சிறகடிக்க ஆசையில் நிஜ கதையையே கொண்டு வந்துட்டாங்களே! அதிரடியாக மாற்றப்பட்ட கதை, இனிதான் சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் யாரும் எதிர்பார்க்காத கதைக்களம் தான் இப்போது வந்திருக்கிறது. அதாவது இந்த சீரியலில் முத்துவுக்கு சுற்றி பிரச்சனைகள் வருகிறது. ஒரு பக்கம் நீத்து தன்னுடைய ரெஸ்டாரண்ட்டை அடித்து நொறுக்கியது முத்து தான் என்று ரவியை நம்ப வைத்து இருக்கிறார். மறுபக்கத்தில் செல்வம் செய்த ஆக்சிடென்டால் முத்துவுக்கு பிரச்சனை வருகிறது.
இன்று சிறகடிக்க ஆசை சீரியலில் நடந்த சம்பவம், என்னங்க இப்படி பண்ணிட்டீங்களே.. இதற்கு தான் நேற்று ப்ரோமோ வெளியிடவில்லையா? இப்படி ஒரு மாஸ் சம்பவம் நடக்க போறதை நேற்று ப்ரோமோவில் காட்டாமல் விட்டுட்டீங்களே.. நீங்க எல்லாம் ஐடியா இல்லாத பசங்க என்று மனதில் ரசிகர்களின் மனதிற்குள் நினைக்கத் தோன்றியது, அதாவது ஏற்கனவே முத்துவுக்கு கிரைம் ரைட் கூடிக் கொண்டே போகிறது.

கோபக்கார முத்து
முத்துவின் முரட்டுத்தனத்தால் அவர் செய்யாத செயலுக்கெல்லாம் பஞ்சாயத்து வருகிறது. ரவி மற்றும் ஸ்ருதி வாழ்க்கையை சரி பண்ண வேண்டும் என்று முத்து நீத்து ரெஸ்டாரண்டுக்கு போய் அவரை மிரட்டி விட்டு வந்திருந்தார். ஆனால் அவர் வெளியே வந்ததும் இரண்டு நபர்கள் சென்று ரெஸ்டாரண்டை தீ வைத்துக் கொடுத்து இருக்கின்றனர்.
அதோடு நீத்துவும் அடித்து காலை உடைத்து வைத்திருக்கின்றனர் என்று நினைத்து சொல்லியிருக்கிறார். ஆனால் உண்மையில் நேத்து ஆள் செட் பண்ணி இப்படி செய்தாரா? அல்லது வழக்கம் போல சிட்டியின் வேலையா இருக்குமா என்ற குழப்பமும் இருக்கிறது. இந்த பஞ்சாயத்துக்கு மத்தியில் இன்று யாரும் எதிர்பார்க்காத இன்னொரு சம்பவம் நடந்தது.
சூழ்ச்சிகள்
இந்த ரெஸ்டாரண்ட் தீ வைத்த சம்பவத்தை பற்றி பேசிய முத்து மற்றும் செல்வம் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனால் முத்துவிடம் சண்டை போட்டுக்கொண்டு செல்வம் காரில் வேகமாக போக அந்த நேரத்தில், அருணுடைய அம்மா வர அவர் மீது காரை ஏற்றி ஆக்சிடென்ட் செய்து விடுகிறார். இதனால் தன்னுடைய அம்மா சம்பவம் இடத்திலேயே இறந்து போயிருக்கிறார்.

இறந்த நடிகை
இப்போது அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் காட்சிகள் போய்க்கொண்டிருக்கிறது, ஆனால் நிஜத்தில் அருணின் அம்மாவாக நடிகை ராஜேஸ்வரி நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்ப பிரச்சனையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அவர் நிஜத்தில் காலமானதை போலவே இப்போது சீரியலில் அவருடைய கேரக்டர் இறந்து போவது போன்று காட்டி இருக்கிறார்கள்.
பாவம் முத்து
இனி ரவியும் முத்துவுக்கு எதிராக நிற்கிறார், இப்போ மீனாவின் தங்கச்சி சீதாவும் அவருடைய கணவரும் முத்துக்கு எதிராக திரும்பப் போகிறார்கள். இதனால் இனி முத்துவிற்கு தான் பிரச்சனை ரவுண்டு கட்ட போகிறது. ரோகிணி பற்றிய உண்மைகள் தெரிய வந்ததும் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு முத்து மீனாவுக்கு தான் பஞ்சாயத்துக்கு இருக்கு என்று தெரியாமல் போய்விட்டது.
-
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ்












Click it and Unblock the Notifications