Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai Serial March 27, 2026 episode) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 மார்ச் 27ஆம் தேதிக்கான எபிசோட்டில், மனோஜ்க்கு இரண்டாவது கல்யாணம் செய்வதற்காக பார்த்த பெண் பற்றிய ரகசியம் தெரிய வருகிறது. அதைக் கேட்டு மனோஜ் அதிர்ச்சி அடைகிறார். அதனால் ரோகிணியை பழி வாங்குவதற்காக மனோஜ் இன்னொரு பிளான் போட்டு இருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

Siragadikka Aasai serial Vijay TV

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு

சிறகடிக்க ஆசை சீரியலில் (Siragadikka Aasai today episode) இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில், மனோஜ்க்கு இரண்டாவது கல்யாணம் செய்வதற்காக மேட்ரிமோனியில் பெண் பார்த்த யமுனா மனோஜுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, இதுவரை தன்னுடைய வாழ்க்கையில் 4 முறை கல்யாணம் நிச்சயிக்கப்பட்டும் ஒவ்வொரு முறையும் அது நடக்காமல் போய்விட்டதாக சொல்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மனோஜ், ஏன் ஒவ்வொரு முறையும் கல்யாணம் நின்றது என்று கேட்கிறார்.

மனோஜ்க்கு தெரிந்த உண்மை

அதற்கு யமுனா, முதல் முறை கல்யாணத்திற்கு முன் மாப்பிள்ளையின் அப்பா இறந்துவிட்டாராம். இரண்டாவது முறை மாப்பிள்ளையின் அம்மா இறந்துவிட்டாராம். மூன்றாவது முறை மாப்பிள்ளையின் அப்பா, அம்மா இருவரும் இறந்துவிட்டார்களாம். நான்காவது முறை மாப்பிள்ளையின் குடும்பமே விபத்தில் இறந்துவிட்டதாக சொல்லுகிறார்.

இதைக் கேட்ட மனோஜ் உள்ளுக்குள் பயந்து போய்விடுகிறார். "அடுத்தது என்னையும் கொல்லப் பிளான் பண்றாளோ?" என்று மனசுக்குள் நினைத்துக் கொள்கிறார். ஆனால் வெளியில் ஒன்றும் காட்டாமல், "நான் யோசித்து சொல்கிறேன்" என்று சொல்லி யமுனாவை அனுப்பிவிடுகிறார்.

அண்ணாமலை வீட்டில் விருந்து

இதற்கிடையில் வீட்டில் வேறு விஷயம் நடக்கிறது. மீனா மீண்டும் வீட்டுக்கு வந்ததால், அண்ணாமலை பெரிய விருந்து ஏற்பாடு செய்கிறார். தனது நண்பர் பரசு, விஜயாவின் தோழி பார்வதி உள்ளிட்ட பலரையும் அழைக்கிறார்.

விருந்துக்கு வந்திருந்த சீதாவிடம், அருணுக்கு உன் மேல இருந்த கோபம் குறைந்ததா என்று அண்ணாமலை கேட்கிறார். அதற்கு சீதா, அவர் சமாதானமாகிவிட்டார் என்று சொல்லுகிறார்.

வீட்டுக்கு வந்த போலீஸ்

அந்த நேரத்தில் போலீசார் வீட்டிற்கு வருகிறார்கள். அவர்களை பார்த்து முத்து "என்ன சார், ஏதாவது பிரச்சனையா?" என்று கேட்கிறார். அதற்கு போலீஸ் "நாங்க வந்தாலே பிரச்சனைனா?" என்று கேட்டு பதில் தருகிறார். பின்னர் உண்மை தெரிய வருகிறது. முன்பு நடந்த திருட்டு சம்பவத்தில் உதவி செய்ததற்காக, நகைகளை மீட்டுத் தந்ததற்கு நன்றி சொல்ல தம்பதியினர் போலீஸுடன் வந்து முத்துவுக்கும் மீனாவுக்கும் நன்றி தெரிவிக்கிறார்கள். அதோடு தங்க நாணயங்களை பரிசாக கொடுக்கிறார்கள்.

கோபத்தில் விஜயா

முதலில் முத்து அதை வாங்க மறுக்கிறார். ஆனால் அண்ணாமலை சொன்னதால் இறுதியில் வாங்கிக்கொள்கிறார். இதையெல்லாம் பார்த்த விஜயாவுக்கு கோபம் வருகிறது. உடனே மனோஜுடன் ரூமுக்குள் சென்று, "இந்த நிலைக்கு என்னை கொண்டு வந்த ரோகிணியை சும்மா விடக்கூடாது" என்று கோபமாக சொல்கிறார். அதற்கு மனோஜ் "என்னிடம் ஒரு ஐடியா இருக்கிறது" என்று கூறுகிறார்.

மனோஜ் போட்ட பிளான்

அதற்குப் பிறகு மனோஜ் ஷோரூமுக்கு சென்று, அங்கிருந்து ரோகிணிக்கு போன் செய்கிறார். மனோஜ் அழைத்ததால் ரோகிணி மிகவும் சந்தோஷமாக பேசுகிறார். மனோஜும் நல்லபடியாக பேசுவது போல நடிக்கிறார். "உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும்" என்று மனோஜ் சொன்னதும், "நீ எங்க கூப்பிட்டாலும் நான் வருவேன்" என்று ரோகிணி உடனே ஒப்புக்கொள்கிறார். போன் வைக்கும் முன் "ஐ லவ் யூ" என்று ரோகிணி சொல்கிறார். மனோஜும் "ஐ லவ் யூ டூ" என்று பதில் சொல்லி போனை வைக்கிறார்.

இதனால் ரோகிணி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். அதே நேரத்தில் கொஞ்சம் சந்தேகமும் வருகிறது. "இத்தனை நாள் என்னை வெறுத்த மனோஜ் இப்போ ஏன் இவ்வளவு பாசமாக பேசுறான்?" என்று யோசிக்கிறார். ஆனால் உடனே அந்த சந்தேகத்தை தள்ளிவிட்டு, "அவனுக்கு என்னை சிக்க வைக்கும் அளவுக்கு புத்தி இல்லை" என்று நினைத்து, மனோஜ் கூப்பிட்ட இடத்துக்கு கிளம்புகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+