Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“சுந்தரி” கேபி எடுத்த அதிரடியான முடிவு.. சீரியலை தாண்டியும் அசத்தல்.. இனி கலெக்டர் இல்ல நிஜ வாத்தியாரு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் கேப்ரில்லா நேற்று மே ஒன்று உழைப்பாளர் தினத்தில் புதியதாக நடிப்பு பள்ளி ஒன்றை ஆரம்பித்து இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

பொதுவாக சீரியலாக இருந்தாலும் சரி சினிமாவாக இருந்தாலும் சரி அதில் அதிகமாக அடுத்த மாநில நடிகைகள் தான் நடிக்க வைக்கப்படுகிறார்கள். இயக்குனர்கள் முதல் ரசிகர்கள் வரை எல்லோருமே அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் ஒரு சிலர்தான் தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் பல நடிகைகள் பல்வேறு திறமைகளோடு இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாக ஒரு சில நடிகைகள் தங்களுடைய நடிப்பை வெளிக்காட்டி மக்கள் மனதில் இடம் பிடித்து இருக்கிறார்கள்.

Sun TV Sundari Serial Actress Gabriella Starting Cinema Training School

அதில் ஒருவர் தான் நடிகை கேப்ரில்லா. இவர் டிக் டாக் ஆக்டிவாக இருந்த காலகட்டத்தில் அதில் கவிதை படிப்போமா? என்று கதை, கவிதை படித்து பெரிய அளவில் பிரபலம் அடைந்திருந்தார். அந்த நிலையில் தான் அவருக்கு சன் டிவியில் தொடங்கப்பட்ட சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சீரியலில் ஆரம்பத்திலேயே இவர் மீது அதிகமான எதிர்பார்ப்பு மக்களுக்கு தொடங்கிவிட்டது.

ஆனாலும் இவர் ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு சாம்பியன் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் பாதியிலேயே போட்டியிலிருந்து விலகி இருந்தார். அதற்கு பிறகு தான் சினிமா மற்றும் சீரியலின் வாய்ப்புக்காக அதிகமாக முயற்சி செய்து கொண்டிருந்த நிலையில் கேப்ரில்லாவிற்கு சுந்தரி சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பெரிய அளவில் பாராட்டு மற்றும் வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது.

சிவப்பாக அழகாக இருந்தால்தான் வாய்ப்பு என்று இல்லை என்று கருப்பு நிறமும் அழகுதான் என்று இவருடைய நடிப்புக்கு ஏராளமான ரசிகர்கள் ஆதரவை கொடுத்து வருகின்றனர். அதே நேரத்தில் சுந்தரி சீரியலில் படிக்காத பெண்ணாக இருந்த கேபி தன்னுடைய சொந்த உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் படித்து கலெக்டர் ஆகி இருக்கிறார்.

அதுபோல சொந்த வாழ்க்கையிலும் நடிப்பிற்காக சொந்த ஊரை விட்டு வெளியே வந்து பல போராட்டங்களுக்குப் பிறகு இன்று தனக்குன்னு ஒரு இடத்தை பிடித்த கேபி தன்னைப்போல சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்காக சொந்தமாக ஒரு நடிப்பு பள்ளி ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். அதற்கு கேபி, "சினிமா ஃபேக்டரி தியேட்டர்" என்ற பெயர் வைத்திருக்கிறார்.

அதன்மூலம் 20 பேருக்கு நடிப்பு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியராக உயர்ந்திருக்கிறார். நேற்று மே ஒன்றாம் தேதி உழைப்பாளர் தினத்தை ஒட்டி தன்னுடைய சொந்த நடிப்பு பள்ளியை ஆரம்பித்து இருப்பதை பற்றி இன்ஸ்டாவில் பகிர்ந்து இருக்கிறார். அது பலருடைய பாராட்டை பெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+