Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறகடிக்க ஆசையில் நிஜ கதையையே கொண்டு வந்துட்டாங்களே! அதிரடியாக மாற்றப்பட்ட கதை, இனிதான் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் யாரும் எதிர்பார்க்காத கதைக்களம் தான் இப்போது வந்திருக்கிறது. அதாவது இந்த சீரியலில் முத்துவுக்கு சுற்றி பிரச்சனைகள் வருகிறது. ஒரு பக்கம் நீத்து தன்னுடைய ரெஸ்டாரண்ட்டை அடித்து நொறுக்கியது முத்து தான் என்று ரவியை நம்ப வைத்து இருக்கிறார். மறுபக்கத்தில் செல்வம் செய்த ஆக்சிடென்டால் முத்துவுக்கு பிரச்சனை வருகிறது.

இன்று சிறகடிக்க ஆசை சீரியலில் நடந்த சம்பவம், என்னங்க இப்படி பண்ணிட்டீங்களே.. இதற்கு தான் நேற்று ப்ரோமோ வெளியிடவில்லையா? இப்படி ஒரு மாஸ் சம்பவம் நடக்க போறதை நேற்று ப்ரோமோவில் காட்டாமல் விட்டுட்டீங்களே.. நீங்க எல்லாம் ஐடியா இல்லாத பசங்க என்று மனதில் ரசிகர்களின் மனதிற்குள் நினைக்கத் தோன்றியது, அதாவது ஏற்கனவே முத்துவுக்கு கிரைம் ரைட் கூடிக் கொண்டே போகிறது.

Siragadikka Aasai serial Vijay TV Serial

கோபக்கார முத்து

முத்துவின் முரட்டுத்தனத்தால் அவர் செய்யாத செயலுக்கெல்லாம் பஞ்சாயத்து வருகிறது. ரவி மற்றும் ஸ்ருதி வாழ்க்கையை சரி பண்ண வேண்டும் என்று முத்து நீத்து ரெஸ்டாரண்டுக்கு போய் அவரை மிரட்டி விட்டு வந்திருந்தார். ஆனால் அவர் வெளியே வந்ததும் இரண்டு நபர்கள் சென்று ரெஸ்டாரண்டை தீ வைத்துக் கொடுத்து இருக்கின்றனர்.

அதோடு நீத்துவும் அடித்து காலை உடைத்து வைத்திருக்கின்றனர் என்று நினைத்து சொல்லியிருக்கிறார். ஆனால் உண்மையில் நேத்து ஆள் செட் பண்ணி இப்படி செய்தாரா? அல்லது வழக்கம் போல சிட்டியின் வேலையா இருக்குமா என்ற குழப்பமும் இருக்கிறது. இந்த பஞ்சாயத்துக்கு மத்தியில் இன்று யாரும் எதிர்பார்க்காத இன்னொரு சம்பவம் நடந்தது.

சூழ்ச்சிகள்

இந்த ரெஸ்டாரண்ட் தீ வைத்த சம்பவத்தை பற்றி பேசிய முத்து மற்றும் செல்வம் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனால் முத்துவிடம் சண்டை போட்டுக்கொண்டு செல்வம் காரில் வேகமாக போக அந்த நேரத்தில், அருணுடைய அம்மா வர அவர் மீது காரை ஏற்றி ஆக்சிடென்ட் செய்து விடுகிறார். இதனால் தன்னுடைய அம்மா சம்பவம் இடத்திலேயே இறந்து போயிருக்கிறார்.

Siragadikka Aasai serial Vijay TV Serial

இறந்த நடிகை

இப்போது அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் காட்சிகள் போய்க்கொண்டிருக்கிறது, ஆனால் நிஜத்தில் அருணின் அம்மாவாக நடிகை ராஜேஸ்வரி நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்ப பிரச்சனையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அவர் நிஜத்தில் காலமானதை போலவே இப்போது சீரியலில் அவருடைய கேரக்டர் இறந்து போவது போன்று காட்டி இருக்கிறார்கள்.

பாவம் முத்து

இனி ரவியும் முத்துவுக்கு எதிராக நிற்கிறார், இப்போ மீனாவின் தங்கச்சி சீதாவும் அவருடைய கணவரும் முத்துக்கு எதிராக திரும்பப் போகிறார்கள். இதனால் இனி முத்துவிற்கு தான் பிரச்சனை ரவுண்டு கட்ட போகிறது. ரோகிணி பற்றிய உண்மைகள் தெரிய வந்ததும் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு முத்து மீனாவுக்கு தான் பஞ்சாயத்துக்கு இருக்கு என்று தெரியாமல் போய்விட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+