Siragadikka Aasai : மனோஜ்க்கு கிடைத்த சரியான தண்டனை! ரோகிணியின் நாடகம் முடிந்தது! முத்து கேட்ட கேள்வி
சென்னை, ஆகஸ்ட் 26, 2025: (Siragadikka aasai serial Today Episode) விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில், இன்றைய எபிசோடில் மனோஜுக்கு நேர்ந்த விபரீதம், குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதே நேரத்தில் விஜயா மற்றும் ரோகிணி செய்த செயலை குடும்பத்தினர் எல்லோரும் கலாய்த்து வருகின்றனர்.

மனோஜுக்கு நாய் கடி
மனோஜ் உடல்நிலை சரியில்லை என ரோகிணி போன் செய்ததால், அவர் பள்ளிக்குச் செல்லும் வழியில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, மனோஜ் அடித்த அதே நாய், வீட்டு வாசலில் குரைத்துக்கொண்டிருந்தது. கோபமடைந்த மனோஜ், கல்லை எடுத்து அடிக்க முயல, நாய் அவருடைய காலில் கடித்துவிட்டது. வலியில் துடித்த மனோஜை, நாயின் உரிமையாளர் வீட்டுக்கு அழைத்து வருகிறார். அப்போது அவர், "என்னுடைய நாய் பழிவாங்கிவிட்டது" என்று சொல்ல, மனோஜ் நாயைப் போலச் சில அசைவுகளைச் செய்து காட்டுகிறார்.
ஊசி மற்றும் எச்சரிக்கை
டாக்டர் வீட்டுக்கு வந்து மனோஜுக்கு ஊசி போட்டுவிட்டு, "அடுத்த ஐந்து வாரங்களுக்கு ஊசி போட வேண்டும். மேலும், தினமும் அந்த நாய் உயிரோடு இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். அந்த நாய்க்கு ஏதாவது ஆச்சுன்னா இவருடைய உயிருக்கு உத்தரவாதம் இல்லை" என்று எச்சரிக்கிறார். இதைக் கேட்டு குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
ரோகிணியின் தந்திரம் மற்றும் குடும்பத்தின் செயல்
மனோஜ் ஏன் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டுக்கு வந்தார் என்று விஜயா கேட்க, ரோகிணிதான் வரச் சொன்னார் என்று மனோஜ் சொல்வாரோ என்று பயந்த ரோகிணி, அவர் பர்ஸை மறந்துவிட்டதால் வந்ததாக மனோஜ் சொல்ல வைக்கிறார்.
மனோஜ், ரோகிணியிடம் "உனக்கு எப்படி இருக்கிறது? தலை சுற்றுகிறது என்று சொன்னாயே?" என்று கேட்க, "உன்னை நாய் கடித்தது என்று தெரிந்ததும் என் பிரச்சனை எல்லாம் சரியாகிவிட்டது" என்று சொல்லி சமாளிக்கிறார்.
முத்துவின் திட்டம்
ஒரு பக்கம் விஜயா மனோஜுக்காக ஜோசியரைப் பார்க்கச் செல்ல திட்டமிடுகிறார். மறுபுறம், முத்துவும் மீனாவும் மரம் நடுவது குறித்து வேடிக்கையாகப் பேசுகின்றனர். ரோகிணி விஜயாவின் செயலை ஆதரித்து ஜால்ரா அடிக்க, முத்துவும் மீனாவும் அதை வேடிக்கையாகப் பார்த்துச் சிரிக்கின்றனர்.
கிருஷை மீனா பார்ப்பாரா? கிரிஷ் விஷயம் குடும்பத்திற்கு தெரிய வருமா? என்று எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களுக்கு இன்று நடந்த சம்பவம் ஏமாற்றத்தை கொடுத்திருக்கும். ஆனாலும் இதுவரைக்கும் அதிகமாக பில்டப் பண்ணி பேசிக் கொண்டிருக்கும் மனோஜை இப்போது நாய் பழிவாங்கி இருக்கும் நிலையில் அவர் செய்யும் செயல்கள் சிரிக்க வைக்கும் வகையில் தான் இருக்கிறது. வழக்கம்போல இந்த வாரமும் கிரிஷ் பற்றிய உண்மைகள் குடும்பத்திற்கு தெரிய வாய்ப்பில்லை என்பது போலத்தான் இருக்கிறது.
-
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம்












Click it and Unblock the Notifications