Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாரிசு நடிகைக்கு ஆம்பூர் பிரமுகரிடம் காதல்.. அம்மாவின் எதிர்ப்பு.. கருணாநிதி கிட்ட மன்றாடி: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாயை சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பதை உங்கள் பெண் குழந்தைகளுக்கு கற்று தாருங்கள். நான் இந்த விஷயத்தில் தவறிவிட்டேன் என்று மூத்த நடிகை லட்சுமி வருத்தத்துடன் சொன்னதாக, ஒரு பேட்டியில் மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் கூறியிருக்கிறார்.

Behind cinema என்ற யூடியூப் சேனலுக்கு பாண்டியன் பேட்டி தந்துள்ளார்.. அதில், மூத்த நடிகை லட்சுமி பற்றி பல்வேறு தகவல்களை கூறியிருக்கிறார்.. அதன் சுருக்கம்தான் இது:

aishwarya

2வது கணவர் மோகன் சர்மாவுடன் வசித்த காலத்தில், மகள் ஐஸ்வர்யாவுடனும் லட்சுமிக்கு சண்டை வந்தது.. ஒரே வீட்டில் ஐஸ்வர்யா, மோகன் சர்மா, லட்சுமி இந்த 3 பேராலும் இருக்க முடியவில்லை.. மோகன் ஷர்மா பிரிந்து சென்றதற்கும், ஐஸ்வர்யா பிரிந்து செல்வதற்கும் இதுதான் காரணம் என்று இன்றுவரை நம்பப்பட்டு வருகிறது.

ஐஸ்வர்யா: ஒரு மகளாக தன்னுடைய கட்டுப்பாட்டில் ஐஸ்வர்யா இருக்க வேண்டும் என்று லட்சுமி விரும்பினார்.. ஆனால், ஐஸ்வர்யா சினிமாவுக்கு நடிக்க வந்ததுமே, சொந்தக்காலில் நின்ற பிறகு, அதுவும் லட்சங்களில் சம்பளம் வாங்க துவங்கியதுமே லட்சுமியின் கட்டுப்பாட்டிலிருநது வெகுதூரம் பிரிந்து சென்றுவிட்டார்..

ஐஸ்வர்யா செய்து கொண்ட திருமணமும் தோல்வியில் முடிந்தது.. ஆம்பூரை சேர்ந்த முஸ்லிம் பிரமுகரை திருமணம் செய்தார் ஐஸ்வர்யா.. இந்த முஸ்லிம் இளைஞரிடமிருந்து தன்னுடைய மகளை பிரித்து தர வேண்டும் என்று, அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதியிடம் கெஞ்சி உதவிக்கேட்டார் லட்சுமி..

பிச்சை போடுங்கள்: "எப்படியாவது என் மகளை மீட்டுக்கொடுங்க, அந்த இளைஞன் என் மகளுக்கு சரியான கணவன் இல்லை, என் மகள் வாழ்க்கைக்கு பிச்சை போடுங்கள் என்று கெஞ்சினார். இதுவரை லட்சுமி யாரிடமும் கெஞ்சியதோ, தாழ்ந்து போனதோ இல்லை.. அகம்பாவத்தை முழுமையாக கொண்டவர் லட்சுமி.. ஆனால், தன்னடைய மகளை எப்படியாவது மீட்க வேண்டும் என்று கடுமையாக போராடினார். ஆனால் அது பெரிய அளவில் பலனளிக்கவில்லை. இந்த கோபம் மகள் மீது இன்றுவரை லட்சுமிக்கு உள்ளது..

ஒரு மகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதில் நான் தவறிவிட்டேன்.. அதனால்தான், இப்போது ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து நல்ல பிள்ளையாக வளர்த்து வருகிறேன். ஐஸ்வர்யாவுக்கு செய்ய தவறியதையெல்லாம், ஒரு தாய் செய்ய வேண்டிய அனைத்தையும் இந்த தத்தெடுத்து வளரும் மகளுக்கு செய்து வருகிறேன் என்று சொல்லி, அந்த குழந்தையை பாராட்டி, சீராட்டி வளர்த்து வருகிறார் லட்சுமி.

தாய் - தகப்பன்:
மற்ற பெற்றோர்களுக்கு நான் சொல்லி கொள்வது என்னவென்றால், பெண் குழந்தைகளை உங்களுடைய கண்காணிப்பிலேயே, உங்களது அரவணைப்பிலேயே வைத்து கொள்ளுங்கள்..

உங்களைவிட அந்த குழந்தைகளுக்கு அன்பு செலுத்தவும், அறிவுரை வழங்குபவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. தாயை சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பதை கற்று தாருங்கள். நான் இந்த விஷயத்தில் தவறிவிட்டேன். எனவே, என்னுடைய அனுபவத்தை உங்களுக்கு சொல்கிறேன். சொந்த காலில் நிற்க கூடிய பெண்களாக அவர்களை வளருங்கள்" என்பதே லட்சுமியின் வேண்டுகோள்" என்றெல்லாம் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார் தமிழா தமிழா பாண்டியன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+