இறங்கு திசையில் சூர்யா.. ஏற்கனவே படம் ஓடல.. வெற்றிமாறனின் வாடிவாசல் வருமா? உடைத்து பேசிய பிரபலம்
வெற்றிமாறன், நடிகர் சூர்யா, அமீர் என மூவரும் வாடிவாசல் படத்தில் இணைய போவதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது.. சூர்யா, அமீர், வெற்றிமாறன் மூவருமே தனிப்பட்ட முறையில் மனமாற்றம் ஏற்பட்டு, மூவருமே வாடிவாசலில் இணைவதால், மிகப்பெரிய வெற்றியை இந்த படம் எதிர்காலத்தில் பெறக்கூடும் என்று திரைப்பிரபலங்கள் சிலரும் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்திருந்தனர்.

வாடிவாசல் - ஜல்லிக்கட்டு காளை
இந்நிலையில், AG Modern Media யூடியூப் சேனலில் பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், "சூர்யாவுக்கு தற்போது இறங்கு திசை நடக்கிறது.. அவர் நடித்த படங்கள் எதுவுமே சரியாக போவதில்லை..
ஆனால் வாடிவாசல் படத்துக்காக வெற்றிமாறனை மிகவும் நம்பியிருந்தார்.. இதற்காக ஜல்லிக்கட்டு காளையுடன் பயிற்சியும் எடுத்துக் கொண்டிருந்தார்.. ஆனால், இன்னமும் வாடிவாசல் படம் துவங்குவதாக தெரியவில்லை.. இதற்கு காரணம் என்னவென்று கேட்டால், சூர்யாதான் என்கிறார்கள்.
வணங்கான் படம்
வணங்கான் படத்தில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்தது. ராமேஸ்வரத்தில் 4 நாள் ஷூட்டிங்கும் சென்றார்.. அந்த படத்தை அவர்தான் தயாரிப்பதாகவும் இருந்தது.. ஆனால், திடீரென படத்தில தொடர முடியாது என்று சொல்லிவிட்டார்.. காரணம், 10 நாள் படப்பிடிப்பு நடந்தும்கூட, திரைக்கதையை இயக்குனர் சூர்யாவிடம் சொல்லவேயில்லையாம்.. இதனால், அந்த படத்திலிருந்து சூர்யா விலகிவிட்டதாக கூறினார்கள்.
எகிறும் எதிர்பார்ப்பு
இப்போதும் அதேபோல, வாடிவாசல் கதையை வற்புறுத்தி சூர்யா கேட்டும், வெற்றிமாறன் சொல்லவில்லையாம். அதாவது, பவுண்டட் ஸ்கிரிப்ட்டை சூரியாவிடம் இன்னும் வெற்றிமாறன் ஒப்படைக்கவில்லையாம்.. இதன்காரணமாகத்தான், சூர்யா கால்ஷீட் கொடுக்க தயங்கி வருவதாக சொல்கிறார்கள்.
எப்போதுமே ஹீரோக்களிடம் பெரிய டைரக்டர்கள் ஸ்ரிக்ப்ட் தர மாட்டார்கள்.. ஏனென்றால், அவ்வப்போது தங்களுககு வரும் கற்பனை திறனை வைத்து, அதற்கேற்ப ஸ்கிரிப்ட்களை மாற்றி எடுப்பார்கள். எனவே, வாடிவாசல் படம் இன்னும் ஆரம்பமாகாமல் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications