வருவார்கள்" என்று கூறி, ஆடம்பரமான தொடக்கத்தைத் தவிர்க்கும்படி அண்ணாமலை அறிவுரை கூறுகிறார். ரவிக்குத் துணையாக இருக்க வேண்டும் என ஸ்ருதிக்கு அறிவுரை கூறி, எல்லோரும் கிளம்புகின்றனர்.
ரோகிணியின் சதி
இந்த நேரத்தில், கிரிஷுக்கு கவுன்சிலிங் கொடுக்க டாக்டரிடம் அப்பாயின்மென்ட் வாங்கிய விஷயத்தை முத்துவிடம் மீனா சொல்கிறார். இதை மறைந்திருந்து கேட்ட ரோகிணி, "இவங்களால நம்ம நிம்மதி போயிடும் போல இருக்கு" என்று மனதிற்குள் நினைத்து, அவர்களைப் பழிவாங்கத் திட்டமிடுகிறாள்.
கிரிஷின் வாழ்வில் மீண்டும் ஒரு புயல்
மறுநாள், கிரிஷ் படிக்கும் பள்ளிக்கு போலீஸ்காரர்கள் வருகின்றனர். கிரிஷ் ஒரு மாணவனை பேனாவால் குத்தியதாகவும், பூந்தொட்டியால் அடிக்க வந்ததாகவும் புகார் வந்ததால், அவனை விசாரிக்க வந்ததாகச் சொல்கிறார்கள். அந்த மாணவனின் அப்பா பெரிய ஆள் என்பதால், விசாரணை செய்ய வேண்டும் எனப் போலீஸ் சொல்கிறது.
இதற்கிடையில், மகேஸ்வரியுடன் பேசிக்கொண்டிருந்த ரோகிணி, ஒரு பிரச்சனை முடிந்தவுடன் இன்னொரு பிரச்சனை ஆரம்பிப்பதாகப் புலம்புகிறாள். அப்போது, முத்துவும் மீனாவும் கிரிஷுடன் அங்கு வருகின்றனர். "இவங்க என்ன இங்கு?" என்று மீனா கேட்க, "அவங்க எனக்கு அப்பாயின்மென்ட் கேட்டாங்க" என்று சீதா சொல்கிறார்.
கிரிஷுக்கு கவுன்சிலிங் கொடுக்க வந்ததாக மீனா சொன்னதும், உள்ளே செல்லும் முன் ரோகிணி கிரிஷிடம், "உன்னால் எவ்வளவு பிரச்சனை வந்திருக்கு தெரியுமா? என்னைப் பற்றி எதுவும் சொல்லாதே. என் பெயர் கல்யாணி. நான் துபாயில் இருக்கிறேன் என்று மட்டும் சொல். வேறு எதுவும் சொல்லக்கூடாது" என்று எச்சரிக்கிறாள். இது கிரிஷின் மனநிலையில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
உணர்வுபூர்வமான முடிவு
கவுன்சிலிங் முடிந்த பிறகு, டாக்டர் சொன்ன விஷயம் மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது. "கிரிஷின் பிரச்சனைக்கு அவனுடைய அம்மாதான் காரணம்... ஆனால் அவனது பிரச்சனைக்குத் தீர்வும் அவனது அம்மாதான். அம்மாவின் அரவணைப்பு இல்லாததால் தான் அவன் இப்படி இருக்கிறான். அவனது அம்மாவை அவனுடன் இருக்கச் சொல்லுங்கள்" என்று டாக்டர் சொன்னார்.
இந்த எபிசோடு, பணத்தைவிடப் பாசம்தான் ஒரு குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு மிக முக்கியம் என்பதை உணர்த்துகிறது. மேலும், ஒரு தாயின் அரவணைப்பு ஒரு குழந்தைக்கு எவ்வளவு அவசியம் என்பதையும், சில நேரங்களில் நாம் செய்யும் தவறுகள் எப்படி நம் உறவுகளைப் பாதிக்கும் என்பதையும் எடுத்துரைக்கிறது. இது வெறும் சீரியல் எபிசோடு மட்டுமல்ல, ஒவ்வொரு பெற்றோரும் யோசிக்க வேண்டிய ஒரு முக்கியமான பாடம்.
-
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு












Click it and Unblock the Notifications