கோதை செய்த உதவியை போட்டுக் கொடுத்த அர்ஜுன்... தமிழ் சொன்ன வார்த்தை... கலங்கி நிற்கும் குடும்பம்
சென்னை: தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து ஆறாம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் தமிழ் குடும்பத்தை பிரிக்க வேண்டும் என்பதற்காக தனக்கு உதவி செய்த கோதையை குடும்பத்தினரிடம் அர்ஜுன் மாட்டி விடுகிறார்.
அதற்கு யாரும் எதிர்பார்க்காத பதிலை தமிழ் சொல்ல மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் நிற்கின்றனர். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அர்ஜுனின் தில்லாலங்கடி வேலையை கண்டுபிடித்த மேக்னாவும் தமிழும் அர்ஜுனை போலீசில் பிடித்துக் கொடுத்திருந்தனர். அதோடு அர்ஜுனுக்கு ஜாமீன் கிடைக்காது என்று சொல்லி இருந்த நிலையில் அவர்களிடம் ராகினி நான் இனி என்னுடைய புருஷனை ஜெயிலில் இருந்து வெளியே கொண்டு வந்த என்னுடைய கம்பெனியை நானே எடுத்து நடத்த வேண்டும் என்று சபதம் போட்டிருந்தார்.
இந்த நிலையில் ராகினி கதறி அழுவதையும் குழந்தையை சரியாக பார்த்துக் கொள்ளாமல் இருப்பதையும் தெரிந்து கொண்ட கோதை ராகினிக்கு உதவி செய்வதற்காக அர்ஜுனை வெளியே எடுப்பதற்கு சம்மதித்திருந்தார். அதோடு தன்னுடைய குடும்பத்திற்கு தெரியாமல் கோதை வக்கீல் இடம் பேசி அர்ஜுனுக்கு எதிராக வாதாடாமல் தடுத்து நிறுத்தி அர்ஜுனை வெளியே வர வைத்திருந்தார்.

ஆனால் அர்ஜுன் வெளியே வந்ததும் தன்னை வெளியே கொண்டு வந்தது கோதை என்றும் அதுவும் தமிழுக்கு தெரியாமல் தான் கோதை தனக்கு உதவி செய்திருக்கிறார் என்பதை தெரிந்து கோதையை எப்படியாவது குடும்பத்தினர் முன்பு அவமானப்படுத்தி குடும்பத்தை பிரிக்க வேண்டும் என்று சூழ்ச்சி செய்து தன்னுடைய மகளின் பெயர் சூட்டு விழாவிற்கு மொத்த குடும்பத்தையும் ராகினியை வைத்து கூப்பிட வைத்திருந்தார்.

ராகினி வீட்டிற்கு வந்து கூப்பிட்ட போது கூட எல்லோரும் நாங்க வர முடியாது என்று சொல்லி இருந்த நிலையில் தமிழ் மட்டும் போயிட்டு வருவோம். ராகினி நம்ம விட்டு பொண்ணு என்று சென்டிமென்ட்டாக பேசியிருந்தார். இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் எல்லோரும் ராகினியின் வீட்டிற்கு வருகின்றனர்.
அப்போது தமிழின் குடும்பத்தினர் வருவதை தெரிந்து கொண்டு அர்ஜுனின் அம்மா பிரச்சனை செய்ய அதற்கு அர்ஜுன் எப்படியும் இன்னைக்கு கோதையோட இரண்டு பசங்களே கோதையை அவமானப்படுத்த போறாங்க, அதற்கான வேலையை நான் பார்த்தாச்சு என்று சொல்லி இருந்தார். பிறகு தமிழ் குடும்பத்தினர் எல்லாரையும் கூப்பிட்டு வைத்து அர்ஜுன் நீங்க எல்லாரும் பங்ஷனுக்கு வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம்...

தமிழ் சார் என்னை ஜெயிலுக்கு அனுப்பிட்டாரு, அதனால என்னால வெளியே வர முடியாதோனு நான் ரொம்ப பயந்துட்டேன். ஆனா அத்தையோட தயவால்ல நான் வெளியே வந்துட்டேன் என்று எல்லார் முன்பும் போட்டு உடைக்க, அதைக் கேட்டு வசு,சரஸ்வதி என எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது கார்த்திக் கோபமாகி பார்த்தீங்களா அண்ணே இந்த கிரிமினல்ல அம்மா தான் சப்போர்ட் பண்ணி இருக்காங்க என்று சொல்ல, அதற்கு தமிழ் அமைதியா இரு...

என்னதான் இருந்தாலும் ராகினி நம்ம விட்டு பொண்ணு. அதனால அவங்க பக்கமும் நியாயம் இருக்கின்றது, நான் புரிஞ்சுகிட்டேன். எங்க அம்மா செஞ்ச உதவி உனக்காக இல்ல, ராகினி நல்லா இருக்கணும் என்கிறதுக்காக தான் இப்படி பண்ணி இருக்காங்க. இதுல எந்த தப்புமே இல்லையே என்று சொல்லி அர்ஜுன் குடும்பத்திற்கு தமிழ் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications