Tamil Selvi Serial: இதுக்கெல்லாம் இன்னுமா சிரிக்கறாங்க? கதையை மாத்துங்க பாஸ்!
சென்னை:சன் டிவியின் தமிழ்ச்செல்வி சீரியலில் சரவணன் படிக்காதவன். தமிழ்க்கல்வி படித்தவள்.இருவருக்கும் கல்யாணம் பேசி முடிக்கறாங்க. தமிழ்ச்செல்விக்கு முறை மாமாதான் சரவணன்
இதனால், அவளின் முழு விருப்பத்தோடுதான் இந்த கல்யாணம் நிச்சயமாகி இருக்கிறது. இவர்களுக்கு நடுவில் தமிழ்ச்செல்வி படிக்கப் போன இடத்தில் அமுதன் என்பவன் ரவுடிகளிடம் இருந்து இவளை காப்பாற்ற, அமுதனுக்கு தமிழ்ச்செல்வி மேல் ஆசை வந்துருது.
அவளை தேடி அவளது சொந்த ஊருக்கே வந்துடறான்.கடைசியில் அமுதன் சரவணன் தமிழ்ச்செல்வி குடும்ப டாக்டரின் அண்ணன் மகன்தான் அமுதன். சரவணனுக்கும், தமிழ்ச்செல்விக்கும் கல்யாணம் முடிவாகி பத்திரிகையும் வந்தாச்சு.

சித்தி அமுதன்
டாக்டர் சித்தப்பா அமுதா .இது சரியில்லை.அந்த குடும்பம் இந்த ஊரில் பெரிய குடும்பம். அவங்க வீட்டு பெண்ணுக்கு சரவணன் கூட கல்யாணம் முடிவாகிருச்சு. இந்த மாதிரி நினைப்பு உனக்கு வர கூடாதுன்னு சொல்லியும், சித்தி அமுதனுக்கு நம்பிக்கை கொடுக்கறாங்க.காரணம், பிள்ளை இல்லாமல் அமுதனை வளர்த்த தன்னுடன் அமுதன் இருக்க வேண்டும் என்றால், அவனது ஆசையை நிறைவேற்றி வச்சால்தான் அது நடக்கும்னு கணக்கு போடறாங்க.

சரவணன் அமுதன்
அமுதனை கண்டாலே சரவணனுக்கு பிடிக்கலை. காரணம் என்னன்னு பார்த்தால்,கோயிலில்,அமுதன் படிக்காத உங்கள் மாமனை கல்யாணம் செய்துக்கறதை விட, படிச்ச என்னை கல்யாணம் செய்துக்கோங்கன்னு கேட்டதை சரவணன் பார்த்துடறான். அப்போதில் இருந்தது அமுதனை அவனுக்கு பிடிக்கலை. வேண்டும் என்றே வீட்டுக்கு வருவது, தமிழ்ச்செல்விக்கு கலெக்டருக்கு படிக்க புத்தகம் வாங்கிக் கொடுப்பது என்று இருக்க, சரவணனுக்கு பிடிக்கலை.

தமிழ் சரவணன்
சரவணனும், தமிழ்ச்செல்வியும் வண்டியில் டெயிலர் கடைக்கு துணி தைக்க குடுக்க போக என்று கிளம்புகிறார்கள். அப்போது பாதி வழியில் டயர் பஞ்சர் ஆகிட, அங்கே வருகிறான் அமுதன் தனது காரில். உடனே நல்லவன் மாதிரி இறங்கி வந்து என்னாச்சுன்னு கேட்க, நடந்ததை சொல்கிறாள் தமிழ்ச்செல்வி, சரி வாங்க காரில் கொண்டு போயி விடறேன்னு சொல்றான். சரவணன் மறுக்க, அவனை சமாதானப் படுத்தி அழைச்சுட்டு போறா தமிழ்ச்செல்வி.

எலுமிச்சை தண்ணீர்
பெரிய ஹோட்டலுக்கு அழைச்சுட்டு போயி, அசத்தி விடுகிறான்.அங்கு ஸ்பூனில் சாப்பிட தெரியாமல் சரவணன் அவஸ்தைப் பட, மாமா கையில எடுத்து சாப்பிடுங்க மாமான்னு சொல்லி, தானும் கையில் சாப்பிடுகிறாள் தமிழ்ச்செல்வி. அடுத்து, கை கழுவும் எலுமிச்சை தண்ணீர் பவுலில் இருக்கும் தண்ணீர் எலுமிச்சை ஜூஸ் என்று சரவணன் குடித்துவிட, இதை எதுக்கு குடிக்கறீங்க,அது கை கழுவ வச்சு இருக்கும் தண்ணீர்னு அமுதன் சொல்ல, அனைவரும் சிரிக்கிறார்கள்.
அவமானத்தில் எழுந்து கோபத்தோடு போகிறான் சரவணன். ஒண்ணு புரிஞ்சுக்கோங்க நாட்டில் இப்போது எல்லாம் யாரும் அப்படி கேலி கிண்டல் பண்றதில்லை. அந்த அளவுக்கா மனிதர்களுக்கு மனிதாபிமானம் அத்து போச்சு? கதையை கொஞ்சம் அண்மை காலத்துக்கு கொண்டு வாங்க பாஸ்!
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications