ஒரு கெட்டவன் கையில கண்ணாம்மாவை பிடிச்சு குடுக்கணும்... ஆஹா என்ன ஒரு எண்ணம்!
சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் கருப்பு கண்ணம்மாவை கட்டிக்க எவனும் வர மாட்டான்னு சித்தி நக்கல் பண்றாங்க
ஒரு கெட்டவன் கையில கண்ணம்மாவை புடிச்சு கொடுக்கணும்னு அவளின் சித்தி என்னமா டயலாக் பேசறாங்க.
மாயாண்டியை வச்சு கண்ணாம்மாவின் மாப்பிள்ளை யாருன்னு கேட்கறாங்க. அவன்தான் அன்னிக்கு என் கூட சண்டை போட்டான்னு சொல்றான் மாயாண்டி.

நொண்டி இல்லை
உன் கூட சண்டை போட்டானா.. என்னடா சொல்றே..அவன்தான் நொண்டியாச்சேன்னு சொல்றாங்க கண்ணம்மாவின் சித்தி. நொண்டியா..பறந்து பறந்து என் கூட சண்டை போட்டான்.ஆளும் நல்லாத்தான் இருக்கான்னு சொல்ல அசந்து போறாங்க சித்தியும், பாட்டியும்.

நீதான் மாயாண்டி
எப்படியாவது நீதான் மாயாண்டி கண்ணம்மாவை கல்யாணம் செய்துக்கணும்னு பாட்டி சொல்ல, எப்படியாவது கண்ணம்மாவை ஒரு கெட்டவன் கையில புடிச்சு குடுக்கணும்.அந்த கெட்டவன் நீதான் மாயாண்டின்னு சித்தி சொல்றாங்க.

பாரதி லவ்
கண்ணம்மாவுக்கு டாக்டர் பாரதி போன் பண்றான்.. ரெண்டு பேரும் ஆசையா பேசிக்கறாங்க. அம்மாகிட்ட நம்ம லவ் பத்தி சொல்லிட்டேங்கன்னு சொல்றான் பாரதி..அப்படியான்னு சந்தோஷமா சிரிக்கறா கண்ணம்மா.

அழகு சிரிப்பு
கண்ணம்மா நீங்க சிரிக்கறது எவ்ளோ நல்லா இருக்கு தெரியுமா..உங்க குரல் இனிமைங்கன்னு சொல்றான். கண்ணம்மா சிரிக்கறா...உங்க அம்மாகிட்ட கண்ணாம்மாவைத்தான் காதலிக்கறேன்னு சொல்லிட்டீங்களான்னு கேட்கறா.

காதலிக்கிறேன்
ஒரு பொண்ணை காதலிக்கறேன்..அவளைத்தான் கல்யாணம் செய்துக்க போறேன்னு மட்டும் சொல்லி இருக்கேன். அம்மாவும் சரின்னு சொல்லிட்டாங்கன்னு சொல்றான் பாரதி. அதானே பார்த்தேன்... என்னை காதலிக்கறேன்னு சொன்னா நடக்குமோ நடக்காதோங்கன்னு சொல்றா கண்ணம்மா.

நடத்தி காட்டுவேன்
இல்லை..கண்ணம்மா நான் நடத்தி காட்டுவேன்.. வெறும் அழகை மட்டுமே பார்த்துகிட்டு இருந்த அவங்க இனி மனசையும் பார்ப்பங்கன்னு சொல்றான் பாரதி. உங்களை அந்த முருகன் எனக்கு குடுத்துட்டாரான்னு குதூகலிக்கறா கண்ணம்மா..
அந்த சமயத்துலதான் சித்தி மேற்கண்ட டயலாக்கை மாயாண்டிகிட்ட பேசறாங்க.












Click it and Unblock the Notifications