Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜோதிடர் ராகிணியிடம் சொன்ன ரகசியம்.. வசமாக சிக்கிய அர்ஜுன்.. கடைசியில் தமிழ் இப்படி பண்ணிட்டாரே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் மார்ச் 19ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் தமிழை மாட்டி விட வேண்டும் என்று மறைந்திருந்து நாடகம் போட்ட அர்ஜுன் தமிழிடம் சிக்கி இருக்கிறார்.

அதே நேரத்தில் ராகிணி அர்ஜுன் பற்றி விசாரிக்க போன இடத்தில் ஜோதிடர் ராகிணிக்கு சில விஷயங்களை சொல்கிறார். மேலும் இன்றைய எபிசோடில் சில சுவாரசியமான காட்சிகள் ஒளிபரப்பானது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

tamilum saraswathiyum serial march 19th episode and promo full update

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் தமிழிடம் சரஸ்வதி நீங்கதான் அர்ஜுனை மறைச்சு வச்சிருக்கீங்களா? அவனை என்ன செய்யப் போறீங்க என்று கேட்க அதற்கு கோபமான தமிழ் நீயே என் மேல இவ்வளவுதான் நம்பிக்கை வச்சிருக்கியா? நான் அவனை எதுவும் செய்யல... அன்னைக்கு உண்மையை தெரியனும் என்பதற்காக தான் அவனல கடத்தி அடிச்சேன்.

ஆனா இன்னைக்கு அவன் பிசினஸுக்கு இடைஞ்சலா இருக்கான்னு அவனை கடத்துவேனா? என்ன நீ இவ்வளவுதான் புரிஞ்சிகிட்டியா? ஆனால் எங்கேயோ மறைஞ்சிருந்து தான் அவன் ஆட்டம் போட்டுட்டு இருக்கிறான்.. நான் அவனை பத்தி பேசியதால் என்னை மாட்டி விடுவதற்காக அவன் இப்படி பிளான் பண்ணிக்கிட்டு இருக்கான். ஆனால் அவனை நான் கண்டுபிடிக்காமல் விடமாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

மறுபக்கத்தில் ராகிணி தன்னுடைய மாமியாரோடு ஒரு ஜோசியக்காரர் ஒருவரை பார்க்க வந்திருக்கிறார். அவரிடம் அர்ஜுன் காணாமல் போன விஷயத்தை சொல்லி அர்ஜுன் நிலைமை இப்ப எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள் என்று கேட்கிறார். அதற்கு அர்ஜூன் அம்மா எங்களுக்கு ஒருத்தன் மேலே தான் சந்தேகமா இருக்கு. அவன் தான் கடத்தி வச்சிருப்பானு எங்களுக்கு தோணுது எங்க பையனோட நிலைமை எப்படி இருக்குன்னு பார்த்து சொல்லுங்க என்று சொல்ல அதற்கு ஜோதிடர் உங்க கணவருக்கு எதுவும் ஆகாது.

அவருடைய உயிருக்கு எந்த பிரச்சனையும் இல்ல நல்லபடியாத்தான் இருக்கிறார் என்று சொல்கிறார். அடுத்த கட்டத்தில் பரமு அர்ஜுனை பார்ப்பதற்காக சாப்பாடு வாங்கிக் கொண்டு கிளம்ப அதை ஃபாலோ பண்ணி மீண்டும் தமிழும் நமச்சியும் பரமு பின்னாடியே வருகின்றனர். ஆனால் இந்த முறை பரமு அவர்களை பார்க்கவில்லை. அதோடு அர்ஜுன் இருக்கும் வீட்டு வாசலில் நின்று பரமு கத்த அர்ஜுன் வெளியே வந்து கதவை திறந்ததும் தமிழும் நமச்சியும் பார்த்து விடுகிறார்கள்.

பிறகு ஜன்னல் வழியாக இவர்கள் இருவரும் அந்த வீட்டிற்குள் என்ன பேசுகிறார்கள் என்பதை தமிழும் நமச்சியும் கவனிக்கிறார்கள். அப்போது அர்ஜுன் நீங்க வந்ததை அந்த தமிழ் பாக்கலயே என்று கேட்க அதற்கு பரமு, இல்லை நான் அவங்கள ஏமாற்றி விட்டேன். ராகிணி தான் வீட்ல ரொம்ப பீல் பண்ணிட்டு இருக்கா என்று சொல்ல அதற்கு அர்ஜுன் ராகிணியை நல்லபடியா பார்த்துக்கோங்க என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் நமச்சியும் தமிழும் இவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று வெளியே பேசிக் கொண்டிருக்கின்றனர். அதோடு அர்ஜுனும் பரமுவும் சாப்பிடும் போது ஹாலிங் பெல் அடிக்க இவர்கள் இருவரும் என்னவென்று வெளியே வந்து பார்க்கும் நேரத்தில் தமிழ் அர்ஜுனுடைய போனை எடுத்துக் கொண்டு ஓடி போய் விடுகிறார்கள்.

இதனால் அர்ஜுன் யாருக்கோ போன் பண்ண முடியாமல் திணறிக் கொண்டிருக்க வீட்டு கதவையும் பூட்டி சாவியை தமிழ் எடுத்து விடுகிறார். இதனால் வீட்டுக்குள் அர்ஜுனும் பரமுவும் மாட்டிக் கொண்டு தவிக்கிறார்கள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+