புடவையில் சகல பாவனைகளையும் காட்டிய சுருதி... பரிதவித்துப் போன ரசிகர்கள்
சென்னை: புடவையில் புல்லரிக்க வைக்கும் அழகான சிரிப்பை காட்டி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் சுருதி.
சுருதியின் விதவிதமான போட்டோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் ஆக்கிரமித்து வருகிறது.
ஓசூர் மக்களுக்கு செம குட் நியூஸ்.. வருகிறது பிரம்மாண்ட விமான நிலையம்.. ஆரம்பித்த பணிகள்!
திறமைக்கு கிடைத்த அங்கீகாரம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் வெற்றியைத் தொடர்ந்து தான் ஒவ்வொரு சீசனிலும் தொடங்கப்பட்டு கொண்டிருக்கிறது. தற்போது நான்கு சீசன்கள் முடிவடைந்து இருந்தாலும் ஐந்தாவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட சுருதி இந்த நிகழ்ச்சியில் அதிக நாட்கள் இருக்கவில்லை என்றாலும் ரசிகர்களின் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து விட்டார்.
காயின் டாஸ்க்கில் பின்னடைவு
ஒவ்வொரு சீசனிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒரு சில போட்டியாளர்கள் வெளியேற்றும் ரசிகர்களை அதிகமாக பாதித்துவிடும். அந்த மாதிரிதான் தற்போதையை சீசனில் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியான வெளியேற்றமாக இருந்தது சுருதியின் வெளியேற்றம் தான். இவர் ஆரம்பத்தில் இருந்தே தன்னுடைய விளையாட்டை சிறப்பாக விளையாடி வந்தார். விளையாட்டு என்று வந்தால் அதில் வெறியாகவும், விவேகத்தோடும் செயல்படும் இவருக்கு அதிகமான ஓட்டுகளும் கிடைத்துக் கொண்டிருந்தது. ஆனால் தாமரையுடன் காயின் டாஸ்க்கில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவருக்கு ஓட்டுகள் சரிய தொடங்கிவிட்டது.
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்
நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு சுருதி சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். பல ரசிகர்கள் இவர் வெளியேறியது தங்களுக்கு வருத்தமாக இருந்து வருகிறது என்று கூறி வருகின்றனர். இப்போது நடந்துகொண்டிருக்கும் டிக்கெட் டூ பினாலேவில் சுருதி இருந்திருந்தால் விளையாட்டு வெறித்தனமாக இருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு மாடல் அழகியாக இருந்தாலும் தற்போது ரசிகர்களின் மனதை கவர்ந்த பிரபலமான அழகியாக மாறி இருக்கிறார்.
விதவிதமான பாவனைகளில் அசத்தல்
ஏற்கனவே மாடலிங்கில் இருந்து கொண்டிருந்த இவர் தற்போது முழு நேரமாக மாடலிங்கில் கவனத்தை செலுத்தி வருகிறார். அடிக்கடி மாடல் உடைகளில் போட்டோஷூட் நடத்திக் கொண்டிருந்த இவர் தற்போது பிங்க் கலர் புடவையில் ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கிறார். ஒவ்வொரு போட்டோவிலும் ஒவ்வொரு வகையான பாவனைகளை காட்டி ரசிகர்களை கவர்ந்து இழுத்திருக்கிறார். இதில் எந்த போட்டோவை பார்ப்பது எதை விடுவது என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகிறார்களாம். அதுமட்டுமல்லாமல் இவர் போஸ்ட் போட்ட ஒரு சில நிமிடங்களுக்குள் லைக்குகள் குவிந்து வருகிறது.