Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறகடிக்க ஆசை: ரோகிணிக்கு அதிர்ச்சி கொடுத்த முத்து, மீனா.. ஏமாந்த மனோஜ்! ஸ்ருதி கேட்ட கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அக்டோபர் 23ஆம் தேதிக்கான எபிசோடில் ரோகிணியின் பிளான் படி அவருடைய திருமண நாள் கொண்டாட்டத்தில் மொத்த குடும்பமும் பணக்காரர்கள் போல நடிக்கிறார்கள். ஆனால் கடைசியில் ரோகிணிக்கு அதிர்ச்சி கிடைக்கிறது.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ரோகிணி, ஸ்ருதி மற்றும் மீனாவிடம் பார்ட்டியில் நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்க அதற்கு மீனாவும் ஸ்ருதியும் மறுப்பு தெரிவிக்கிறார்கள். நீங்க வேலை பார்க்க வேண்டும் என்பதற்காக நாங்கள் எதுக்கு பொய் சொல்லி நடிக்கணும் என்று இருவரும் கேள்வி கேட்க அதற்கு ரோகிணி முத்துவும், ரவியும் சம்மதம் சொல்லிட்டாங்க என்று சொன்னதும் வேறு வழியில்லாமல் மீனாவும், ஸ்ருதியும் சம்மதம் சொல்கின்றனர்.

television siragadikka aasai serial vijay tv

அதைத்தொடர்ந்து முத்துவிடம் மீனா நீங்க 50 காருக்கு ஓனரா என்று கிண்டல் செய்கிறார். அதற்கு அவர் நான் ஓனர் என்றால் நீ ஐம்பது காருக்கு ஓனரின் பொண்டாட்டியா? என்று நக்கல் அடிக்கிறார். ஆனாலும் மனோஜ் ரோகிணியும் பொய் சொல்றது பிடிக்கல வீட்டுக்கு வேற வழி இல்லாம தான் இவங்க நாடகத்துக்கு சம்மதம் சொல்லி இருக்கிறேன் என்று இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அடுத்த நாள் பங்க்ஷனில் ரோகிணி விஜயாவுக்கு பண்ணிய மேக்கப்பில் விஜயா அழகாக இருக்கிறார். அதை பார்த்ததும் விஜயா பிரண்டு பார்வதி நீ பார்ப்பதற்கு வசந்த மாளிகை படத்தில் வர கதாநாயகி மாதிரி இருக்க என்று கிண்டல் செய்து கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் அண்ணாமலை விஜயா அழகில் மயங்கி ஜொள்ளுவிட்டு விஜயா பின்னாடி சுற்றிக் கொண்டிருக்கிறார்.

அடுத்ததாக ரோகிணியும் வித்யாவும் வருகின்றனர். அப்போது மனோஜ் இந்த பங்க்ஷனிலேயே நீதான் ரொம்ப அழகா இருக்க என்று பாராட்டி ரோகிணியை கூட்டிக்கொண்டு கொண்டிருக்கிறார். அவர்களை தொடர்ந்து ரவியும், ஸ்ருதியும் வருகின்றனர். எல்லோரும் விஜயாவை பார்த்து அதிசயப்பட்டு பேசிக் கொண்டிருக்கின்றனர்.

television siragadikka aasai serial vijay tv

அப்போது முத்துவும், மீனாவும் வரவில்லை என்று சொன்னதும் அதற்கு விஜயா அவங்க இங்க வருவதற்கு வெட்கப்பட்டு ஓடிவிட்டார்கள் போல என்று கிண்டல் செய்து கொண்டிருக்கிறார். இந்த இடத்திற்கு வந்தாலும் அவர்கள் நம்ம மாதிரி இருக்க மாட்டாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது முத்துவும் மீனாவும் அங்கு வருகின்றனர்.

siragadikka aasai serial vijay tv

அப்போது முத்து, மீனா இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க இரு உன்னை நான் போட்டோ எடுத்துக்கிறேன் என்று போட்டோ எடுத்துக் கொண்டிருக்கிறார். அதை பார்த்து எல்லோரும் கண் வைக்கின்றனர். அப்போது மனோஜ் போன் பேசிக்கொண்டு போகும்போது முத்துவின் போனை தட்டி விடுகிறார். இதை பார்த்த வித்யா பதறி போய் போனுக்கு என்ன ஆச்சு என்று கேட்க ஒன்னும் இல்லை என்று முத்து சொல்லி விடுகிறார்.

பிறகு ரோகிணி நான் உங்க ரெண்டு பேரையும் போட்டோ எடுக்கிறேன் என்று சொல்ல, அதற்கு முத்து வேண்டாம் என்று சென்று விடுகிறார். முத்துவும் மீனாவும் போட்டோ எடுக்கும்போது அந்த போனை வாங்கி விட வேண்டும் என்று ரோகிணி போட்ட பிளான் கடைசியில் பெயிலியர் ஆகிவிட்டது. இதனால் ரோகிணி அதிர்ச்சியில் நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+