எங்க வீட்டில் விசேஷம்! மனைவியோடு மகிழ்ச்சியை பகிர்ந்த சிறகடிக்க ஆசை சீரியல் வெற்றி வசந்த்! குவியும் வாழ்த்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் மூலமாக பலருடைய ஃபேவரிட் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் வெற்றி வசந்த்க்கு கடந்த வருடத்தில் திருமணம் நடந்தது. அவருடைய மனைவி வேறு யாருமில்லை விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்னி சீரியல் கதாநாயகி தான். இந்த தம்பதி தான் இப்போது தங்களுடைய மகிழ்ச்சியை ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்கள்.
பொதுவாக சீரியல்களில் ஒன்றாக நடிப்பவர்கள் காதலித்து திருமணம் செய்திருப்பதை பார்த்திருப்போம். ஆனால் சீரியலில் அண்ணன் தங்கையாக ஒரே ஒரு எபிசோடில் நடித்த ஜோடி காதலித்து திருமணம் செய்தது கடந்த வருடத்தில் பெரிதாக பேசப்பட்டது. ஆனால் அந்த தம்பதி தங்களை பற்றிய வதந்திகளையும் ட்ரோல்களையும் கண்டு கொள்ளாமல் மகிழ்ச்சியாக தங்களுடைய பயணத்தை தொடர்ந்து வருகிறார்கள். அது வேறு யாரும் இல்லை சீரியல் நடிகர் வெற்றி வசந்த் மற்றும் வைஷ்ணவி தான்.

வெற்றி வசந்த் விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவரை பல ஆண்கள் தன்னை போன்ற கேரக்டரில் இருப்பதாகவே பார்த்து வருகிறார்கள். கோவப்படும் இடத்தில் தன்னுடைய கோபத்தை டக்கென காட்டிவிடுவார். அதே நேரத்தில் தன்னுடைய குடும்பத்திற்கும், மனைவி குடும்பத்திற்கும் மரியாதையும் கொடுப்பார். ஆனாலும் எல்லாரிடமும் அவமானப்பட்டு அனுதாபத்தையும் பெற்று விடுகிறார்.
ஐயா முத்து நீ எங்க வீட்டு சொத்து என்று எல்லாரும் கொண்டாடுற மாதிரி தான் வெற்றி இப்போது சின்னத்திரை விஜய் சேதுபதியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவருடைய மனைவி வைஷ்ணவியும் லேசப்பட்டவங்க இல்ல, இவங்களும் சின்ன சின்ன வாய்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தான் சீரியலில் கதாநாயகி ஆனாங்க. ஆரம்பத்தில் ராஜா ராணி சீரியலில் சின்ன கேரக்டரில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு அவருக்கு பொன்னி சீரியலில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது.
அந்த நேரத்தில் கூட இவரெல்லாம் கதாநாயகியா? என்று கூட சிலர் கலாய்த்து வந்தனர். ஆனாலும் அவர் அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை தொடர்ந்து அந்த சீரியலில் நடித்து வந்தார். சமீபத்தில் அந்த சீரியல் முடிவடைந்தது. கல்யாணத்திற்கு பிறகு இந்த ஜோடியை நிம்மதியாய் இருக்க விடுறாங்களானா அதுவும் கிடையாது.. வெற்றிவசந்துக்கு ஏத்த ஜோடி நீ இல்லம்மான்னு சிலர் வைஷ்ணவியை டேக் செய்து கமெண்ட் போட்டு இருக்காங்க.
ஒரு கட்டம் வரைக்கும் அமைதியா இருந்த வைஷ்ணவி ஒரு நாள் பொங்கி எழுந்து அழுதுட்டாங்க. அதற்குப் பிறகு வெற்றி தன்னுடைய மனைவியோடு சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்து உனக்கு நான்கு இருக்கிறேன் என்று சப்போர்ட்டை தெரிவித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு வைஷ்ணவியின் அப்பா இறந்து போயிட்டார்.

அப்போதும் வெற்றி வசந்த தன்னுடைய மாமனார் இறப்பிற்கு உருக்கமாக நீண்ட பதிவை போட்டு இருந்தார். அந்த பதிவை பார்பவர்களுக்கு இவர் மருமகன் மட்டுமல்ல அந்த குடும்பத்திற்கு ஒரு மகனாகவே இருந்திருக்கிறார் என்று தான் சொல்ல வைத்தது. அதுபோல பல பேட்டியில் வெற்றி தன்னுடைய மாமனார் மற்றும் மனைவி குடும்பத்தை விட்டுக் கொடுக்காமல் தான் பேசிக் கொண்டிருக்கிறார்.
அதேபோல வைஷ்ணவியும் சோசியல் மீடியாவில் வெற்றி வசந்த்தை டேக் செய்து அதிகமான போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இன்று இந்த தம்பதி தங்களுடைய திருமண நாளை கொண்டாடுகிறார்கள். இந்த தம்பதிக்கு திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் வெற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவியோடு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.
அந்த பதிவில் "ஒரு வருடம் ஆன போதிலும் உன்னை நேசிக்கும் என் காதல் முதல் நாள் போல இன்னும் தீவிரமாகவும் ஆழமாகவும் உள்ளது... என் மனைவியே! மேன்மேலும் இணைந்து வளர்ந்து, வாழ்ந்து.. உயர்வோம்! என்றென்றும் காதலுடன் உன் கணவன் அன்பு மாமா" என்று அந்த பதிவுக்கு கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இதற்கு சின்னத்திரை பிரபலங்கள் ரசிகர்கள் பலரும் இந்த தம்பதிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். நாமும் நம்முடைய வாழ்த்தை தெரிவித்து கொள்வோமா நண்பர்களே?
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications