சரஸ்வதிக்காக வீட்டுக்கு வந்த லெட்டர்.. காணாமல் போன சொந்தம் மீண்டும் வந்தது.. இனி இதுதான் கதையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் பிப்ரவரி 22ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம். அதில் ஜெயிலிலிருந்து வெளியே வந்த சரஸ்வதி மீண்டும் மீண்டும் தான் ஜெயிலில் இருப்பது போன்று நினைத்து பயப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

அதே நேரத்தில் சரஸ்வதி வீட்டில் இருந்து பல மாதங்களுக்குப் பிறகு இப்போது அவருடைய பாட்டி சரஸ்வதியை பார்க்க வந்திருக்கிறார். அடுத்ததாக வளைகாப்பு வைக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இன்று என்ன நடந்தது என்பது விரிவாக பார்க்கலாம்.

tamilum saraswathiyum serial february 22th episode full update

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் சரஸ்வதியை தமிழ் பார்க்குக்கு அழைத்து வருகிறார். அப்போது அங்கு ஒரு பெண் போலீசை பார்த்த சரஸ்வதி பயந்து நடுங்குகிறார். அதற்கு தமிழ் அவர்களும் ஒரு குழந்தைக்கு தாய் தான் அப்படின்னு நினைச்சுக்கோ என்று சரஸ்வதிக்கு ஆறுதல் கூறுகிறார். பிறகு கொஞ்ச நேரம் இங்கு இரு வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு தமிழ் கிளம்பி போகிறார்.

அப்போது சரஸ்வதி பாட்டி அந்த பார்க்குக்கு வர இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இப்போதான் பயப்படாம இருக்கணும் நாங்க எல்லாரும் உனக்கு சப்போர்ட்டாக இருப்போம் என்று ஆறுதல் சொல்லிவிட்டு இருக்கிறார். பிறகு தமிழ் வந்ததும் அனைவரும் வீட்டிற்கு போகிறார்கள். அப்போது வீட்டில் பாட்டி எல்லோரிடமும் நலம் விசாரிக்கிறார். அது மட்டும் இல்லாமல் சரஸ்வதிக்கு வளைகாப்பு வைக்கணும் அப்போ நாங்க கண்டிப்பா வருவோம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

tamilum saraswathiyum serial february 22th episode full update

அடுத்த கட்டத்தில் சரஸ்வதிக்கு ஒரு லெட்டர் வந்துள்ளதாக எல்லோரும் சொல்கின்றனர். அது என்னவென்று பார்க்கும்போது ஹால் டிக்கெட் வந்திருக்கிறது. பிறகு நான் எக்ஸாமுக்கு படிக்க வேண்டும் என்று சரஸ்வதி இரவு நேரத்தில் படித்துக் கொண்டிருக்கிறார். அப்போது தமிழ் ரொமான்ஸ் செய்து கொண்டு வயிற்றில் இருக்கும் பாப்பாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அதனால் அடுத்த நாள் காலையில் சரஸ்வதி லேட்டாக எழுந்து கீழே வருகிறார்.

வந்ததும் கோதையிடம் சாரி அத்த லேட் ஆயிட்டு என்று சொல்ல, அதற்கு கோதை அதெல்லாம் பரவாயில்லை உன்னை யார் இப்பவே எந்திரிக்க சொன்னா? உன்ன ரெஸ்ட் எடுக்க தானே நாங்கள் சொல்றோம் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் நான் தான் முன்னாடி லூசு தனமா படிச்ச பொண்ணு தான் வேணும்னு எதிர்பார்த்தேன். ஆனா இப்போ நல்ல படிச்சா மட்டும் நல்ல குணம் வந்துவிடாதுனு புரிஞ்சுகிட்டேன். முக்கியமா நல்ல குணம் தான் வேணும் என்று எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+