வாரிசு நடிகைக்கு ஆம்பூர் பிரமுகரிடம் காதல்.. அம்மாவின் எதிர்ப்பு.. கருணாநிதி கிட்ட மன்றாடி: பிரபலம்
சென்னை: தாயை சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பதை உங்கள் பெண் குழந்தைகளுக்கு கற்று தாருங்கள். நான் இந்த விஷயத்தில் தவறிவிட்டேன் என்று மூத்த நடிகை லட்சுமி வருத்தத்துடன் சொன்னதாக, ஒரு பேட்டியில் மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் கூறியிருக்கிறார்.
Behind cinema என்ற யூடியூப் சேனலுக்கு பாண்டியன் பேட்டி தந்துள்ளார்.. அதில், மூத்த நடிகை லட்சுமி பற்றி பல்வேறு தகவல்களை கூறியிருக்கிறார்.. அதன் சுருக்கம்தான் இது:

2வது கணவர் மோகன் சர்மாவுடன் வசித்த காலத்தில், மகள் ஐஸ்வர்யாவுடனும் லட்சுமிக்கு சண்டை வந்தது.. ஒரே வீட்டில் ஐஸ்வர்யா, மோகன் சர்மா, லட்சுமி இந்த 3 பேராலும் இருக்க முடியவில்லை.. மோகன் ஷர்மா பிரிந்து சென்றதற்கும், ஐஸ்வர்யா பிரிந்து செல்வதற்கும் இதுதான் காரணம் என்று இன்றுவரை நம்பப்பட்டு வருகிறது.
ஐஸ்வர்யா: ஒரு மகளாக தன்னுடைய கட்டுப்பாட்டில் ஐஸ்வர்யா இருக்க வேண்டும் என்று லட்சுமி விரும்பினார்.. ஆனால், ஐஸ்வர்யா சினிமாவுக்கு நடிக்க வந்ததுமே, சொந்தக்காலில் நின்ற பிறகு, அதுவும் லட்சங்களில் சம்பளம் வாங்க துவங்கியதுமே லட்சுமியின் கட்டுப்பாட்டிலிருநது வெகுதூரம் பிரிந்து சென்றுவிட்டார்..
ஐஸ்வர்யா செய்து கொண்ட திருமணமும் தோல்வியில் முடிந்தது.. ஆம்பூரை சேர்ந்த முஸ்லிம் பிரமுகரை திருமணம் செய்தார் ஐஸ்வர்யா.. இந்த முஸ்லிம் இளைஞரிடமிருந்து தன்னுடைய மகளை பிரித்து தர வேண்டும் என்று, அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதியிடம் கெஞ்சி உதவிக்கேட்டார் லட்சுமி..
பிச்சை போடுங்கள்: "எப்படியாவது என் மகளை மீட்டுக்கொடுங்க, அந்த இளைஞன் என் மகளுக்கு சரியான கணவன் இல்லை, என் மகள் வாழ்க்கைக்கு பிச்சை போடுங்கள் என்று கெஞ்சினார். இதுவரை லட்சுமி யாரிடமும் கெஞ்சியதோ, தாழ்ந்து போனதோ இல்லை.. அகம்பாவத்தை முழுமையாக கொண்டவர் லட்சுமி.. ஆனால், தன்னடைய மகளை எப்படியாவது மீட்க வேண்டும் என்று கடுமையாக போராடினார். ஆனால் அது பெரிய அளவில் பலனளிக்கவில்லை. இந்த கோபம் மகள் மீது இன்றுவரை லட்சுமிக்கு உள்ளது..
ஒரு மகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதில் நான் தவறிவிட்டேன்.. அதனால்தான், இப்போது ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து நல்ல பிள்ளையாக வளர்த்து வருகிறேன். ஐஸ்வர்யாவுக்கு செய்ய தவறியதையெல்லாம், ஒரு தாய் செய்ய வேண்டிய அனைத்தையும் இந்த தத்தெடுத்து வளரும் மகளுக்கு செய்து வருகிறேன் என்று சொல்லி, அந்த குழந்தையை பாராட்டி, சீராட்டி வளர்த்து வருகிறார் லட்சுமி.
தாய் - தகப்பன்: மற்ற பெற்றோர்களுக்கு நான் சொல்லி கொள்வது என்னவென்றால், பெண் குழந்தைகளை உங்களுடைய கண்காணிப்பிலேயே, உங்களது அரவணைப்பிலேயே வைத்து கொள்ளுங்கள்..
உங்களைவிட அந்த குழந்தைகளுக்கு அன்பு செலுத்தவும், அறிவுரை வழங்குபவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. தாயை சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பதை கற்று தாருங்கள். நான் இந்த விஷயத்தில் தவறிவிட்டேன். எனவே, என்னுடைய அனுபவத்தை உங்களுக்கு சொல்கிறேன். சொந்த காலில் நிற்க கூடிய பெண்களாக அவர்களை வளருங்கள்" என்பதே லட்சுமியின் வேண்டுகோள்" என்றெல்லாம் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார் தமிழா தமிழா பாண்டியன்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications