அச்சச்சோ.. ஸ்வேதாவும் சஞ்சயும் கையும் களவுமா...சீ...அசிங்கம்!
சென்னை: சன் டிவியின் நிலா சீரியல் பகல் நேர சீரியலில் ரொம்ப நல்லாருக்கு. இன்னிக்கு என்ன நடக்குமோன்னு ஆவலைத் தூண்டுவதா இருக்கு.
நிலாவின் காதலன் தன்னை கடத்தின ரவுடிகளிடம் இருந்து தப்பிச்சு வர்றான். வந்த வேகத்துல நீலாம்பரியின் தங்கச்சி காரில் மோதி விழுந்திடறான்.
அவனை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயி வைத்தியம் பார்த்து, வீட்டுக்கு அழைச்சுட்டு வர்றா நீலாம்பரி தங்கச்சி. அதாவது சஞ்சயின் சித்தி.
இங்க தன் வீட்டிலிருந்து நிலாவை வெளியில அழைச்சுக்கிட்டு போறாங்க நீலாம்பரி. பாதியில போன் வர கார்த்திக் போன் பண்றான்னு நிலா சொன்ன உடனேயே நீலாம்பரிக்கு அதிர்ச்சி.
நிலா நான் கார்த்திக் ரூமுக்கு போறேன் ஆன்ட்டி..அவன் என்னை அங்க வர சொல்லி இருக்கான்னு நிலா சொல்லிட்டு இறங்கறா. நீலாம்பரி கார்த்திக் எப்படி தப்பிச்சான்னு நினைச்சுகிட்டே வண்டியை வீட்டுக்குவிட சொல்றா.
வீட்டுல வந்த கார்த்திக்கும், நீலாம்பரி தங்கச்சியும் கீழே இறங்கி வர்றாங்க.இப்போதான் நிலா காதலிக்கறா கார்த்திக்கைன்னு நீலாம்பரி தங்கச்சிக்கு தெரியுது.
இப்போதாங்க முக்கியமான விஷயம்.. இந்த சஞ்சய் பையன் இருக்கானே.. அவன் ஒரு பிளே பாய்னு சொல்லி இருக்கோம்ல.. ஸ்வேதாவை காதலிக்கற மாதிரி நடிச்சு வீட்டுக்கு வந்திருகான். ஒரு அரைகுறை டிரஸ்ஸை எடுத்துக்கிட்டு.
ஸ்வேதாவும் அந்த டிரஸை போட்டுக்கிட்டு வர, ஸ்வேத் நீ ஃபிரஷான போக்கே மாதிரி இருக்கே.. நீ எனக்கு கிடைச்ச டைமண்ட் இப்படி எல்லாம் சொல்லி பெட் ரூமுக்கு அழைச்சுட்டு போயிடறான்.
அங்கே பெட்டில் ரெண்டு பேரும் நெருக்கமா படுத்துகிட்டு, லிப்லாக்கில் இருக்க, கதவைத் திறந்த அப்பா படு ஷாக். சரியான அடி சஞ்சய்க்கு.. பின்னால வந்த அம்மாவும், மாமாவும் கூட படு ஷாக். அம்மா ஸ்வேதாவை அடிக்க, அப்பா சஞ்சயை துவைத்து எடுத்து அனுப்பறார்.
அச்சச்சோ பஞ்சுக்கு பதிலா பட்டர் பிஸ்கட் மாட்டிக்கிட்டானே..